News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து ஒன்பது பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதற்கு பதிலடி கொடுப்பதற்குத் திட்டமிட்ட பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தப்பட்டு, விமானி கைது செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து போர் தீவிரம் அடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலுக்கு பதிலடியாக தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையில் 9 இடங்களில் இருந்த 21 பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதலுக்கு ஹேமர் (Highly Agile and Manoeuvrable Munition Extended Range) எனப்படும் இது, ரஃபால் போர் விமானங்களுக்கு உருவாக்கப்பட்ட உயர்தர துல்லியத் தாக்கும் குண்டுகளாகும். காற்றிலிருந்து தரையில் தாக்கும் ஆயுத அமைப்பாகும். இதன் தாக்குதல்தூரம் 70 கிலோமீட்டர் வரை உள்ளது. இது குண்டுகள் மற்றும் பல்வேறு வழிநடத்தப்படும் அமைப்புகளுடன் இணைக்கவும் முடியும்.

பிரான்ஸ் நாட்டின் ஏவுகணை, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான சாஃப்ரான் (Safran) உருவாக்கிய ஹேமர் ஆயுத அமைப்பு பல்துறை பயன்பாட்டிற்கு ஏற்றதாகும். இது நடுத்தர தூர மற்றும் பலவகை இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. சாஃப்ரான் குழுமத்தின் தகவலின்படி, இந்த அமைப்பு தானாக இயங்கக்கூடியது ஆகும். இது மேலும் கரடுமுரடான நிலப்பரப்பில் குறைந்த உயரத்தில் இருந்தும் ஏவ முடியும். இந்தியா கடந்த சில ஆண்டுகளில் இதைப் போன்ற பல ஹேமர் ஆயுதங்களை வாங்கியுள்ளது.

நீண்டதூர ஆழமான தாக்குதல்களுக்காக வடிவமைக்கப்பட்ட, மறைந்து தாக்கும் திறன் கொண்ட வான்வழி ஏவுகணை ஆகும். ஸ்கால்ப்-ஈஜி (SCALP-EG – Système de Croisière Autonome à Longue Portée — Emploi Général), பிரிட்டனில் ஸ்டோர்ம் ஷேடோ என்று அழைக்கப்படுகிறது. இதனை இரவு நேரங்களிலும், அனைத்து வானிலை நிலைகளிலும் இயக்க முடியும்

ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனமான எம்.பி.டி.ஏ. (MBDA) தயாரிக்கும் இந்த ஏவுகணை 450 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. விமானத்திலிருந்து ஏவப்படும்போது, தாழ்வாக பறக்கும் திறன் காரணமாக இதை கண்டுபிடிப்பது கடினம். இதன் மேம்பட்ட மற்றும் மிகவும் துல்லியமான அமைப்பு, வழிகாட்டி அமைப்பு (Inertial Navigation System – INS), ஜி.பி.எஸ். அமைப்பு (Global Positioning System – GPS) மற்றும் நிலப்பரப்பு குறிப்பீடு (terrain referencing) ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம் பதுங்கு குழிகள் மற்றும் வெடிமருந்து கிடங்குகளில் ஊடுருவ முடியும்.

மீட்டியோர் என்பது வான் ஏவுகணை (Beyond Visual Range Air-to-Air Missile – BVRAAM) அமைப்பு ஆகும். அடர்த்தியான போர்ச் சூழல்களிலும் திறம்பட செயல்படக்கூடியது. அதன் உற்பத்தியாளரான எம்.பி.டி.ஏ.வின் (MBDA) கூற்றுப்படி, இந்த ஏவுகணையின் திட எரிபொருள் ‘ராம்ஜெட்’ எஞ்சின் இலக்கை இடைமறிக்கும் வரை தொடர்ந்து உந்துசக்தியை அளிக்கிறது. இதனால் எந்த வான்-வான் ஏவுகணை அமைப்பிலும் இல்லாத அளவுக்கு No Escape Zone இதற்கு உள்ளது.

இந்த அதிவேக ஏவுகணைகள் 3 பாதுகாப்பு சேவைகளிலும் செயல்பாட்டில் உள்ளன. இவை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் ரஷ்யாவின் NPO Mashinostroyeniya ஆகியவற்றின் இடையேயான கூட்டு முயற்சியான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸால் உருவாக்கப்படுகின்றன. பிரம்மோஸ் ஏவுகணைகள் பயணத்தின்போது மாக் 3 வேகத்தில் செயல்படுகின்றன. குறைந்த விமான நேரம், இலக்குகளின் குறைந்த பரவல், விரைவான இலக்கு ஈடுபடுத்தல் நேரம் மற்றும் இடைமறிக்க முடியாத தன்மை ஆகியவற்றை உறுதி செய்கிறது.  

இந்த ஏவுகணை Fire and Forget Principle என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது. இலக்கை நோக்கிச் செல்லும் வழியில் பல்வேறு வகையான பயண முறைகளை மேற்கொள்கிறது. அதன் இணையதளத்தின்படி, இதன் பயண உயரம் 15 கி.மீ வரை இருக்கலாம் மற்றும் இலக்கை நெருங்கும் உயரம் 10 மீட்டர் வரை குறைவாக இருக்கலாம். இந்த ஏவுகணை 200-300 கிலோ எடையுள்ள வழக்கமான வெடிபொருளை சுமந்து செல்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் தரை மற்றும் கப்பல் தாக்குதல்களுக்கு சில பிரம்மோஸ் ஏவுகணைகளின் தூரம் கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று அதிகாலை 1 முதல் 1.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பாக். ஏராளமான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியதாகவும், இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாக அந்த அச்சுறுத்தல்களைக் கண்காணித்து அழித்ததாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவின் முக்கிய வான்வழி ஏவுகணை அமைப்புகள் S-400 டிரயம்ஃப், பாரக்-8 மத்திய தூர ஏவுகணை (MRSAM), மற்றும் இந்தியா தயாரித்த ஆகாஷ் ஏவுகணைகள் வியாழக்கிழமை பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களை தடுக்க இந்திய விமானப் படை செயல்படுத்திய Counter-UAS Grid மற்றும் பிற வான்வழி பாதுகாப்பு அமைப்புகளில் முக்கிய பங்கு வகித்தன.

நேற்று இரவு 9 அளவில் பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் முயற்சி செய்தது. ஆனால் இந்திய ராணுவம் அதனை முறியடித்து தோல்வியடைய செய்தது. இந்த திட்டத்தில் அதிநவீன S-400 வான்பாதுகாப்பு அமைப்பு பயன்படுத்தப்பட்டது.

இதனையடுத்து ஜம்மு விமான நிலையம், பஞ்சாப் பதன்கோட் விமான தளம் ஆகிய இடங்களும் இலக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு பாகிஸ்தான் இராணுவம் டிரோன் தாக்குதலை நடத்தியது. அப்போது இந்திய விமானப்படை உடனடியாக பதிலடி தாக்குதலை நிகழ்த்தியது. இதற்கும் S-400 வான்பாதுகாப்பு அமைப்பு முக்கிய பங்கு வகித்தது.

இந்த தாக்குதல்களின் மையமாக இருந்த பாகிஸ்தானின் JF-17 போர் விமானம், இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றபோது இந்திய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது அப்போது பாகிஸ்தானின் விமானியின் உயிருடன் இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்திய பாதுகாப்பு படையின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் ராணுவம் அதனுடைய தளபதியை அதிரடியாக பதவியில் இருந்து தூக்கி உள்ளது கடந்த இரண்டு நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் ஏகப்பட்ட பின்னடைவுகளை சந்தித்துவருகிறது. போரை முடிவுக்குக் கொண்டுவர ஐ.நா. மற்றும் அமெரிக்காவின் உதவியை பாகிஸ்தான் நாடும் நிலைக்கு வந்திருக்கிறது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link