News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

    எம்.ஜி.ஆர்., ஜெ. கருணாநிதியை தாண்டிய வெற்றி

தமிழ் நியூஸ் நவ் சார்பில் தமிழகம் மற்றும் புதுவைக்கான 40 தொகுதிகளுக்கு எக்ஸ்க்ளூசிவ் தேர்தல் கணிப்பு கடந்த ஏப்ரல் 17ம் தேதி வெளியானது. இந்த தேர்தல் கணிப்பில் தி.மு.க. 38 தொகுதிகளில் எளிதாக வெற்றி அடையும். இரண்டு தொகுதிகளில் கடுமையான போட்டியை சந்திக்கும் என்றாலும் அவற்றிலும் வெற்றி அடைவதற்கு வாய்ப்பு அதிகம் என்று எழுதியிருந்தோம்.

தமிழ் நியூஸ் நவ் கணிப்பு அப்படியே நடந்திருக்கிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத அதிசயமாக தி.மு.க. கூட்டணி ஒட்டுமொத்த சீட்களையும் வென்றுள்ளது. இது போன்ற வெற்றியை எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதாவும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முக்கிய காரணம் முதல்வர் ஸ்டாலின். கூட்டணிக் கட்சிகள் எதுவும் உடைந்து சிதைந்துவிடாமல் கடைசி வரையிலும் மிகவும் உஷாராக இருந்தார்.  அதேபோல் வேட்பாளர் தேர்விலும் மிகவும் கவனம் செலுத்தினார். தங்கள் கட்சி வேட்பாளர் தேர்வு மட்டுமின்றி காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தேர்விலும் கவனம் செலுத்தினார்.

அதேநேரம், எதிர்க்கட்சிகள் ஒற்றுமை இல்லாமல் தனித்தனியே நின்றது தி.மு.க.வின் வெற்றியை மிகவும் எளிமையாக்கிவிட்டது. எடப்பாடி பழனிசாமிக்கும் அண்ணாமலைக்கும் ஸ்டாலின் ரொம்பவே கடமைப்பட்டிருக்கிறார். இந்த 40 எம்.பி.க்கள் மூலம் இனி தமிழகத்திற்கு நல்லது நடக்கும் வகையில் செயல்பாடு இருக்க வேண்டும் என்று தமிழ் நியூஸ் நவ் வாழ்த்து தெரிவிக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link