Share via:
தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக உள்துறை முதன்மை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சமய்சிங் மீனா ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளராக பிரதீப் ஐ.பிஎஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் திண்டுக்கல் எஸ்.பி.யாக பணியாற்றி வந்தார்.
டான்ஜெட்கோ ஊழல் தடுப்பு ஐ.ஜி.யாக பிரமோத் குமார் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் வாரியத்தின் கூடுதல் டி.ஜி.பி.யாக கல்பனா நாயக் ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் சந்திரன் ஐ.பி.எஸ். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மண்டல குடிமைப் பொருள் கூடுதல் தடுப்பு சி.ஐ.டி. பிரிவு எஸ்.பி.யாக சந்திரசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மகேஷ்வர் தயாள் ஐ.பி.எஸ். சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாகவும், டி.என்.பி.எல். நிறுவன தலைமை ஊழல் கண்காணிப்பு அலுவலராக ஐ.பி.எஸ். அதிகாரி அம்ரேஷ் புஜாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தர்மராஜன் ஐ.பி.எஸ். சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை தெற்கு காவல் துணை ஆணையராக பாலாஜி ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.