News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கேப்டன் விஜயகாந்த் கடந்த (2023) டிசம்பர் மாதம் 23ம் தேதி நிமோனியா காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். இதைத்தொடர்ந்து கேப்டனின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திலும், பின்னர் தீவுத்திடலிலும், தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திலும் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சினிமா துறையினர், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.


படப்பிடிப்புக்காகவும், சொந்த காரணங்களுக்காகவும் வெளிநாடு சென்றிருந்த நடிகர்கள் சிலர் கேப்டனின் மறைவுக்கு இணையதளம் வாயிலாக அஞ்சலி செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து தேமுதிக தலைமை அலுவலகத்தில் தமிழக அரசின் முழு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கேப்டன் வீடு அமைந்துள்ள சாலிகிராமத்துக்கும், தேமுதிக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது சமாதிக்கும் சினிமா துறையினரும், பொதுமக்களும் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கேப்டனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாதது என் வாழ்நாள் முழுவதும் கவலை அளித்துக் கொண்டே இருக்கும் என்று நடிகர் சிவகுமார் இன்று (ஜன.4) கேப்டன் சமாதி முன்பு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். உடன் அவரது மகன் கார்த்தியும் அஞ்சலி செலுத்தினார்.


இதற்கிடையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் கேப்டன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனதால் வருத்தமடைந்த நடிகரும் இயக்குனருமான சசிகுமார், தனது படப்பிடிப்பு தளத்தில் கேப்டனின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


இந்நிலையில் இன்று (ஜன.4) சென்னை சாலி கிராமத்தில் உள்ள கேப்டனின் இல்லத்திற்கு சென்ற நடிகர் சசிகுமார், கேப்டனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link