Share via:
சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ் இப்போது லஞ்ச
ஒழிப்புத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயத்தைக் கேட்டு தவெகவினர்
ஷாக் ஆகியிருக்கிறார்கள். திமுகவினரை கைது செய்யவே அருண் நியமிக்கப்பட்டுள்ளதாக வரும்
செய்தியைக் கேட்டு திமுகவினர் குழப்பம் அடைந்துள்ளனர்.
நேற்றைய தினம் ஐபிஎஸ் மாற்றம் நடைபெற்றது. அதன்படி புதிய சட்டம்
ஒழுங்கு ஏடிஜிபியாக அன்பு நியமனம் செய்யப்பட்டார். சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண்,
லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபி ஆக நியமனம் செய்யப்பட்டார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி மகேஸ்வர் தயாள், காவல் நிர்வாக
ஏடிஜிபி ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விஜய் பயணத்துக்கு தடை போட்டார் என்று ஆதவ் அர்ஜூனால் குற்றம்
சாட்டப்பட்ட அருணுக்குப் புதிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனென்றால் அருண் திமுகவுக்கு ஆதரவாக இருந்தவர். ஸ்டாலின் மாப்பிள்ளை சபரிசனுக்கு ரொம்பவே
நெருக்கம்.
திமுகவிற்கு எதிராக பேசிய பேசியவர்களை கைது செய்தவர், திமுக அமைச்சர்களின்
செல்லப்பிள்ளையாக வளர்ந்தவர், இவர் எப்படி திமுக முன்னாள் அமைச்சர்கள் வாங்கிய லஞ்சம்
சேர்த்த சொத்துக்களை பற்றி நேர்மையாக விசாரிப்பார் மற்றும் செயல்படுவார் என்று தவெகவினர்
ஷாக் ஆகிறார்கள்.
அதேநேரம், இதற்கு காரணம் திருமாவளவன் என்று தவெகவினர் பழி போடுகிறர்கள்.
திருமாவளவன் கொடுத்த நெருக்கடியினால்தான் அவருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக பதவி
வழங்கப்படுகிறது என்று சொல்கிறார்கள். அவர் மீதே ஏகப்பட்ட லஞ்ச வழக்குகள் இருக்கையில்,
இப்படி ஒதுக்கலாமா என்று பலரும் பதறுகிறார்கள்.
அதேநேரம் விஜய்க்கு ஆதரவான சிலர், ‘’இது விஜய்யின் பக்கா மாஸ்
அரசியல். திமுகவினரைக் கொண்டே திமுகவின் முக்கியப் புள்ளியைத் தூக்குவதற்கு ஸ்கெட்ச்
போடப்படுள்ளது’’ என்கிறார்கள்.
இன்னமும் தமிழ்நாட்டில் சினிமாதான் நடக்கிறதா..?