News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

 

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக நேற்று வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , அது ஒரு நாள் தாமதமாக இன்று வலுப்பெறும் எனவும் இது மேலும் வலுப்பெற்று 18ஆம் தேதிக்கு மேல் மேற்கு – வடமேற்கு திசையில் , தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு .

 

தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 21 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது . சென்னை தொடங்கி புதுக்கோட்டை வரை உள்ள கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களிலும், டெல்டாவிலும் 17,18-ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்து இருந்தது .

 

இதை தொடர்ந்து  வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுவடைந்து மேற்கு – வடமேற்கு திசையில்  தமிழகம் நோக்கி நகரும் . தமிழக கடற்கரையை நோக்கி அடுத்த 2 நாட்களில் நகரக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link