Share via:
நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நில அதிர்வாக உணரப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
நேபாளத்தில் இன்று மதியம் சரியாக பிற்பகல் 2.15 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவான நிலையில் நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து 300 கி.மீட்டர் தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் அனைத்தையும் நில அதிர்வுக்கான தேசிய மையம் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ பதிவுடன் வெளியிட்டுள்ளது.
டெல்லி, ராஜஸ்தான், வடக்கு உத்தரபிரதேசம், உத்தரகாண்டிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் அதிர்ச்சியடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு தெருக்களில் தஞ்சமடைந்தனர். மேலும் அலுவலகங்களில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்கள் அனைவரும் பீதியடைந்து கட்டிடங்களை விட்டு வெளியேறி தெருக்களில் சிறிது நேரம் ஒன்றாக கூடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

