Share via:
ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் கூட நடிகை ஸ்ரேயா சரண் மிகவும் கவர்ச்சியான போட்டோ ஷூட்டை நடத்தி ரசிகர்களை திணறடித்துள்ளார்.
நடிகை ஸ்ரேயா சரணை தமிழ், தெலுங்கு என எந்த ரசிகர்களும் மறந்திருக்க வாய்ப்பில்லை. ரஜினி, விஜய், விஷால் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்திருந்தார். அதைத்தொடர்ந்து திருமணம், குழந்தை என பிசியான அவர் மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் தமிழில் இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில் சண்டக்காரி திரைப்படத்தில் நடித்துள்ளார் ஸ்ரேயா. இத்திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் 2024ம் ஆண்டு ரிலீசாக உள்ளது. அதே நேரத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசுரன் என்ற தமிழ் திரைப்படமும் ரிலீசாக உள்ளது.
வருகிற டிசம்பர் மாதம் 5ம் தேதி ஒரு தெலுங்கு படமும், 19ம் தேதி நரகாசுருடு என்ற திரைப்படமும் வெளியாக உள்ளது.
இந்நிலையில் நடிகை ஸ்ரேயா சரண் தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறது. அட என்னப்பா இவங்க இடை மட்டும் எடையே கூடமாட்டேங்குது? என்கிறார்கள் ரசிகர்கள்.

