News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால், வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் மிக கனமழையை  எதிர்பார்க்கலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

 

சென்னையில் கடந்த மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது . அதில் 2 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. நவம்பர் மாதம் பிறந்த பிறகு மழை பெரிய அளவில் பெய்யவில்லை. இப்போது மீண்டும் மழை தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று (11/11/2024)இரவு முதல் மழை பெய்ய தொடங்கியது.

 

நேற்று (11/11/2024)இரவு பெய்த மழை தொடர்ந்து விடிய விடிய இன்று (12/11/2024)காலை வரை தொடர்ந்தது.

 

சென்னையில்  நேற்று இரவு விட்டு விட்டு பெய்த மழையால்  ஒருசில இடங்களில் மழைநீர்  தேங்கி வெள்ளக்காடாக  காட்சியளிக்கிறது.

 

சென்னையில்  இன்று (12/11/2024) தொடர் மழையால் மாவட்ட ஆட்சியர் மூலம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது .

 

இந்த நிலையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

 

சென்னையில் 2024ன் வழக்கமான வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது என்று சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளார்.

 

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இந்த மழை பெரும்பாலும் விட்டு விட்டு பெய்வதற்கான வாய்ப்பு தான் அதிகம் என வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link