News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

வேலுமணி மகன் கல்யாணத்தில் பா.ஜ.க. தலைவர்கள் கலந்துகொண்ட சூழலில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளாமல் இருந்தது அரசியல் பஞ்சாயத்தாக கருதப்பட்டது. இந்த நிலையில் கோவை, அவினாசி சாலை, கொடிசியா வளாகத்தில் அமைந்துள்ள ஏபிசி ஹாலில் நடைபெற்ற, திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

எடப்பாடி பழனிசாமியுடன் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், மணமக்களின் குடும்பத்தினரும் உடன் இருந்தனர். ஆனால், இபிஎஸ் வருகையை அறிந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விரைவாக வெளியேறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம், திருமண விழாவில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி மற்ற நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நேரத்தில் மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வந்ததும் இருவரும் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர். அதன்பின், இருவரும் கோவை விமான நிலையம் சென்ற நிலையில் அங்குள்ள விஐபி அறையில் தனியாக உரையாடினர். பின்னரும் இருவரும் ஒரே விமானத்தில் சென்னை வந்தடைந்தனர்.

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பேசிவருகிறார் என்றாலும் சிபி ராதாகிருஷ்ணனுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியது கட்சியினரை குழப்பத்திற்கு ஆளாக்கியுள்ளது. அதேநேரம், செங்கோட்டையன் குறித்து எடப்பாடி பழனிசாமி விசாரிக்கவே இல்லை. எனவே, இரண்டு பேருக்கும் இடையில் நடக்கும் மோதல் இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்றே தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link