Share via:
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக நேற்று வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , அது ஒரு நாள் தாமதமாக இன்று வலுப்பெறும் எனவும் இது மேலும் வலுப்பெற்று 18ஆம் தேதிக்கு மேல் மேற்கு – வடமேற்கு திசையில் , தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு .
தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 21 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது . சென்னை தொடங்கி புதுக்கோட்டை வரை உள்ள கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களிலும், டெல்டாவிலும் 17,18-ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்து இருந்தது .
இதை தொடர்ந்து வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுவடைந்து மேற்கு – வடமேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகரும் . தமிழக கடற்கரையை நோக்கி அடுத்த 2 நாட்களில் நகரக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.