Share via:

திருமாவின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை முழுமையாக கைப்பற்றி
விஜய்யிடம் ஒப்படைப்பதற்கு ஆதவ் அர்ஜுனா செய்த முயற்சிகள் போதிய பலன் அளிக்கவில்லை.
இந்த நிலையில் இப்போது கேரளாவில் படு பாப்புலராக இருக்கும் வேடன் விடுதலை சிறுத்தைகள்
கட்சியில் இணைய இருப்பதாகவும் அவருக்கு கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி கொடுத்து தேர்தல்
பிரசாரம் செய்ய வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் திருமாவளவனின் சொத்து
மதிப்பு உயர்வும் கேள்வியாகியுள்ளது.
இந்த முயற்சிக்கு தமிழகத்திலும் பெரும் வரவேற்பு இருக்கும் என்று
தெரியவரவே விசிக நிர்வாகிகள் படு குஷியாக இருக்கிறார்கள். அதேநேரம், இதனை விசிகவின்
எதிர் வட்டாரமான பா.ம.க. கடுமையாகக் கண்டிக்கிறது.
அதாவது, ‘’தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக, திருமாவளவன் ‘வேடன்’
என்பவரைப் பயன்படுத்திக்கொள்ள திருமாவளவன் திட்டமிடுகின்றார். இதற்காக, ‘வேடனை’ வலிந்து
தொடர்புகொண்டு தமக்கு ஆதரவைத் தேடு முயற்சியில் இறங்கியுள்ளார், தனது அரசியல் மேடைகளில்
ஏறுமாறும் வலியுறுத்தி தரம் தாழ்ந்தவராக தன்னை முன்நிறுத்துகின்றார். வேடனை தனது கட்சியில்
இணைக்கும் முயற்சிகளிலும் ஈடுபடுகின்றார்.
திமுக ஆட்சியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்
படுகொலை செய்யப்பட்டது தொடங்கி, பலர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். சமீப ஆண்டுகளில்,
சாதிய ஆணவத்தினாலும் வெறுப்பினாலும் பல உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. படுகொலைகள் முதல்
வேங்கைவயல் கிராமத்தின் கொடூரம் வரை, அனைத்து சம்பவங்களிலும் திருமாவளவன் திமுகவிற்கு
ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றார். தமிழ்நாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ள சாதிய வன்மமானது
பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து வெளிப்பட்டு வருகின்றது.
திமுக ஆட்சியில் தலித் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்
பதியப்படும் வழக்குகள் அதிகரிக்கின்றன, ஆனால் தண்டனை பெறும் குற்றவாளிகளின் விகிதம்
தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகின்றது. சாதியத்திற்கு எதிரானவர் என்று கூறிக்கொண்டே,
சாதி வெறி கொண்ட திமுகவுடன் கூட்டணி அமைத்து, அக்கட்சியின் மீதான சாதியக் கறைகளைப்
போக்க திருமாவளவன் முயற்சிக்கின்றார்.
சாதிச் சேற்றிலே வேரூன்றிய விருட்சத்தின் நிழலிலே இளைப்பாறி பதவி
சுகம் காண்பதோ சாதியத்திற்கு எதிரான சமரா? தீராத கொள்ளை வேட்கை, சொத்து குவித்துச்
சூறையாடும் அடங்காத பேரவாவே, திமுக எனும் தேரில் திருமாவின் பயணத்திற்கான அச்சாணியாக
விளங்குகிறது? திருமாவிற்கு 2016 ஆம் ஆண்டில் சுமார் ரூ. 73.51 லட்சமாக இருந்த மொத்த
சொத்துக்கள், 2019 ஆம் ஆண்டில் ரூ. 92.44 லட்சமாக உயர்ந்து, பின்னர் 2024 ஆம் ஆண்டில்
ரூ. 2.44 கோடியாக கணிசமாக அதிகரித்துள்ளது. இது 2016 முதல் 2024 வரையிலான சுமார் எட்டு
ஆண்டுகளில் ஏறத்தாழ 232% வளர்ச்சியைக் காட்டுகின்றது.
2016 ஆம் ஆண்டில், ஒரு சபாரி கார் இருந்தன. ஆனால், 2024 ஆம் ஆண்டு
பிரமாணப் பத்திரத்தின்படி, ஐந்து வாகனங்கள் (மொத்த மதிப்பு ரூ. 86.8 லட்சம்) தன் சமூகத்தின்
விழியோரக் கண்ணீரையே தன் வாழ்வின் மூலமாக்கி, அவர்களின் துயரத்தையே தனக்கான சிம்மாசனத்தின்
படிக்கட்டுகளாக்கி, அரசியலில் ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் வணிகன் திருமா. முன்னர்
ஈழத்தமிழர்களின் சோகச் சந்தையில் தன் பிழைப்பைத் தேடினார். இன்று ஈழத்தாயின் வேடனை
வைத்துப் பிழைப்பு நடத்துவதற்கு துடிக்கின்றார். திருவன் திருமாவே அவன் எங்கள் வேடன்
காலத்தின் பெருவேடன் அவன்! அவன் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் அற்பப் பிழைப்பு உனக்கு
வேண்டாம்’’ என்று கண்டிக்கிறார்கள்.
