News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இதுவரை அரசியல் சாணக்கியர் என்ற பெயரில் பா.ஜ.க.வுக்கு ஆள் பிடிக்கும் வேலையை அமித் ஷா செய்து வந்தார். இப்போது கார்கே அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

400 தொகுதிகள் இலக்கு என்று சொல்லிவந்த பா.ஜ.க.வுக்கு இப்போது தனிக் கட்சியாக அறுதிப் பெரும்பான்மை கிடைக்கப்போவது இல்லை என்பது உறுதியாகி விட்டது. இந்த நிலையில் பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோரை நம்பியே ஆட்சி அமைக்கும் நிலையில் மோடி இருக்கிறார்.

ஆகவே, இப்போதே சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோரை தொடர்புகொண்டு ஆட்சி அமைப்புக்கு ஆதரவு தருமாறு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே பேசி வருவதாக சொல்லப்படுகிறது.

இதுவரை, இப்படிப்பட்ட வேலையை பா.ஜ.க அரசு மட்டுமே செய்துவந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக கார்கே மேற்கொள்ளும் முயற்சி பா.ஜ.க.வை பதட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link