Share via:
இந்தியாவில் இருந்து 41 தூதர்களை திரும்பிப் பெற்றுவிட்டதாக கனடா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இந்திய- கனடா நாட்டிற்கு இடையிலான மோதல் முற்றுகிறது என்பதை வெளிக்காட்டுகிறது.
கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டது முதல் இந்தியா &கனடா நாட்டுக்கு இடையிலான நட்புறவு கேள்விக்குறியானது. அதனால் கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்திய தூதரக உயர் அதிகாரி ஒருவர் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்திய அரசு, இந்தியாவில் பணியாற்றி வந்த கனடா தூதரக உயர் அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு பிறப்பித்தது. மேலும் அந்நாட்டினருக்கு விசா வழங்கவும் தடைவிதித்தது இந்தியா.
இந்த விவகாரம் தொடர்பாக இருநாட்டு நட்புறவில் விரிசல் ஏற்பட்டதன் விளைவாக தற்போது இந்தியாவில் இருந்து 41 கனடா தூதர்களையும் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் திரும்பப் பெற்றதாக கனடா நாட்டு வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, ‘‘ கனடா தூதர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை இந்தியாவில் இருந்து பாதுகாப்பாக புறப்படுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். தூதரக அதிகாரிகள் எங்கிருந்து வந்தாலும், எங்கு அனுப்பப்பட்டாலும் அவர்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தூர்கள் இருக்கும் நாட்டில் இருந்து பழிவாங்கப்படுதல் அல்லது கைது செய்யப்படுவார்கள் என்ற அச்சம் இல்லாமல் தங்கள் பணியை சிறப்பாக செய்ய சர்வதேச சட்டங்கள் அனுமதிக்கின்றன என்று தெரிவித்தார்.
மேலும் இந்தியாவில் முடிவு இரு நாட்டு குடிமக்களுக்கான சேவை வழங்கல் அளவை முற்றிலும் பாதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்று தெரிவித்த அவர், சண்டிகர், மும்பை மற்றும் பெங்களூருவில் உள்ள தூதரங்களில் உள்ள அனைத்து தனிப்பட்ட சேவைகளையும் நாங்கள் (கனடா) நிறுத்த வேண்டியது துரதிருஷ்டவசமானது’’ என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.