News

மோடியை வரவேற்பாரா செங்கோட்டையன்..? எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி

Follow Us

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139  பேர் இஸ்ரேலியன் கொல்லப்பட்டனர் .

இதை தொடர்ந்து இஸ்ரேலில் இருந்து  251 பேரை பணய கைதிகளாக காசா  முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றனர் .  அதையடுத்து  ஹமாஸ் ஆய்தக்குழு மீது போர் அறிவித்த  இஸ்ரேல் 117   பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.

அதை தொடர்ந்து ஹமாஸ்  ஆயுதக்குழுவினர்களால்  கடத்தப்பட்டு கொல்லப்பட்ட  பணய  கைதிகளின்  உடல்களும்  மீட்கப்பட்டுள்ளன. ஆனால் ,  101  இஸ்ரேலியர்கள்  ஹமாஸ்  வசம்  பணய  கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்தது .இதில்  பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது .

இதை தொடர்ந்து காசா முனை கான் யூனிஸ் நசிரத் அகதிகள் முகாம் பகுதிகளில் இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதல்களில் மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர் பலர் காயமடைந்தனர் இது காசா மக்களை சோகத்தில் ஆழ்த்தியது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link