Share via:
![](https://tamilnewsnow.com/wp-content/uploads/2024/03/edappadi-2.jpg)
எல்லா தேர்தல்களிலும் முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவிப்பது ஜெயலலிதாவின்
பாணி. அந்த வகையில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடும்
16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்திருக்கிறார் அ.தி.மு.க. கழகப் பொதுச்
செயலாளர் எடப்பாடியார் பழனிசாமி.
அவர் வெளியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இதுதான்.
1. சென்னை
வடக்கு – ராயபுரம் மனோ
2. சென்னை
தெற்கு – ஜெயவர்தன்
3. காஞ்சிபுரம்
(தனி) – ராஜசேகர்
4. அரக்கோணம்
– ஏ.எல்.விஜயன்
5. கிருஷ்ணகிரி
– வி.ஜெயப்பிரகாஷ்
6. ஆரணி –
ஜி.வி.கஜேந்திரன்
7. சேலம்
– விக்னேஷ்
8. தேனி –
நாராயணசாமி
9. விழுப்புரம்
(தனி)- ஜெ.பாக்யராஜ்
10. நாமக்கல்
– எஸ்.தனிமொழி
11. ஈரோடு:
ஆற்றல் அசோக்குமார்’
12. கரூர்:
கே.ஆர்.எல்.தங்கவேல்
13. சிதம்பரம்
(தனி): சந்திரகாசன்
14. நாகப்பட்டினம்
(தனி)- சுர்சுத் சங்கர்
15. மதுரை:
பி.சரவணன்
16. ராமநாதபுரம்:
பா.ஜெயபெருமாள்
கூட்டணி குறித்து பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “மக்களவைத் தேர்தலில்
அதிமுக கூட்டணி அபார வெற்றி பெறும். அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடியுள்ளது.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய
தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் அறிக்கையை விரைவில்
எதிர்பார்க்கலாம்” என்றார்.