Share via:
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இதற்கு முன்னர் ஒரு தாளுக்கு ரூ.150 பெறப்பட்டு வந்த நிலையில், 50 சதவீதமாக அதாவது ரூ.225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் எழுத வேண்டி இருப்பதால் ஒவ்வொரு மாணவரும் ரூ.2,050 கட்டணமாக செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் டிகிர பெறுவதற்கான கட்டணம் ஏற்கனவே ரூ.1,000 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.1,500 ஆக அதிகரித்துள்ளது.
இறுதியாண்டு மாணவர்கள் செலுத்தவந்த பிராஜெக்ட் கட்டணம் தற்போது ரூ.600ல் இருந்து ரூ.900 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அதிரடி கட்டண உயர்வு குறித்து பதில் அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ‘‘வரும் செமஸ்டரில் இந்த கட்டண உயர்வு கிடையாது’’ என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.