News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மக்களவைத் தேர்தலில் மெகா திருப்பமாக ஒரு பொது விவாதத்திற்கு ராகுல் ஒப்புக்கொண்டிருப்பதும், 10 ஆண்டுகள் ஆட்சி செய்த நரேந்திரமோடி பதில் சொல்லாமல் எஸ்கேப் ஆவதும் கடும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

ஓய்வு பெற்ற ஒரு நீதிபதி மற்றும் மூன்று மூத்த ஊடகவியலாளர்கள் இணைந்து அமெரிக்க ஜனாதிபதி விவாதம் போல ஒன்றை ஏற்பாடு செய்ய முயற்சித்து வருகிறார்கள். எந்த அரசியல் சார்பும் இன்றி இந்த விவாதம் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். இதற்கு பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி இருவருக்கும் அழைப்பு அனுப்பி இருக்கிறார்கள்.

இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு நேற்று காங்கிரஸ் கடிதம் அனுப்பி இருக்கிறது. ராகுல் அல்லது மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொள்வார் என்று கட்சி தெரிவித்திருக்கிறது. நேற்று லக்னோவில் பேசும் போது ராகுலும் ‘விவாதத்துக்கு 100% தயார்,’ என்று அறிவித்திருக்கிறார். பாஜக தரப்பில் இருந்து எந்த பதிவிலும் இன்னமும் வரவில்லை.

2014 தேர்தலுக்கு முன்பு அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மன்மோகன் சிங்கை ‘விவாதத்துக்கு வருகிறாயா?’ என்று கூப்பிட்டுக்கொண்டிருந்தார். இதே போல 2019ல் ராகுலை பாஜகவினர் அழைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது ‘நான் தயார்’ என்று ராகுல் அறிவித்திருக்கிறார்.

மோடி நேரடியாக எதுவும் சொல்லவில்லை எனினும் பாஜகவின் சுதான்சு திரிவேதி நேற்று பேசுகையில் ‘பிரதமருடன் பேச ராகுலுக்கு என்ன தகுதி இருக்கிறது? அவர் வெறும் எம்பி மட்டும்தானே? அவர் ஒரு கட்சியின் தலைவர் கூட இல்லையே,’ என்று நக்கல் அடித்திருக்கிறார்.

அவர் ஒரு கட்சியின் தலைவர் இல்லை ன்பதினால்தான் காங்கிரஸ் தங்கள் கடிதத்தில் மல்லிகார்ஜுன் கார்கே பெயரையும் சேர்த்து குறிப்பிட்டிருந்தார்கள். எனவே வெறும் ஒரு ‘சாதா எம்பி’ யுடன் வேண்டாம் எனில் இரண்டாவது பெரிய தேசியக் கட்சித் தலைவருடன் விவாதிக்கலாம். பிரச்சினை இல்லை. அவர்கள் ரெடியாகவே உள்ளார்கள்.

என்ன சொல்லப் போகிறார் மோடி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link