News

தமிழ்நாட்டை 8 பேர் கையில் குடுத்துட்டாங்க. சீனியர்கள் இல்லாமல் ஸ்டாலின் தேர்தல் பிளான்

Follow Us

கிட்டத்தட்ட ஒரு மாத காலம் சட்டப்பேரவை நடத்திமுடித்துவிட்டு, குடும்பத்துடன் ஊட்டிக்கு ஓய்வு எடுக்கப் போயிருக்கிறார். ஆனால், அவருக்கு குப்பென வியர்க்கும் அளவுக்கு மீண்டும் அமலாக்கத்துறை ரெய்டு இன்று நடத்திவ்ருகிறது.

டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். கடந்த மாதம் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

இந்த வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை குறி வைத்து டாஸ்மாக் ரெய்டு நடந்துவருகிறது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை மீது உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் விசாரணைக்குத் தடை விதிக்கப்படவில்லை. ஆகவே, சரியான ஆதாரங்களுடன் செந்தில் பாலாஜி வளைத்துப்போட ஸ்கெட்ச் போடப்படுகிறது.

சமீபத்தில் அமலாக்கத்துறை ஒரு ரெய்டு நடத்தியது. அதற்குள் இன்று காலை சென்னையில் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கிவிட்டார்கள். சென்னை தேனாம்பேட்டை, சூளைமேடு, தி.நகர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

செந்தில் பாலாஜியை மீண்டும் சிறையில் அடைக்கும் வரையில் இந்த ரெய்டுகள் ஓயப்போவதில்லை என்கிறார்கள். ஊட்டியில் நிம்மதியாக ஓய்வு எடுக்கப்போயிருக்கும் ஸ்டாலினுக்கு மட்டும் ஹாட்டாக வெயில் அடிக்கிறது. எந்த நேரமும் ஓய்வில் இருந்து சென்னைக்குத் திரும்புவார் என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link