Share via:
ஜனவரி 27ம் தேதி முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின்
ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றார். அவருடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதல்வரின்
செயலர் உமாநாத், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் வே.விஷ்ணு உள்ளிட்டோர்
சென்றனர். ஸ்பெயின் நாட்டில் 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்டாலின் இன்று சென்னைக்குத்
திரும்பி விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ஸ்டாலின், ‘’என்னுடைய ஸ்பெயின் பயணம் சாதனைப் பயணமாக
அமைந்தது. முதலீட்டாளர்களுக்கு தமிழகத்தில் உள்ள தொழில் முதலீடு வாய்ப்புகளை எடுத்துரைத்தேன்.
ஸ்பெயின் நாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் தெரிவித்துள்ளன. ரூ.3440
கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாடு தனிப்பாதையில்
செல்வதாக நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளில் வந்திருப்பதை நீங்கள் படித்திருப்பீர்கள்.
அது தமிழ்நாட்டின் வளர்ச்சியை எடுத்துரைக்கிறது” என்று பெருமிதம் பொங்க தெரிவித்தார்,
அவரிடம் நடிகர் விஜய் கட்சி தொடங்கியது பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு ஸ்டாலின், “மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் மகிழ்ச்சி. நன்றி. வணக்கம்.”
எனக் கூறினார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை குறித்து கேட்கப்பட்டதும்,
‘’அந்தத உரையை நான் பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன். காங்கிரஸ் தான் ஆளுங்கட்சி
போலவும், பாஜக எதிர்க்கட்சி போலவும் பேசியிருக்கிறார்” என்று விமர்சனம் செய்தார்.
ஸ்டாலின் நாடு திரும்பியதையடுத்து இனி, நாடாளுமன்றத் தேர்தல்
பணிகள் சூடுபிடிக்கும்.