News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

சவுக்கு சங்கருக்கு அழுத்தம் கொடுத்தது யாருன்னு தெரியுமா?

சாதாரண நபர்கள் வழக்கை நீதிமன்றம் எடுத்துக்கொள்வதற்கு மாதக்கணக்கில் இழுத்துக்கொண்டே இருக்கும். ஆனால், சவுக்கு சங்கர் விவகாரத்தில் எல்லாமே அவசரம் அவசரமாக நடக்கிறது. இது குறித்து, அதிகாரத்தில் உள்ளவர்கள் தொடர்பு கொண்டு பேசியதால், அவசரமாக வழக்கை விசாரித்தேன் என்று நீதியரசர்.சுவாமிநாதன் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். சவுக்கு சங்கருக்காக அழுத்தம் கொடுத்தது பா.ஜ.க. டெல்லி மேலிடமா அல்லது அ.தி.மு.க. முக்கியப் புள்ளியா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்திருக்கிறது. சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதற்கு எதிராக அவரது தாயார் கமலா […]

அண்ணாமலை ஆண் மகனா..? சீமான் மீண்டும் கட்சிக் கலைப்பு சவால்

மக்கள் நலக் கூட்டணி எங்களை விட அதிக வாக்குகள் பெற்றால் கட்சியைக் கலைத்துவிடுகிறேன் என்று பொதுவெளியில் சவால் விட்டவர் நாம் தமிழர் சீமான். அந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி அதிக வாக்குகள் பெற்றது. அப்போது, ‘கம்யூனிஸ்ட் கட்சி தனித்து நிற்காமல் விஜயகாந்தை எல்லாம் கூட்டி வந்ததால், அது செல்லாது’ என்று கூறிவிட்டார். இந்த நிலையில் மீண்டும் அப்படியொரு சவால் பொதுவெளியில் விட்டிருக்கிறார் சீமான். சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 3வது பெரிய […]

தி.மு.க.வுடன் உரசலா..? முல்லைப் பெரியாறுக்கு கவிஞர் வைரமுத்து போர்க்கொடி.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் ஸ்டாலின் அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறது. அதனாலே முல்லைப்பெரியாறு அணையை உடைத்துவிட்டு சிலந்தியாற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு முயற்சி செய்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி பா.ஜ.க., டி.டி.வி.தினகரன் வரையிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இத்தனை நாட்களும் தி.மு.க.வுக்கு ஆதரவாக மட்டுமே பேசிவரும் கவிஞர் வைரமுத்து முல்லைப் பெரியாறு குறித்து ஆக்ரோஷமாக கவிதை ஒன்று படைத்திருக்கிறார். தி.மு.க. அரசு மெளனம் சாதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே […]

திருவள்ளுவர் என்ன சாதி? கவர்னர் ஆர்.என்.ரவியுடன் மல்லுக்கட்டு

திருவள்ளுவர் என்ன சாதி? கவர்னர் ஆர்.என்.ரவியுடன் மல்லுக்கட்டு தேர்தலையொட்டி தி.மு.க. அரசுடன் மோதுவதை தள்ளி வைத்திருந்த கவர்னர் ஆர்.என்.ரவி, மீண்டும் திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசி பிரச்னையை ஆரம்பித்துள்ளார். இதையொட்டி வைகாசி அனுஷத்தை திருவள்ளுவர் திருநாளாக கொண்டாடுவதாக அறிவித்து மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயிலில் திருவள்ளுவரை தரிசனம் செய்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், ‘’திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசியதற்கு தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. திருவள்ளுவருக்கு காவி அணிவித்ததன் மூலம் ஆளுனர் ரவி மரியாதை […]

சிலந்தியாறுக்கு லெட்டர் எழுதினா போதுமா? ஸ்டாலினுக்கு விவசாயிகள் எதிர்ப்பு

காவிரிப் படுகையில், அமராவதி (பம்பார்) துணைப்படுகையின் ஒரு பகுதியான சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக சமீபத்தில் சில ஊடகங்களில் வந்த செய்திகளின் காரணமாக, அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பணியினை நிறுத்தி வைக்க வேண்டுமென்று வலியுறுத்தி கேரள முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். இப்படி லெட்டர் அனுப்பினால் மட்டும் போதுமா என்று விவசாயிகளும் எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியில் […]

ஒடிசாவின் மருமகன் வி.கே.பாண்டியனுக்கு ஏன் இத்தனை எதிர்ப்பு..?

–    தமிழனை மிரட்டும் இரண்டு குஜராத்திகள்   நவீன் பட்நாயக்கின் அரசியல் நகர்வுகளுக்கு பின்புலமாக கருதப்படுபவர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வி.கே.பாண்டியன். இவர் போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச் காரணமாகவே பா.ஜ.க. கூட்டணியில் இருந்து நவீன் பட்நாயக் நழுவினார் என்று சொல்லப்படுகிறது. நவீன் பட்நாயக்கின் தனிச் செயலராக நியமிக்கப்பட்டதிலிருந்து எல்லா நேரமும் முதல்வருடன் நெருக்கமாக இருக்கிறார். ஆகவே, திருமணம் செய்து கொள்ளாத நவீன் இவர் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக களம் இறக்கப்படுவார் என்று தெரிவதாலே பா.ஜ.க.வின் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார். இதையடுத்தே ஒடிஷா பூரி ஜெகந்நாதர் கோவில் பொக்கிஷ […]

நான் கடவுள் மோடிக்கு ராகுல் அடிச்ச ரிவீட்டு

பிரதமர் நரேந்திரமோடியின், ‘நான் கடவுள்’ பேச்சு நாடு முழுக்க பேசுபொருளாகியிருக்கிறது. இந்த விவகாரத்திற்கு ராகுல் காந்தி அவரது பாணியில் சிக்ஸர் அடித்திருக்கிறார். பிரதமர் மோடி, ‘என் அம்மா இருந்தவரை நான் (எல்லாரையும் போல) உடல்-ரீதியில்தான் பிறந்ததாக நம்பிக் கொண்டிருந்தேன். அம்மா காலமானதற்குப் பின்னால் என் வாழ்வின் அனுபவங்களை எல்லாம் சேர்த்துப் பார்க்கும் போது எனக்கு ஒரு விஷயம் தெளிவாகியது. என்னை இந்த பூமிக்கு இறைவன் நேரடியாக அனுப்பி இருக்கிறான். இந்த பூமியில் என்னை வைத்து இறைவன் சில […]

பா.ஜ.க. கண்ணில் விரல்விட்டு ஆட்டும் வி.கே. பாண்டியன் யாருங்க..?

‘ஒரிசாவை தமிழரால் ஆள முடியுமா? ஒரியா பேசக்கூடியவர்தான் ஆள வேண்டும்’ என்று ஒடிசாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதை அடுத்து இந்தியா முழுக்க வி.கே.பாண்டியன் என்ற பெயர் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. ஆகவே, வி.கே.பாண்டியன் பற்றி தெரிந்துகொள்வோம். வி.கார்த்திகேய பாண்டியன் என்பதன் சுருக்கமே வி.கே.பாண்டியன். இவர் ஒரிசாவின் எதிர்கால முதல்வர் ஆகிவிடுவார் என்பதுதான் அமித்ஷாவின் குற்றச்சாட்டு. வி.கே.பாண்டியன் மதுரை மேலூருக்கு பக்கத்தில் உள்ள சின்னஞ்சிறு  ஊரான கூத்தப்பன்பட்டியில் பிறந்தவர். 2000 ஆம் ஆண்டில் ஒரு […]

அதானி டெம்போவை கண்டுபிடித்த ராகுல் காந்தி

அதானி, அம்பானிகளுக்கு பா.ஜ.க. ஆதரவு காட்டிவருவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு எழுப்பிய நேரங்களில் எல்லாம் அமைதியாக இருந்தவர் பிரதமர் மோடி. அவரே திடீரென, ‘காங்கிரஸ் கட்சிக்கு அதானி டெம்போவில் பணம் அனுப்புகிறார்’ என்று குபீர் குற்றச்சாட்டு எழுப்பினார். உடனடியாக மோடி சொல்வது பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் அடுத்த சில மணி நேரங்களில் பகிரங்க சவால் விடுத்தார் ராகுல் காந்தி. “மோடி ஜி அவர்களே நீங்கள் சொல்வது உண்மையாக இருக்குமானால் இப்போதே அதானி, அம்பானி வீட்டுக்கு அமலாக்கத்துறை, […]

அண்ணாமலைக்கும் செல்வத்துக்கும் சோத்துப் போட்டி

தமிழகத்தில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் தனிப்பட்ட செல்வாக்கு கிடையாது. திராவிடக் கட்சிகளின் முதுகில் சுமந்தே பழக்கப்பட்டவர்கள். அதனால் சாதாரண நாட்களில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனும் பா.ஜ.க. தலைமையகமான கமலாலயமும் எப்போதும் காத்து வாங்கியே கிடக்கும். இந்த நிலையில் இரண்டு கட்சிகளின் மாநிலத் தலைவர்களான செல்வப்பெருந்தகையும் அண்ணாமலையும் ஆளாளுக்கு அறிக்கை போர் நடத்திவருகிறார்கள். சமீபத்தில் பிரதமர் மோடி ஒடிசா மாநிலம் புரி ஸ்ரீகெஜந்நாதர் ஆலய கருவூலத்தின் சாவி தமிழகத்தில் இருப்பதாக பேசியிருந்தார். இது, […]