News

மோடியை வரவேற்பாரா செங்கோட்டையன்..? எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி

Follow Us

ஆப்கானிஸ்தானில் 2021 முதல் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது . இங்கு பெண்கள் சிறுமிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள், கல்வி கற்க, வேலைக்குச்செல்லத் தடை, பொது இடங்களுக்கு ஆண்களின் துணை இல்லாமல் செல்லவும் தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான் அரசு விதித்துள்ளது.

 

இதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் நர்சிங் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை பெண்கள் பயில தாலிபான் அரசு தடை விதித்துள்ளது. இந்த தடைக்கு அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

 

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்  தளப்பதிவில்  கற்றலின் முக்கியத்துவத்தை குர்ஆன் வலியுறுத்துகிறது என கிரிக்கெட் வீரர் ரஷித் கான் கூறினார் .

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் அண்மையில் மூடப்பட்டதை ஆழ்ந்த வருத்தத்துடனும் ஏமாற்றத்துடனும் பார்க்கிறேன் .

 

இந்த முடிவு பெண்களின் எதிர்காலத்தை மட்டும் அல்ல , நமது சமூகத்தின் கடமைப்புகளையும் கருமையாக பாதிக்கும் என கூறினார் . 

 

                                      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link