News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

எங்களுக்கு மக்களுடன் மட்டுமே கூட்டணி இருக்கிறது. ஆனால், தி.மு.க.தான் பா.ஜ.க.வுடன் உறவு வைத்திருக்கிறது என்று பொதுமேடையில் ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் மோடியுடன் இருக்கும் போட்டோ காட்டி எடப்பாடி செய்த சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றது.

பா.ஜ.க.வில் இருந்து அ.தி.மு.க. தனியே பிரிந்துவிட்டாலும், இன்னமும் உறவு தொடர்கிறது என்று தி.மு.க. மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் எட்ப்பாடி பழனிசாமி அவரது பரப்புரையில் தி.மு.க.வை கடுமையாக சாடினார். அதோடு பிரதமர் மோடியை ஸ்டாலினும் உதயநிதியும் சந்தித்துப் பேசிய படங்களைக் காட்டினார்.

அதன்பிறகு பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘எதிர்க் கட்சியாக இருக்கும் நேரத்தில் எல்லாம் கோ பேக் மோடி என்று கூறிய ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் வெல்கம் மோடி என்று வரவேற்கிறார். டெல்லியில் போய் ஸ்டாலினும், உதயநிதியும் சிரித்துப் பேசுகிறார்கள். அவர்கள் பா.ஜ.க.வுடன் உறவில் இருந்துகொண்டே எதிர்ப்பது போல் நடிக்கிறார்கள் என்று போட்டுத் தாக்கினார்.

இதையடுத்து உதயநிதி வழக்கம் போல் அவரது கலாய்த்தலை ஆரம்பித்துவிட்டார். சசிகலா காலில் தவழ்ந்து சென்று விழும் போட்டோவை தூக்கிக் காட்டி, ‘இதே போல் ஒரே ஒரு படத்தைக் காட்டுங்கள். நான் அரசியலை விட்டே வெளியே போகிறேன்’ என்று ஓங்கி அடித்திருக்கிறார்.

அரசியல் களம் சூடு பிடிக்கிறது. அடுத்து எடப்பாடி என்ன காட்டப் போகிறாரோ…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link