விஜய்க்கு துரை வைகோ கொடுத்த திடீர் அட்வைஸ்!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மகனும், ம.தி.மு.க. முதன்மைச் செயலாளருமான துரை வைகோ முக்கியமான அறிவுரை வழங்கியுள்ளார். தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை வெற்றிகரமான முறையில் நடத்தி முடித்த பிறகு விஜய்யின் அடுத்த நகர்வு குறித்து நிறைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சங்கரன்கோவிலில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய துரை வைகோ, விஜய் சினிமா வானில் ஜொலிக்கும் நட்சத்திரம். அவருக்கென்று எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அரசியல் என்பது […]
கிண்டி மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி! கொதித்தெழுந்த உறவினர்கள்!

கிண்டி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி திடீரென்று உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கிண்டியில் செயல்பட்டு வரும் கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கடந்த 13ம் தேதி விக்னேஷ் என்ற 26 வயது இளைஞர், டாக்டர் பாலாஜி ஜெகன்நாதனை கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியது. உடல் நலம் தேறிய மருத்துவர் தற்போது இயல்புநிலைக்கு திரும்பியுள்ள நிலையில் விக்னேஷ் 15 நாள் […]
சாதி சர்வாதிகாரியா சீமான்..? நெல்லை பூசலில் தாசில்தாருக்குச் சிக்கல்

சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூக நீதியும் என்ற தலைப்பில் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று பேசி வருகிறார் நாம் தமிழர் சீமான். நெல்லையில் நடந்த கூட்டத்தில் சீமானை எதிர்த்து கேள்வி கேட்ட நிர்வாகிகளை சாதியைச் சொல்லித் திட்டியதாக புகார் எழுந்துள்ளது. அதோடு, அந்தக் கூட்டத்தில் தாசில்தார் கலந்துகொண்டதும் பெரும் சர்ச்சையை எழுப்பியிருக்கிறது. திருநெல்வேலியில் நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் சீமான் கலந்துகொண்டர். அப்போது, இந்த பகுதியில் நாடார்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் […]
தலைமறைவான கஸ்தூரி: 2 தனிப்படை அமைத்து போலீஸ் தேடுதல் வேட்டை!

தெலுங்கு மக்களை அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவான கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 2 தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பிராமணர் சமூகத்தினர் சார்பில் சென்னையில் கடந்த 3ம் தேதி நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, பிராமணர்களுக்கு ஆதரவாக ஆக்ரோஷமாக பேசினார். அப்போது அவர் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. இதைத்தொடர்ந்து தெலுங்கு அமைப்பினர் மற்றும் தெலுங்கு […]
அரைவேக்காட்டு தமிழிசைக்கு மக்கள் நீதி மய்யம் தரமான பதிலடி… இப்படி பண்றீங்களேம்மா

சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் தன்னை இனி உலக நாயகன் என்றோ வேறு பட்டப்பெயருடனோ அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை எந்த அரசியல் தலைவர்களும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், தமிழிசை செளந்தரராஜன் மட்டும், ‘’தி.மு.க.வின் மிரட்டலுக்குப் பயந்து உலக நாயகன் பட்டத்தை கமல்ஹாசன் துறந்துவிட்டார்’ என்று விமர்சனம் செய்திருந்தார். இதற்கு மக்கள் நீதி மய்யம் கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறது. உலக நாயகன் பட்டத்துக்கும் தி.மு.க. மிரட்டலுக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் அரைவேக்காட்டுத்தனமாகப் பேசியிருக்கிறார். […]
மக்களை அவதிக்குள்ளாக்கும் மருத்துவர்கள் போராட்டம்… என்ன செய்யவேண்டும் அரசு..?

சென்னையில், மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவித்து புறக்கனிப்பு செய்கிறார்கள். மாநிலம் முழுவதும் சுமார் 45,000 மருத்துவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அவசர சிகிச்சை பிரிவு மட்டும் வழக்கம் போல் செயல்படுகிறது இதையடுத்து புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் அரசு என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி எழுந்துள்ளது. இது ஒரு தனி மனிதனின் கோளாறு என்பதை மக்களும் […]
நான்காவது முறையாக அமலாக்கத்துறை ரெய்டில் ஆதவ் அர்ஜுனா. அடுத்தது திருமாவளவன்..?

சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் இன்று காலைமுதல் அமலாக்கத் துறையினர் சோதனையை தொடங்கியுள்ளனர். வீடு மற்றும் அவருக்கு சொந்தமான அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் கோவையில் உள்ள ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதோடு ஆதவ் அர்ஜுனாவின் மாமனாரும் லாட்டரி அதிபருமான மார்ட்டின் வீடு அலுவலகத்திலும் ரெய்டு நடக்கிறது. ஆதவ் அர்ஜுனா […]
டாக்டருக்கு கத்திக்குத்து: காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்த அரசு மருத்துவர்கள் சங்கம்!

கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் துறையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் பாலாஜி ஜெகன்நாதன். இவரிடம் புற்றுநோய் பிரிவில் சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் தாய் காஞ்சனா கடந்த 6 மாதமாக புற்றுநோய்க்கான சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து சொந்த விருப்பத்தின் பேரின் விக்னேஷ் தனது தாயை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் இன்று (நவம்பர் 13) மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதனை சந்தித்த விக்னேஷ் அவரிடம் […]
என்னாச்சு.. வேல்முருகனும் தி.மு.க.வுக்கு எதிராப் பேசுறாரு..? எடப்பாடி கூட்டணிக்குப் போகிறாரா..?

கூட்டணிக் கட்சிகள் என்றாலே வாயைப் பொத்திக்கொண்டு இருக்க வேண்டும் என்பது தான் எழுதப்படாத சட்டம். ஆட்சியில் பங்கு என்று விடுதலை சிறுத்தைகளும், சாம்சங் விவகாரத்தில் கம்யூனிஸ்ட்களும் தி.மு.க.வுக்கு எதிராகக் குரல் கொடுத்தன. அதே வரிசையில் இப்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனும் தி.மு.க.வுக்கு எதிராக கம்பு சுற்றியிருக்கிறார். தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் என்பது சுற்றுச்சூழலுக்கு எதிரானது என்பதால் அச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். மேலும் அவர், ‘’தமிழ்நாட்டின் நீர்வளத்தையும், நிலவளத்தையும் […]
கேப்டன் முகுந்துக்கு திட்டமிட்டு அவமானம்..? இப்போது போர்க் குற்றவாளி புகார்

அமரன் படத்தின் நாயகன் ஒரு பிராமணர் என்பதைக் காட்டாமல் திட்டமிட்டு ஏமாற்றினார்கள் என்ற சர்ச்சையே இன்னமும் முடிவுக்கு வராத நிலையில் முகுந்த் போர்க் குற்றவாளி என்ற அடுத்த சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்துப் பேசிய திருமுருகன் காந்தி மீது பா.ஜ.க.வினர் கடுமையாகப் பாய்ந்து தாக்குதல் நடத்திவருகிறார்கள். அமரன் படம் குறித்துப் பேசிய திருமுருகன் காந்தி, ‘’’அமரன்’ திரைப்படத்தின் ஒரு காட்சியில் ஆயுதமற்ற குற்றவாளி வில்லனை கைது செய்யாமல், ‘இந்திய இராணுவத்தின் முகத்தை பார்’ என சொல்லி சுட்டுக்கொலை […]

