Share via:
நடிகர் விஜயின் லியோ திரைப்பட சிறப்பு காட்சிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உள்துறை செயலாளர் திடீரென்று கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் வருகிற உலகளவில் திரையிடப்பட உள்ளது. அதன்படி சமீபத்தில் நியூ திரைப்படத்திற்கான சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி நியூ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்த நிலையில் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. அதில் துவண்டு போயிருந்த ரசிகர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு காட்சி உத்தரவு உற்சாகம் அளித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகளிலும் ஒரே ஒரு சிறப்பு காட்சியை மட்டும் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி காலை 9:00 மணி தொடங்கி நள்ளிரவு 1:30 மணி வரை மட்டுமே திரைப்படத்தை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உள்துறை செயலாளர் அமுதாவின் இந்த திடீர் உத்தரவால் சற்று கலக்கமடைந்துள்ளனர் ஒரே ஒரு வாரத்தில் வெளியாக உள்ள லியோ திரைப்படம் இன்னும் எத்தனை அடிகளை வாங்க உள்ளது என்பது போகப்போக தெரியவரும்.

