Share via:
5ஜி இணைய சேவை சர்வதேச தரவரிசையில் இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை பின்னுக்கு தள்ளிய இந்தியா 47வது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் அதிவேக இணையசேவையான 5ஜி சேவையை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தின. இதன் மூலம் இந்தியாவின் இணைய வேக செயல்திறன் 3.59 மடங்கு அளவிற்கு அதிகரித்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதன் தேர்வை அதிகப்படுத்திள்ளது.
அதன்படி கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதத்தில் வினாடிக்கு 13.87 எம்.பி.யாக கணக்கிடப்பட்டிருந்த சராசரி பதிவிறக்க வேகம் கடந்த ஆகஸ்டு (2023) மாதத்தில் வினாடிக்கு 50.21 எம்.பி.யாக அதிகரித்துள்ளது.
இதன்மூலம் ஸ்பீட்டெஸ்ட் குளோபல் இண்டெக்ஸ் பரிசோதனை குறியீட்டில் 119வது இடத்தில் இந்தியா இருந்து வந்த நிலையில், தற்போது 72 இடங்களை கடந்து 42வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்தியா 47வது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், அடுத்ததாக மெக்சிகா 90வது இடத்திலும், துருக்கி 68வது இடத்திலும், இங்கிலாந்து 62வது இடத்திலும், ஜப்பான் 58வது இடத்திலும், பிரேசில் 50வது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 48வது இடத்திலும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘‘5ஜி சேவைக்கான சந்தாதாரர்கள் கணிசமாக உயர்ந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அதிக திருப்தியை தரும் 5ஜி சேவை அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் பயனர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்தியுள்ளது’’ என ஓக்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
