தி.மு.க.வில் உதயநிதி ஆதரவாளர்களுக்குப் பதவி. இனி, 117 மாவட்டச் செயலாளர்கள்?

முதல்வராக இருக்கும் ஸ்டாலின் இப்போது தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்களில் பெரிதாக தலையிடுவது இல்லை. முக்கிய முடிவுகளை சபரீசனும் உதயநிதியுமே சேர்ந்து எடுத்துவருகிறார்கள். தி.மு.க.வில் அமைச்சர்கள் பதவிகளுக்கு இணையாக பார்க்கப்படும் மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை 117 ஆக உயர்த்த திட்டமிட்டுக்கிறார்கள். இதற்காகவே உதயநிதி இப்போது இளைஞர் அணி நிர்வாகிகளை சந்தித்துப் பேசுவதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து பேசும் உதயநிதி ஆதரவாளர்கள், ‘’இப்போது திருச்சி, விழுப்புரம், வேலூர், தூத்துக்குடி, திண்டுக்கல் போன்ற பல மாவட்டங்களில் மூத்த கட்சித் தலைவர்களின் ஆதிக்கம் அதிகரித்துவருகிறது. […]
திருவேற்காடு மக்களுக்கு சீமான் சட்டப்போராட்டம் நடத்துவாரா..?

திருவேற்காட்டில் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் வீடுகளை இடித்து அவர்களை வெளியேற்றும் முயற்சியில் அரசு ஈடுபட்டுவருகிறது. இந்த நிலையில் இவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் நாம் தமிழர் சீமான். ‘’கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களின் வீடுகளை இடித்து, திமுக அரசு வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது. மூன்று தலைமுறைகளாக வீடுகள் கட்டி வாழ்ந்து வரும் மக்களை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்கிரமிப்பாளர்களெனக்கூறி அகற்ற முற்படுவது கொடுங்கோன்மையாகும். திருவேற்காட்டில் கூவம் ஆற்றுக்கு அருகில் பெருமாள் […]
சவுக்கு சங்கருக்கு மரண பயத்தைக் காட்டிட்டாங்களா..?

’கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன்’ என்றும் தன்னை பெண் போலீஸார் தாக்கினார்கள் என்றும் தொடர்ச்சியாக சொல்லிவந்த சவுக்கு சங்கர் திடீரென, ‘நான் துன்புறுத்தப்படவில்லை’ என்று வாக்குமூலம் கொடுத்திருப்பது அவரது ஆதரவாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஒரு நாள் போலீஸ் காவலுக்குச் சென்றுவந்த சவுக்கு சங்கர், ‘போலீஸ் விசாரணையில் நான் எந்த துன்புறுத்தலுக்கும் ஆளாகவில்லை’ என்று மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இதன் பின்னணியில் பல்வேறு தகவல்கள் உலாவருகின்றன. சவுக்கு சங்கர் வாங்கிய சொத்து விபரங்கள் மற்றும் பெண்களை ஏமாற்றி பணம் […]
ராஷ்மிகா மந்தனா வந்தாச்சு. மோடி ஆர்மிக்கு குஷி

கங்கனா ரனாவத் மட்டுமே பா.ஜ.க.வுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், திடீரென நடிகை ராஷ்மிகா மந்தனா களத்தில் இறங்கி பரபரப்பு கிளப்பியிருக்கிறார். கண்ணைத் திறந்து பாருங்க, இந்தியா எத்தனை பெரிய வளர்ச்சி அடைஞ்சிருக்கு. கார் போறதுக்கு எப்படியெல்லாம் பாதை போட்டிருக்காங்க என்று புளங்காகிதம் அடைந்து பேசும் வீடியோ வெளியாகியிருக்கிறது. இதையடுத்து பா.ஜ.க.வினர் படு குஷியாகியிருக்கிறார்கள். ஒரு நடிகைக்குத் தெரிந்தது கூட மக்களுக்குத் தெரியவில்லை. ராஷ்மிகா சொல்வதைக் கேட்டு ஓட்டுப் போடுங்கள் என்று பேசி வருகிறார்கள். அதேநேரம் காங்கிரஸ் […]
எடப்பாடி பழனிசாமியை காட்டிக் கொடுப்பாரா சவுக்கு சங்கர்..?

பெண் போலீஸாரை ஆபாசமாக பேசியதில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது தொடர்ச்சியாக பல வழக்குகள் போடப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். அதோடு அவரது வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் எல்லாம் ரெய்டு நடந்திருக்கிறது. இந்த நிலையில் சவுக்கு சங்கரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை திருச்சி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. போலீஸ் காவலில் விசாரிக்க, சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் […]
முஸ்லீம்களுக்கு தனி பட்ஜெட்..? காங்கிரஸ் மீது மோடி அதிரடி

இந்துக்கள், முஸ்லீம்கள் குறித்து பேசினாலே நான் பொதுவாழ்க்கையில் இருக்கும் தகுதியை இழந்துவிடுவேன் என்று சமீபத்தில் பேசியிருந்த மோடி, மீண்டும் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் மீது குற்றம் சுமத்தியிருக்கிறார். மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம், திண்டோரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “மதத்தின் அடிப்படையில் நாட்டில் பிளவை ஏற்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது. மதத்தின் அடிப்படையில் மத்திய பட்ஜெட்டை பிரிக்கவும் அந்த கட்சி திட்டமிட்டிருக்கிறது. இதன்படி காங்கிரஸ் சார்பில் இந்துக்கள், முஸ்லிம்களுக்கு தனித்தனி பட்ஜெட் […]
சவுக்கு சங்கருக்கு காலை உடைக்கப் போறாங்க?

காவல் துறையில் பணிபுரியும் பெண்கள் குறித்து விமர்சனம் செய்ததற்காக வழக்கு தொடுக்கப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்துவருகிறார். வழக்கு மேல் வழக்கு என பல ஊர்களில் தொடுக்கப்பட்டதால் குண்டர் சட்டத்தில் போடப்பட்டார். திருச்சி முசிறி டிஎஸ்பி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில், கோவை சிறையிலிருந்து திருச்சி நீதிமன்றத்திற்கு ஆஜராக போலீசார் அழைத்து வந்தனர். பெண் காவலர்கள் புடை சூழ வேனில் அழைத்துவரப் பட்டார் சவுக்கு சங்கர். இது குறித்து நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர், […]
ரஞ்சிதாவைப் பார்க்க கைலாசாவுக்கு இ-விசா. நித்தி அழைப்பு

நாட்டில் தேர்தல் களேபரம் நடந்துகொண்டிருக்கிறது. விலைவாசி எகிறிக்கொண்டு இருக்கிறது. இந்த அதகளத்துக்கு நடுவிலும் குஜாலாக இருப்பது எப்போதும் நித்தியானந்தா மட்டும் தான். உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்ததாகவும், செத்துப்போனதாகவும் அறிவிக்கப்பட்ட நித்தியானந்தா மீண்டும் இப்போது லைம்லைட்டுக்கு வந்துவிட்டார். அது மட்டுமின்றி எங்கே இருக்கிறது என்றே தெரியாத கைலாசாவுக்கு வரச்சொல்லி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பில், ‘உங்கள் வாழ்க்கை பிரச்சனைகளுக்கு நிச்சயமான நிரந்தரமான தீர்வுகளை பெற, கைலாஸாவின் குருமஹாஸன்னிதானம் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அளிக்கும் […]
ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர். அகிலேஷ் திடீர் அறிவிப்பு

ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர். அகிலேஷ் திடீர் அறிவிப்பு பிரதமர் மோடியை பிரதமர் வேட்பாளர் என்று என்.டி.ஏ. கூட்டணி அறிவித்து பிரசாரம் செய்துவரும் நிலையில், இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டு வந்தது. நான்கு கட்டத் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில், ‘ராகுல் காந்தியே எங்கள் பிரதமர் வேட்பாளர்’ என்று அகிலேஷ் அறிவித்திருப்பது அரசியல் திருப்பமாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சமாஜ்வாதி கட்சி […]
தனுஷ் அப்படிப்பட்ட ஆணா ? கொல வெறியில் தனுஷ் ரசிகர்கள்

சமீபத்தில் ஒரு வீடியோ பேட்டியில் பாடகி சுசித்ரா பேசுகையில், ‘அவரது முன்னாள் கணவர் கார்த்திக், தனுஷ் போன்றவர்களை ஓரினச் சேர்க்கையாளர்’ என்று பேசியிருந்தார். இதற்கு கார்த்திக் குமார், ‘நான் ஓரினச் சேர்க்கையாளருக்காக குரல் கொடுப்பவராக இருக்கிறேன். இதன் அர்த்தாம் நானும் அப்படிப்பட்ட நபர் அல்ல’ என்று விளக்கம் அளித்திருக்கிறார். இந்த விஷயத்தில் தனுஷ் மீதும் சுசித்ரா கூறியிருக்கும் குற்றச்சாட்டு ஒரு தொலைக்காட்சியில் போடப்பட்டவே, தனுஷ் ரசிகர்கள் கொலவெறியில் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்துவருகிறார்கள். அதேநேரம் தனுஷ், ஐஸ்வர்யா […]

