News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

விஜய் மனைவி சங்கீதா ஏன் மாநாட்டுக்கு வரவில்லை..? தடுத்தது யார்..?

விஜய் அரசியல் கட்சி தொடங்குவதில் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருக்கு முழு சம்மதம் இருந்தாலும், அவருடன் இருக்கும் நபர்கள் மீது நம்பிக்கை இல்லை. அதனால் ஏற்பட்ட மோதலில் பெற்றோர்கள் விலகிச் சென்றார்கள். இந்த நிலையில் மாநாட்டு மேடையில் தாய், தந்தையர் இருந்த நிலையில், மனைவி சங்கீதா பங்கேற்காதது பல்வேறு யூகங்களைக் கிளப்பியிருக்கிறது. சமீபத்தில் முரசொலி செல்வம் மறைவுக்கு நேரில் ஆஜராகி அஞ்சலி செலுத்தினார் சங்கீதா விஜய். பொதுவாக இதுபோன்ற எங்கேயும் சங்கீதாவை யாரும் பார்த்ததே இல்லை. இந்நிலையில் தி.மு.க. […]

விஜய் மாநாட்டுக்கு கூட்டம் கும்முதுங்கோ… விபத்து அதிகரிக்கிறது. சீமான் ஆதரவு, பா.ஜ.க. எதிர்ப்பு

சின்னஞ்சிறியவர்கள் எல்லாம் நடிகர் விஜய்யைப் பார்க்கும் ஆவலில் ரசிகர் மன்ற மாநாட்டுக்கு வந்து குவிய வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்த்தது போலவே கட்டுக்கடங்காத கூட்டம் கூட ஆரம்பித்து இருக்கிறது. இன்னும் நேரமாக நேரமாக என்ன நடக்குமோ என்ற பதற்றம் காவல் துறைக்கும் விஜய் கட்சி நிர்வாகிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. காலை முதல் கூட்டம் அதிகரிக்கவே  உடனே மாநாட்டு திடலில் அனுமதிக்க துவங்கி விட்டனர். கட்சியின் உறுப்பினர்கள் என்பதை தாண்டி சாதாரண பொதுமக்கள் கூட வரத் துவங்கி இருக்கிறார்கள். வயதானவர்கள், […]

விஜய் மாநாட்டுக்கு கூட்டம் கும்முதுங்கோ… விபத்து அதிகரிக்கிறது. சீமான் ஆதரவு, பா.ஜ.க. எதிர்ப்பு

சின்னஞ்சிறியவர்கள் எல்லாம் நடிகர் விஜய்யைப் பார்க்கும் ஆவலில் ரசிகர் மன்ற மாநாட்டுக்கு வந்து குவிய வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்த்தது போலவே கட்டுக்கடங்காத கூட்டம் கூட ஆரம்பித்து இருக்கிறது. இன்னும் நேரமாக நேரமாக என்ன நடக்குமோ என்ற பதற்றம் காவல் துறைக்கும் விஜய் கட்சி நிர்வாகிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. காலை முதல் கூட்டம் அதிகரிக்கவே  உடனே மாநாட்டு திடலில் அனுமதிக்க துவங்கி விட்டனர். கட்சியின் உறுப்பினர்கள் என்பதை தாண்டி சாதாரண பொதுமக்கள் கூட வரத் துவங்கி இருக்கிறார்கள். வயதானவர்கள், […]

விஜயகாந்தை மாநாட்டில் ஜெயிக்க முடியுமா? விஜய்க்கு பிரேமலதா சவால்

காலை முதலே விஜய் மாநாடு களை கட்டி வருகிறது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து மண்டபத்தில் முன்னே உட்கார்ந்துவிட்டார்கள். இந்த நிலையில், விஜயகாந்தின் முதல் மாநாடு தமிழகத்தில் சாதனை படைத்தது. அதை உடைக்க விஜய்யால் முடியுமா என்பது போல் சவால் விட்டிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த். விஜய் மாநாடு நடக்கும் சமயத்தில் பிரேமலதா போட்டிருக்கும் பதிவில், ‘’இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு! மதுரை தேமுதிக முதல் மாநாடு 150 ஏக்கர் நிலப்பரப்பில் 2.5லட்சர் சேர் போடப்பட்டு […]

நடிச்சது பிட்டு மாநாடு ஷிட்டு, ஓடிப்போன நாயி உனக்கெதுக்கு வாயி –  ரஜினி, விஜய் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் அக்கப்போர்

நாளை விஜய் மாநாடு நடக்கும் நிலையில் இன்று சமூகவலைதளம் முழுக்க ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையில் கடுமையான ஹேஸ்டேக் போராட்டம் நடக்கிறது. சூப்பரான மோதல் என்று அத்தனை கட்சியினரும் ஆனந்தமாக சண்டையை வேடிக்கை பார்க்கிறார்கள். ரஜினியின் மேனரிசத்தை அப்படியே காப்பியடித்து விஜய் அரசியலுக்கு வருகிறார் அதனால் அவர் ஜெராக்ஸ் காபி விஜய் என்று ரஜினி ரசிகர்கள் சண்டையை ஆரம்பித்து வைத்தார்கள். இதையடுத்து விஜய் நடித்த படங்களின் பிட் சீன்களை எல்லாம் பொறுக்கியெடுத்து நடிச்சது பிட்டு மாநாடு […]

மாநாட்டில் பிரபாகரன் படம் வைக்கப்போகிறாரா விஜய்..? நெருங்கும் க்ளைமாக்ஸ்

விஜய் நடத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் இறுதிக்கட்ட ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. அம்பேத்கர், பெரியார், காமராஜர் என்று தொடங்கிய கட் அவுட் இப்போது அதிகரித்துக்கொண்டே போகிறது. சகல கட்சியினரையும் அரவணைக்கும் இந்த பட்டியலில் விடுதலைப்புலிகள் பிரபாகரன் படமும் இடம்பெறப் போவதாக வரும் செய்தி நாம் தமிழர் கட்சியினரை கதிகலங்கச் செய்திருக்கிறது. தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளையும் கவர் செய்யும் வகையிலே கட் அவுட் வைத்திருக்கிறார் விஜய். திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்காஅ பெரியார் படம் வைத்திருக்கிறார். தேசிய அரசியல் பேசுபவர்களை […]

தமிழகத்துக்கு இனி 31 தொகுதிகள் தானா..? மோடியின் பலே அரசியல் கணக்கு

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குள் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் பிரிப்பதற்கான வேலையில் பிரதமர் மோடியும் தேர்தல் கமிஷனும் தீவிரம் காட்டி வருகின்றன. இதன் அடிப்படையில், இனி இந்திய பிரதமராக யார் வருவது என்பதை தென்னிந்தியர்கள் தீர்மானிக்க முடியாது என்பது தான் மிகப்பெரும் அபாயம். இந்திரா காந்தி காலத்தில் மக்கள் தொகையை குறைப்பதற்காக குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் நாடெங்கும் தீவிரம் காட்டப்பட்டது. அப்போது தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தின. ஆனால், […]

இந்துக்களுக்கு எதிரியா விஜய்..? கருணாநிதி பாணியில் மாநாட்டுக்கு மூன்றாவது அழைப்பு

’நம்முடைய மாநாட்டுக்கு குடும்பத்தோடு கிளம்பிவிட்டாயா உடன்பிறப்பே…’ என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தினம ஒரு கடிதம் எழுதி அழைப்பு விடுத்துக்கொண்டே இருப்பார். அதே பாணியில், ‘மாநாட்டுக்கு வாங்க’ என்று விஜய் மூன்றாவது கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருக்கிறார். பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதித்திருக்கும் விஜய்யை இந்து மத விரோதி என்று சித்தரிக்கும் வேலை நடக்கிறது.   2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம் வி.சாலை என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம் என்று மூன்றாவது […]

நித்தி, ரஞ்சிதாவை இனியாவது பிடிப்பாங்களா..? நீதிமன்றம் கடும் கண்டனம்.

நடிகை ரஞ்சிதாவுடன் கட்டில் லீலைகள் அம்பலமானதும் நித்தியானந்தா சிறைக்குப் போவார் என்று தான் மக்கள் நினைத்தார்கள். ஆனால், அவரோ கைலாசா என்று தனக்கென்று ஒரு தனி நாட்டை உருவாக்கிக்கொண்டு ஜாலிப் பேர்வழியாக தினம் ஒரு வீடியோ வெளியிடுகிறார். அவருடன் இருக்கும் நடிகை ரஞ்சிதாவும், ‘நான் இவருடன் இருப்பதையே விரும்புகிறேன்’ என்று வீடியோவில் பேசுகிறார். கைலாசாவின் ஜனாதிபதியாக நித்தியானந்தாவும் பிரதமராக ரஞ்சிதாவும் இருந்து லீலைகள் புரிந்துவரும் நிலையில், இவர்கள் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று உயர்நீதிமன்றம் […]

சினிமா புரமோஷன் செய்கிறாரா சீமான்.? சிக்கலில் ஒற்றை பனைமரம்

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும், ‘ஒற்றைப் பனைமரம்’ படத்தை தமிழகத்தில் திரையிடக் கூடாது என்று நாம் தமிழர் சீமான் பொங்கியெழுந்திருக்கிறார். ’ஒற்றைப் பனைமரம் படத்திற்கு விளம்பரம் கொடுப்பதற்காகவே சீமான் இப்படி பேசியிருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தியது போன்று அவமானப்படுத்தும் சீமானுக்கு இப்படி பேச உரிமையே இல்லை என்று படக்குழுவினர் கொதிக்கிறார்கள். இன்று ஒற்றை பனைமரம் குறித்து செந்தமிழன் சீமான், ‘’தாய் மண்ணின் விடுதலைக்குப் போராடி தங்கள் இன்னுயிரை இழந்த […]