ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! கைது செய்யப்பட்ட காங்கிரஸ் பிரமுகர்!

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை போலீசார் 21 பேரை கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து தற்போது அஸ்வத்தாமன் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். யார் இந்த அஸ்வத்தாமன் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம். கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் தனதுவீட்டு கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். கட்சி பிரமுகர் என்ற அடையாளத்தையும் […]
வினேஷ் போகத் திடீர் தகுதி நீக்கம். அதிர்ச்சியில் இந்தியா

ஒலிம்பிக் போட்டியில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த வினேஷ் போகத் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்துள்ளது. காலிறுதியில் உக்ரைன் வீராங்கனையையும், அரையிறுதியில் கியூகா வீராங்கனையையும் தோற்கடித்தார் வினேஷ் போகத். ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனையான வினேஷ் போகத் இருந்தார். இறுதி போட்டியில் தங்கம் வெல்வார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ எடை […]
பெண் சிங்கம் வினேஷ் போகத்துக்கு ராகுல் பாராட்டு. மோடிக்கு தரமான பதிலடி

இறுதிப் போட்டியில் தங்கத்திற்கு அருகில் நிற்கும் வினேஷ் போகத்திற்கு நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்திருக்கிறார். ஒலிம்பிக் விளையாட்டில் இந்தியா போன்ற மாபெரும் தேசத்துக்கு பதக்கப்பட்டியலில் மரியாதைக்குரிய இடம் கிடைக்கவே இல்லை. இதற்குக் காரணம் பிரிஜ்பூஷன் போன்ற பா.ஜ.க. தலைவர்கள் தான் என்பது அம்பலப்பட்டுள்ளது. வினேஷ் போகத் பெற்றிருக்கும் வெற்றி சாதாரண ஒன்று அல்ல. தொடர்ந்து 82 சர்வதேசப் போட்டிகளில் வெற்றியைக் காணாத, நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரை, முன்னாள் உலகச் […]
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு சிக்கல். தி.மு.க.வுக்கு நீதிமன்றம் குட்டு.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு செய்ததாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்குகளில் மேல் விசாரணை நடத்தி, லஞ்ச ஒழிப்புத் துறையினர் தாக்கல் செய்த அறிக்கைகளின் அடிப்படையில், அவர்கள் இருவரையும் விடுவித்து சிறப்பு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்திருந்தன. இந்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்த விடுவிப்புக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். கடந்த மார்ச் மாதம் இந்த வழக்குகளில் இறுதி […]
ஸ்டாலின் 3 கி.மீ. வாக்கிங். உடல்நிலை வதந்திக்கு அமைதிப் பேரணி பதிலடி

எதிர்க் கட்சியாக இருந்தபோதும், பதவிக்கு வந்து மூன்று ஆண்டுகள் முடிந்த பிறகும் கருணாநிதி நினைவு நாளில் இப்படியொரு அமைதிப் பேரணியை மு.க.ஸ்டாலின் நடத்தியதே இல்லை. இந்த ஆண்டு திடீரென ஏற்பாடு செய்யப்பட்டது ஏன் என்பதற்குப் பதில் கிடைத்திருக்கிறது. சென்னை அண்ணாசாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்திருக்கும் கருணாநிதி சிலையில் இருந்து காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம் வரை கிட்டத்தட்ட 3 கி.மீ. நடந்தே சென்றுள்ளார் ஸ்டாலின். இதன் மூலம் அவருடைய உடல்நிலை பக்கா ஃபிட் என்பதை […]
வயநாடு நிலச்சரிவு: சேதமடைந்த தற்காலிக பாலம்!

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்காக அமைக்கப்பட்ட தற்காலிகமான பெய்லி பாலம் சேதமடைந்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. வயநாடு நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 400ஐ கடந்துள்ள நிலையில், தொடர்ந்து 8வது நாளாக மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நீர் மற்றும் சேறு சகதியால் சூழப்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்ட சூரல்மலை முண்டகை இடையே நிவாரணப் பணிகள் தொய்வடைந்தன. அதைத்தொடர்ந்து கனரக வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை ஆற்றை கடந்து செல்ல முடியாத […]
பெட்ரோல் குண்டுவீச்சு! முதலமைச்சரை விமர்சனம் செய்த எடப்பாடி பழனிசாமி!

சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தின் மீது மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசியுள்ள சம்பவத்தைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள நாளுக்கு நாள் சீர்குலைந்து வருவதை நிரூபிக்கும் வகையில் பல்வேறு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கே இந்த நிலைமை என்றால், சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது என்று ஆளும் […]
தாஜ்மகாலில் இந்து அமைப்புகள் செய்யும் களேபரம்!

மனைவி மும்தாஜ் நினைவாக ஷாஜகான் கட்டிய காதல் சின்னம் தான் இந்த தாஜ்மகால். காதலர்கள் பெரும்பாலும் தனது துணைக்கு கொடுக்கும் பரிசுகளில் முக்கியப் பங்கு வகிப்பது இந்த தாஜ்மகால் உருவம் பொறித்த பரிசுப் பொருட்கள் தான். காதல் திரைப்படம் என்றால் இயக்குனர் உடனடியாக ஆக்ராவுக்கு படையெடுப்பார்கள். மேலும் உலக அதிசயங்களில் ஒன்றான இந்த தாஜ்மகாலுக்குள் ரகசிய அறைகள் உள்ளன என்றும் இதற்கு முன்னர் அந்த இடத்தில் சிவன்கோவில் இருந்தது என்றும் பலர் சர்ச்சைகளை கிளப்பியது அனைவருக்கும் […]
பெண்களை கொச்சைப்படுத்தும் சீமான் தலைமைக்கு ஏற்றவரா..? வெளியேறும் பெண் நிர்வாகிகள்

தமிழகத்தில் முதன்முறையாக பெண்களுக்கு தேர்தலில் 50% இடம் கொடுத்த நாம் தமிழர் கட்சியின் சீமானே இப்படி பெண்களை கொச்சைப்படுத்திப் பேசலாமா என்று கட்சிக்குள்ளும் வெளியிலும் கடுமையான எதிர்ப்புகள் தோன்றியிருப்பதால், நிறைய பெண் நிர்வாகிகள் வெளியேறத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த கூட்டத்தில் பேசிய சீமான், ‘’விஜயலட்சுமி என் மேல பாலியல் குற்றம் சுமத்திய பின் தான் தமிழ்நாட்டில் பல பெண்களுக்கு என் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இவனுக்குள்ளும் ரொமான்ஸ் இருந்திருக்கு பாரேன் என்று பல பெண்கள் இப்பொழுது எனது fans […]
வைரமுத்துக்கு முத்தமிழ் பேரறிஞர் விருது அவுட். தி.மு.க.வினர் செம ஹேப்பி

கலைஞர் கருணாநிதியை அவமானப்படுத்தும் வகையில் முத்தமிழ் பேரறிஞர் என்ற பட்டத்தை வைரமுத்து ஏற்கக்கூடாது என்று தி.மு.க.வினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். சுப.வீரபாண்டியன் வைரமுத்துக்கு நேரடியாகவே தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்தார். இந்த நிலையில், முத்தமிழ் பேரறிஞர் என்ற பட்டத்தை முத்தமிழ் பெருங்கவிஞர் என்று மாறுதல் செய்து பெற்றுக்கொண்டுள்ளார் வைரமுத்து. இதுகுறித்து வைரமுத்து, ‘’பொன்விழாக் காணும் மதுரைத் தமிழ் இசைச் சங்கம் ‘முத்தமிழ்ப் பெருங்கவிஞர்’ என்ற பட்டத்தை எனக்கு வழங்கியது அமைச்சர் தங்கம் தென்னரசு பட்டயமும் பொற்கிழியும் வழங்கினார். […]

