News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக, தி.மு.க. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காசோலையாக வழங்கினர்.

 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உலுக்கி எடுத்த மிக்ஜாம் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர், மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக காசோலைகளை வழங்கி வருகின்றனர்.

 

அந்த வகையில் இன்று (டிச. 16) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன்  சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத முழு சம்பளத்தை காசோலையாக வழங்கினார்.

 

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (டிச.16) சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தனர். அப்போது மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு, 30 தி.மு.க. மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகையை காசோலையாக வழங்கினார்கள். இந்த சந்திப்பின் போது கனிமொழி எம்.பி., திருச்சி சிவா எம்.பி., டி.ஆர்.பாலு எம்.பி., கனிமொழி சோமு எம்.பி., உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

மேலும் இயக்குனரும் நடிகருமான அமீர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார்.

 

அதேபோல் மனித நேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.அப்துல் சமது மற்றும் நிர்வாகிகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (டிச.16) தலைமை செயலகத்தில் சந்தித்தனர். அப்போது மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link