இந்தியா- இலங்கை திடீர் ஒப்பந்தம்! என்னவென்று தெரியுமா?

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, இந்தியாவுடன் மருந்து இறக்குமதிக்காக புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு இலங்கை அரசு மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. அங்குள்ள பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டனர். ஒரு பக்கம் வேலையில்லா திண்டாட்டம் மற்றொரு பக்கம் மருந்து, அரிசி, பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் என சொல்ல முடியாத துக்கத்தில் தவித்து வந்தனர். அதை தவிர்க்க இந்தியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு […]
மத்திய அமைச்சரை சந்தித்தால் கூட்டணி என்று அர்த்தமா? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

பா.ஜ.க. உடனான கூட்டணி முறிவு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மத்திய அமைச்சரை சந்தித்து பேசினால் கூட்டணியை பற்றி பேசினோம் என்று அர்த்தமாகிவிடுமா என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, ‘‘பாரதிய ஜனதா கட்சியுடன் இனி கூட்டணி கிடையாது என்பதை தெளிவாக கூறிவிட்டேன். இதில் எந்த மாற்றமும் இல்லை. இது 2 கோடி தொண்டர்களின் முடிவு […]
நிர்வாண படத்தில் நடித்தேனா? அமைச்சர் ரோஜா கண்ணீர் வீடியோ வைரல்!

நிர்வாண படத்தில் நான் நடித்தேன் என்றும் நான் கெட்டவள் என்றும் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னனள் அமைச்சர் அவதூறு பரப்புகிறார் என்று நடிகையும் அமைச்சருமான ரோஜா கண்ணீர் மல்க பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்திய நாராயணமூர்த்திக்கும் அமைச்சர் ரோஜாவுக்கும் இடையிலான போர் எப்போது முடியும் என்று தெரியவில்லை. இவர்களின் சண்டையால் ஆந்திராவில் பரபரப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சியின் […]
மேற்கூரை இடிந்த விவகாரம்: பெட்ரோல் பங்க் உரிமையாளர் நீதிமன்றத்தில் சரண்!

பெட்ரோல் பங்க் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியான விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த 29ம் தேதி பெய்த கனமழையின் போது சைதப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில் பலர் மழைக்காக ஒதுங்கி நின்று கொண்டிருந்தனர். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பெட்ரோல் பங்க் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அதன் அடியில் நின்று கொண்டிருந்த […]
ஆவின் பால் முகவர்கள் குமுறல்! தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

தமிழகத்தில் ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிக விலைகொடுத்து தனியார் நிறுவனங்களின் பால் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ள ஆவின் பால் நிறுவனம் நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் கிடைத்து வருகிறது. நீலம், பச்சை, ஆரஞ்சு என கிடைத்து வரும் பால் பிஞ்சு குழந்தைகளின் சத்துணவாகவும், தாய்ப்பாலுக்கு நிகராகவும் கருதப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆவின் பால் விநியோகம் 50 சதவீதத்துக்கு மேல் திட்டமிடப்பட்டு குறைக்கப்பட்டு வருகிறது. […]
மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி! முதலமைச்சர் நிதி உதவி அறிவிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டம், ஆற்றூர் கிராமம் தோப்புவிளையைச் சேர்ந்தவர்கள் டெம்போ டிரைவர் சோம்ராஜ். இவர் தனது மனைவி சித்ரா மற்றும் மகள் ஆதிரா, மகன் அஸ்வின் ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் சித்ரா, ஆதிரா, அஸ்வின் ஆகியோர் நேற்று அவர்களது வீட்டில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் […]
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி! கடலூரில் பரபரப்பு!

கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் குருபூஜையில் கலந்து கொள்ள உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள கோஆதனூரில் நந்தனார் குருபூஜை விழா இன்று நடைபெற உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். இன்று நடைபெறும் விழாவுடன் சேர்த்து அதன் பின்னர் நடைபெற உள்ள […]
தேசிய மருத்துவ ஆணையை நிறுத்துங்கள்! பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

புதிய மருத்துவக் கல்லூரி தொடர்பான தேசிய மருத்துவ ஆணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார். தேசிய மருத்துவ ஆணையம் புதிய விதிகளை வகுத்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளும், அவற்றில் உள்ள மாணவர்கள் சேர்க்கை இடங்களும் தேவைக்கும் அதிகமாக இருக்கிறது. இதனால் அடுத்த ஆண்டு முதல் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்கவும், மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவும் தேசிய மருத்துவ ஆணையம் தடை விதித்துள்ளது. […]
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனை! முக்கிய தகவல்கள்!

ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் இன்று திடீர் ஆலோசனை மேற்கொள்கிறார் என்ற செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது. அ.தி.மு.க. பா.ஜ.க.வுடனான தனது கூட்டணியை முறித்துக் கொண்ட நேரத்தில் எப்படியும் பா.ஜ.க. தலைமை தனக்கு அழைப்பு விடுக்கும் என்ற உறுதியான நம்பிக்கையில் இருந்தார் ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.க.வில் இருந்து குண்டுகட்டாக வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன், எப்படியும் அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்திவிட வேண்டும் என்றும் அ.தி.மு.க.வில் முக்கிய இடம் பிடிக்க வேண்டும் என்றும் […]
இடைநிலை ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார்! வீடியோ வைரல்!

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடைநிலை ஆசிரியர்களை சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களுடன் கலந்துரையாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு மே மாதத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதே ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட இடை நிலை ஆசியர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாட்டை நீக்கக் கோரி இடை நிலை ஆசிரியர்கள் தங்களது குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் 6வது நாளாக ஈடுபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களுடன் […]

