Share via:
விடுதலைப்புலிகள்
இயக்கத்தையே தங்கள் கட்சிக்கு அடையாளமாகப் பயன்படுத்தி வரும் சீமானுக்கு அதிர்ச்சி
தரும் வகையில், விடுதலைப் புலிகள்
மீதான தடை: மேலும் ஐந்தாண்டுக்கு
இந்தியாவில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்துக்கு எதிராக சீமான் போராட்டம் நடத்துவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
இலங்கையில்
தமிழா்களுக்குத் தனி ஈழம் வழங்கப்
போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பு
இந்தியாவில் ஏற்கனவே தடை செய்யப்பட்டு
இருந்தது. அந்தத் தடை முடிவுக்கு
வரவிருந்த வேளையில் மேலும் ஐந்தாண்டுக்குத்
தடையை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சு
உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழீழ
விடுதலைப் புலிகள் இயக்கத்தை சட்டவிரோத
அமைப்பு என்று அறிவிக்க போதிய
காரணம் உள்ளதா என்பதை முடிவு
செய்ய, டெல்லி உயர் நீதிமன்ற
நீதிபதி மன்மீத் ப்ரீதம் சிங்
அரோரா தலைமையில் நடுவர் மன்றம்
ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை உள்துறை
அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
“கடந்த
2009ஆம் ஆண்டு இலங்கையில் தமிழீழ
விடுதலைப் புலிகள் அமைப்பு வீழ்த்தப்பட்டது.
இருப்பினும் தனி ஈழம் கோருவதையோ
அதற்கான பிரசாரம் மற்றும் நிதி
திரட்டும் நடவடிக்கைகள் மூலம் ஈழம் அமைவதற்கான
பணிகளில் இரகசியமாக ஈடுபடுவதையோ அந்த
அமைப்பு கைவிடவில்லை என நடுவர்
மன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்து
விட்டது என்று அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டது.
அரசு அளித்த தகவலின் அடிப்படையில்,
யுஏபிஏ சட்டத்தின் கீழ், தமிழீழ விடுதலைப்
புலிகள் அமைப்பை சட்டவிரோத அமைப்பு
என்று அறிவிக்க போதிய ஆதாரம்
இருப்பதாக நடுவர் மன்றம் கூறியுள்ளது.
எனவே, அந்த அமைப்புக்கு விதிக்கப்பட்ட
தடையை நீட்டித்து மத்திய அரசு பிறப்பித்த
உத்தரவை உறுதி செய்வதாகவும் அது
அறிவித்து உள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு
தொடா்ந்து அச்சுறுத்தலாக உள்ளது என்றும் இந்தியாவின்
பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்குத் தீங்கிழைக்கும்
நடவடிக்கைகளில் அந்த அமைப்பு தொடா்ந்து
ஈடுபடுகிறது என்றும் நடுவர் மன்றம்
தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளது.
இதையடுத்து சீமான்
என்ன செய்யப்போகிறார் என்பதே கேள்வி ஆகியுள்ளது. பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகள்
மீதான ஈர்ப்பு உண்மையாக இருந்தால், இதற்காக பெரும் போராட்டம் நடத்த வேண்டும் என்று
அவரது கட்யினரே கோபப்படுகிறார்கள். சீமான் இதற்காக எதிர்ப்பு தெரிவிப்பாரா என்று அவரது
கட்சியினரிடம் கேட்டோம்.
‘’ஏற்கெனவே இந்த
விஷயத்தில் பேசியதற்காக சீமான் மீது வழக்கு இருக்கிறது. ஆகவே, எதுவும் பேசவே மாட்டார்’’
என்று பந்தயம் கட்டுகிறார்கள். பார்க்கலாம்.