News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

வருகிற 2023ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை ஈட்டுவோம் என்ற இலக்கை அடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.


சென்னை பல்லாவரத்தில் சர்வதேச கேப்பிடல் ரேடியல் ஐ.டி. பூங்காவின் முதல் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார்.


அவர் கூறும்போது, ‘‘சர்வதேச கேப்பிடல் ரேடியல் ஐ.டி. பூங்காவின் முதல் கட்டிடத்தை சென்னையில் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி என்று கூறியதுடன் 2ம் கட்ட கேப்பிடல் ரேடியல் ஐ.டி. பூங்காவை தொடங்க தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று தெரிவித்தார்.


தமிழகத்தில் புதிய தொழில் புரட்சி நடந்து கொண்டிருப்பதாக கூறிய முதலமைச்சர், கடந்த 2 ஆண்டுகளாக ஏராளமான நிறுவனங்கள் வந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.


தமிழகத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புத்தாக்கம், புத்தக தொழில்கள் மற்றும் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையங்கள் துறைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் வருகிற 2023ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை ஈட்டுவோம் என்ற இலக்கை அடையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வர இருக்கிறார்கள் என்று பெருமிதத்துடன் பேசியது இளைஞர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link