Share via:
சென்னையில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கமிஷனர் அருண் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி 6,000 ரவுடிகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொருவரின் வீடு தேடிச் சென்று அவர்களை நேரில் விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் ரவுடிகள் அராஜகம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தை தொடர்ந்து பல உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றமும் நடைபெற்றது.
அப்படி புதிதாக பணியமர்த்தப்பட்ட சென்னை மாநகர கமிஷனர் அருண், ரவுடிகளுக்கு அவர்களுக்கு ஏற்ற மொழியில் பதில் அளிக்கப்படும் என்று முதல்நாள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அன்று முதலே ரவுடிகளின் வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்திருக்கும். அந்த வகையில் அடையாளம் காணப்பட்டுள்ள 6,000 ரவுடிகளிடம் தீவிர விசாரணை நடத்த முழுவீச்சில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் போலீஸ் வேட்டை ஆரம்பமாகிறது