News

பிரேமலதாவுக்கு ஒண்ணு. திமுகவுடன் காங்கிரஸ் பஞ்சாயத்து ஓவர்.

Follow Us

எல்லோரும் கேஸ் சிலிண்டருக்கு மாறுங்கள் என்று கட்டாயப்படுத்தி சேர்த்து, மானியம் கொடுத்தனர். அதன்பிறகு மானியம் கட் செய்யப்பட்டது. இப்போது விட்டுக்கு வீடு கேஸ் இருக்கிறது. இந்த நிலையில் ஈரான் போர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் சிக்கல் தொடங்கிவிட்டது.

இப்போது வீட்டு உபயோகத்திற்கு முன்னுரிமை. ஒரு சிலிண்டர் பதிவு செய்த 25 நாட்களுக்குப் பிறகே அடுத்த சிலிண்டர் பதிவு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ஹோட்டல்களின் கோரிக்கையை ஆய்வு செய்ய குழு அமைப்பு. சர்வதேச அளவில் நிலவும் அரசியல் பதற்றங்கள் நேரடியாக நம் வீட்டு அடுப்பங்கரையிலும், அன்றாட உணவிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன.

இதுகுறித்து சு.வெங்கடேசன், ‘’இன்று காலை தான் மக்களவையில் எரிசக்தி, வர்த்தகம் குறித்து ஒன்றிய அரசு வாக்குறுதி கொடுத்தது. ஆனால் இப்பொழுது வந்துள்ள செய்தி “ சமையல் எரிவாயு தட்டுப்பாடால் பெங்களூரில் மார்ச் 10 முதல் ஹோட்டல்கள் இயங்காது” என்பது. தமிழ் நாட்டிலும் இரண்டு நாட்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடாகும் எனவும் உரிய நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் தமிழ் நாட்டிலும் உணவகங்கள் மூடப்படும் என ஓட்டல்கள் சங்கத்தினர் கவலையடைந்துள்ளனர்.

வீட்டு உபயோகத்திற்காக ஒரு வாரத்திற்கு முன்பாகவே சமையல் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்த பலருக்கும் இன்னும் சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவில்லை. இப்படி மெதுவாக எரிவாயுத் தட்டுப்பாடு பிரச்னை தீவிரமடைந்து வருகிறது…’’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

இப்போது இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் போர் இன்னும் சில வாரங்கள் நீடிக்கும் என்று மதிப்பிட்டுள்ளன. ரஷ்யா, அமெரிக்க துருப்புக்கள், கப்பல்கள், விமானங்கள் மற்றும் செயற்கைக்கோள் படங்கள் இருக்கும் இடங்கள் உட்பட உளவுத்துறையை ஈரானுடன் தீவிரமாக பகிர்ந்து வருகிறது. இது மாஸ்கோவின் மறைமுக ஈடுபாட்டின் முதல் தெளிவான அறிகுறியாகும்.

சீனா இன்னும் போரில் நுழையவில்லை. பெய்ஜிங் ஈரானுக்கு நிதி உதவி, உதிரி பாகங்கள் மற்றும் ஏவுகணை கூறுகளை வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறது, இந்த நிலை நீடித்தால் கேஸ் தட்டுப்பாடு, பெட்ரோல் விலை உயர்வை யாரும் தடுக்க முடியாது. மோடி என்ன செய்யப்போகிறார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link