மதுரை எய்ம்ஸ், வானதி சீனிவாசனை போட்டுத் தாக்கும் சு.வெங்கடேசன்

கட்டுக்கதைகள் சொல்லி தமிழக மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று பா.ஜ.க. தலைவர் வானதி சீனிவாசன் மதுரை எம்.பி. வெங்கடேசன் மீது குற்றச்சாட்டு வைத்திருந்தார். இதற்கு பதிலடியாக மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டாவையும், தன்னை விமர்சனம் செய்த வானதி சீனிவாசனையும் போட்டுத் தாக்கியிருக்கிறார் மதுரை எம்.பி. வெங்கடேசன். இது குறித்து சு.வெங்கடேசன், ‘நான் உணர்ச்சி பொங்க பேசி கட்டுக்கதைகள் மூலம் தமிழக மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் வானதி சீனிவாசன். ரயில்வே பட்ஜெட்டை பாஜக அரசு தான் ஒழித்தது. […]
வயநாட்டில் வைரலாகும் மேஜர் சீதா ஷெல்கே… இவர் என்ன செஞ்சாருன்னு தெரியுமா?

இயற்கை பெருந்துயரமாக நடந்திருக்கும் வயநாடு நிலச்சரிவு 340க்கும் மேற்பட்ட நபர்களின் உயிரைப் பறித்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். ஏராளமான நபர்கள் ஒரே இரவில் அத்தனை சொத்துக்களையும் பறிகொடுத்து ரோட்டுக்கு வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் ராகுல் காந்தியின் வருகை பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை கொடுத்தது. நிலச்சரிவு தொடங்கிய இடம் வரையிலும் நேரில் சென்று பார்வையிட்ட ராகுல் காந்தி, முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களையும், இறந்தவர் உடல்களையும் பார்த்து வேதனை தெரிவித்தார். அதோடு காங்கிரஸ் கட்சி சார்பில் 100 வீடுகள் கட்டிக் […]
மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் எடப்பாடி பழனிசாமி. எதற்காக இந்த சந்திப்பு தெரியுமா?

மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாக ஒரு செய்தி பரவியிருந்த நிலையில், அவரது வீட்டுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்று ஆறுதல் கூறிய விவகாரம் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம் ஆர் விஜயபாஸ்கர் மீது சுமார் 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து மூன்றாவது முறையாக […]
நாடாளுமன்றத்தில் பிளாஸ்டிக் பக்கெட், கொள்ளிடத்தில் தடுப்பணை உடைப்பு. என்ன தான் நடக்குது.?

ஆயிரம் கோடி ரூபாயில் கட்டிய நாடாளுமன்றம் ஒழுகுகிறது தி.மு.க.வினர் மோடியை குறை சொல்லிவரும் நிலையில் காவிரி கொள்ளிடத்தில் தடுப்பணை உடைந்திருக்கிறது. இதுகுறித்து எதிர்க்கட்சியினர், ‘’சில மாதங்களுக்கு முன்னர் 6.5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்துபோயிருக்கிறது. அதே போல் இந்த தடுப்பணை அருகில் இருந்த உயர் அழுத்த மின் கோபுரத்தின் கான்கிரிட் தூண்களும் சாய்ந்து விட்டன என்பது அப்பணியின் தரத்தினை குறிக்கிறது. 6.5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தடுப்பணை 6 மாதங்கள் கூட நிலைக்காதது […]
கலைஞர் நூலகத்தை கேவலப்படுத்தும் கார்த்தி சிதம்பரம். பா.ஜ.க.வுக்கு மாறப் போகிறாரா..?

புத்தகம் படிப்பதையும் நூலகம் செல்வதையும் யாரும் விரும்புவதில்லை என்று ஒரு கும்பல் சொல்லிவரும் நிலையில், மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு ஒரே ஆண்டில் 10 லட்சம் பேர் வருகை புரிந்திருக்கிறார்கள் என்று தி.மு.க.வினர் பெருமைப்பட்டனர். அரசுத் துறை தேர்வுப் போட்டிகளுக்குத் தயாராகும் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இது ஒரு நல்ல முன்னேற்றம், ஸ்டாலினின் வெற்றி என்று தி.மு.க.வினர் கொண்டாடிவரும் நேரத்தில், இதுகுறித்து சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வில்லங்கமான ஒரு […]
ராகுல் காந்தியை கைது செய்யத் திட்டம்..? ரெய்டுக்குத் தயாராகும் அமலாக்கத்துறை

வரலாறு காணாத பேரழிவை சந்தித்திருக்கும் வயநாட்டு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிவருகிறார் ராகுல் காந்தி. நிவாரண முகாம்களில் தங்கள் உறவுகள், உடைமைகளை இழந்து சோகத்தில் ஆழ்ந்திருக்கும் மக்களை சந்தித்து ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் ஆறுதல் கூறிவருகிறார்கள். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, ‘’வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை.. என் தந்தை இறந்தபோது நான் எப்படி உணர்ந்தேனோ அதைவிட துன்பத்தை இன்று நான் உணர்கிறேன்’’ என்று பேசியிருக்கிறார். […]
வயநாடு நிலச்சரிவு: ராகுல்காந்தி, பிரியங்கா நேரில் ஆய்வு!

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு இந்தியாவையே உலுக்கியுள்ளது. இதுவரை 291 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த சிலர் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதோட தமிழக அரசின் சார்பில் கேரள மாநிலத்திற்கு 5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து திரைத்துறையைச் சேர்ந்த விக்ரம், சூர்யா, ஜோதிகா, கார்த்தி உள்ளிட்ட பலர் நிவாரண […]
ரேஷன் பொருட்கள் இனி பாக்கெட்டில் விற்பனை! ஊழியர்களுக்கு செக் வைத்த தமிழக அரசு!

நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களின் எடை குறைவாக இருப்பதாக தொடர்ந்து புகார்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு முக்கிய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. தமிழ்நாடு அரசு சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் 2 கோடியே 23 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். அதன்படி நியாய விலைக்கடைகளில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, கோதுமை இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. மேலும் சர்க்கரை, பாமாயில், துவரம்பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் குறைந்த […]
அருந்ததியர் உள் ஒதுக்கீடு ஓகே… வன்னியர்களுக்கு இல்லையா? கொதிக்கும் ராமதாஸ்

அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடு செல்லும் என்று கருணாநிதி கொண்டுவந்த அரசாணை செல்லும் என்று உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. இந்த நிலையில், வன்னியர்களுக்கு தி.மு.க. உள் ஒதுக்கீட்டில் துரோகம் செய்கிறது என்று பொங்கியிருக்கிறார் ராமதாஸ். கட்ந்த 2009ஆம் ஆண்டு, கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, பட்டியல் சாதிகளுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடு வழங்கியது. 2008 நவம்பர் 27ஆம் தேதி எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவின்படி, அருந்ததியர் (தனி ஒதுக்கீடு செய்தல்) சட்டம் […]
போலி பேராசிரியர்களை பிடிச்சு ஜெயிலில் போடுங்க. சீமான் ஆவேசம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரே பேராசிரியர் பல்வேறு கல்லூரிகளில் பணிபுரியும் ஊழலை அறப்போர் இயக்கம் அம்பலபடுத்தியிருந்தது. இதனை கண்டறிய குழு அமைக்கப்படும் என்று அறிவிப்பு செய்திருந்தாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நாம் தமிழர் சீமான், ‘’அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டுவந்துள்ள அண்ணா பல்கலைக்கழக போலி பேராசிரியர்கள் நியமன ஊழல் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாக நடைபெற்றுள்ள ஊழல் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்காமல், வழக்கம்போல குழு அமைத்து கிடப்பில்போட்டுள்ள திமுக அரசின் மெத்தனப்போக்கு […]

