News

ஸ்டாலினுக்கு 5 வியூக வகுப்பாளர்கள்..? குழப்பத்தில் அமைச்சர்கள்.

Follow Us

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் வரிசை கட்டி நிற்கும் நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் ஆம் ஆத்மியை தோற்கடித்து பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. நாளை முடிவுகள் வெளிவர இருக்கும் நிலையில், பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரவிந்த் கெஜ்ரிவால் ஜெயிலுக்குப் போவதை யாராலும் தடுக்க முடியாது.  

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதன் முடிவுகள் நாளை அறிவிக்கப்படும். தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்தவுடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளான எக்ஸிட் போல் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியிடப்பட்ட பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் 27 ஆண்டுகளுக்கு பின்னர் பாஜக டெல்லியில் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன.

எக்ஸிட் போல் நிறுவனங்களான சாணக்கியா ஸ்ட்ராட்டஜிஸ், ஜேவிசி, போல் டைரி, பிமார்க், பிப்பிள்ஸ் இன்சைட் மற்றும் பிப்பிள்ஸ் ப்ளஸ் ஆகிய 6 நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகளும் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளன. போல் டைரி மற்றும் பிப்பிள்ஸ் இன்சைட் ஆகியவை பாஜகவுக்கு 40 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளன. ஜேவிசி, சாணக்கியா ஸ்ட்ராட்டஜிஸ் மற்றும் பிமார்க் ஆகியவை பாஜக 39 இடங்களில் வெற்றி பெறும் என்று கணித்துள்ளன. ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி 31 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பிருப்பதாகக் கணித்துள்ளன.

ஆனால் இந்த எக்ஸிட் போல் முடிவுகளை ஏற்க முடியாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். அதேநேரம், டெல்லியில் நடுத்தர வர்க்க வாக்காளர்கள் அதிகம். அவர்களை குறிவைத்து பாஜ இடைவிடாது முன்னெடுத்த பிரசாரம், வாக்குறுதிகள், பெண்களுக்கான மாதாந்திர உதவித் தொகை ஆகியவை பாஜவுக்கு கை கொடுக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.  

இந்தியா கூட்டணி கட்சிகளான ஆம் ஆத்மியும் காங்கிரஸ் கட்சியும் தனித்தே தேர்தலை எதிர்கொண்டதால் பாஜ எளிதாகவே வெல்லும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது என்று தேர்தல் வியூக வல்லுநர்கள் சொல்கின்றனர். அதேநேரம், காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்கும் மரண அடியினால் ராகுல் காந்தி செல்வாக்கு மோசமாக வீழ்ச்சி அடையும் என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link