Share via:
மாதவிடாய் நேரத்தில் நாப்கினுக்கு பதிலாக பயன்படுத்தப்படும் பொருட்களின் மென்சுரல் கப் எனப்படும் மாதவிடாய் குப்பிபும் ஒன்று. புனல் வடிவம் கொண்ட இதன் மூலம் மாதவிடாய் ரத்தத்தை சேகரிக்க பயன்படுகிறது.
பல்வேறு அளவுகளில் கிடைக்கும் மென்சுரல் கப்புகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆங்காங்கே நடத்தப்படுகிறது.
அந்த வகையில் சென்னையில் உள்ள – நந்தனத்தில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம், EnnVee Solutions Pvt Ltd, HLL Lifecare ல்டட் பிலிலி லிவீயீமீநீணீக்ஷீமீ லிtபீ இணைந்து மாதவிடாய் குப்பி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
இந்த விழிப்புணர்வு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு, மாதவிடாய் குப்பிகளை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தென்சென்னை எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மாநகர கமிஷனர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.