Share via:
தமிழக அரசின் உத்தரவின்படி முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீரென்று பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி உயர்கல்வித்துறை செயலாளராக இருந்து வந்த பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் உயர்கல்வித்தறை செயலாளராக கோபால் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
* கே.நந்தகுமார் ஐ.ஏ.எஸ். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இவர் மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளராக பதவி வகித்து வந்தார்.
* தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்து வரும் சத்யபிரதா சாகு, கூடுதலாக கால்நடைத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* விஷ்ணுவர்த்தன் ஐ.ஏ.ஏஸ். வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* தர்மேந்திர பிரதாப் யாதவ் ஐ.ஏ.எஸ். தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* கைத்தறி மற்றும் துணிநூல் துறை செயலாளராக அமுதவல்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமூகநலத்துறையை பொறுத்தவரை அதன் செயலாளராக லில்ல நியமிக்கப்பட்டுள்ளார்.
* சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதியின் துணை ஆணையராக பிரத்திவிராஜ் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.