News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நிர்மலா சீதாராமன் கைது செய்யப்படுவாரா..? மிரட்டல் ராணி மீது மிரட்டிப் பணம் பறித்ததாக வழக்குப் பதிவு

அன்னபூர்ணா தொழிலதிபரை மிரட்டி வரவழைத்து மிரட்டிய விவகாரம் இன்னமும் அடங்கவில்லை. ராகுல் காந்தி ஒவ்வொரு மேடையிலும் நிர்மலா சீதாராமனை மிரட்டல் ராணி என்று அம்பலப்படுத்தி வருகிறார். வரி போட்டு மக்களையும் தொழிலதிபர்களையும் மிரட்டி வந்த நிர்மலா சீதாராமன் மீது மிரட்டிப் பணம் வசூல் செய்ததாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவருடைய பதவிக்கு ஆபத்து எழுந்துள்ளது. மத்திய பாஜக அரசுதான் தேர்தல் பத்திரங்கள் நடைமுறையை அறிமுகப்படுத்தியது. இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு நிதி […]

நரபலி கொடுக்கப்பட்ட 2ம் வகுப்பு மாணவன்! என்ன நடந்தது?

தங்களுடைய பள்ளி நம்பர் ஒன் பள்ளியாக வேண்டும் என்று ஆசைப்பட்ட பள்ளி நிர்வாகம், 2ம் வகுப்பு மாணவனை நரபலி கொடுத்த கொடூர சம்பவம் உத்தரபிரதேச மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.     உத்தரபிரதேச மாநிலத்தில் டி.எல். பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இதன் பிரின்சிபல் மற்றும் நிர்வாகிகள் தங்களின் பள்ளி நம்பர் ஒன் பள்ளியாக மாறி பிசினஸ் வளர்ச்சி அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டு பிளாக் மேஜிக் உள்ளிட்ட மூடநம்பிக்கைகளில் தீவிரமாக இறங்கினர்.   […]

கேரள ஏ.டி.எம். கொள்ளையர்கள்! தமிழகத்தில் சிக்கியது எப்படி?

கேரள மாநிலத்தில் பலே கொள்ளையர்கள் 3 ஏ.டி.எம்.களில் இருந்து கொள்ளையடித்து வந்த பணத்துடன் நாமக்கல் போலீசில் சிக்கிய சம்பவம் குறித்த அதிர்ச்சி பின்னணி உங்களுக்காக.   கேரள மாநிலம் திரிச்சூரில் நேற்று (செப்.28) நள்ளிரவில் 3 ஏ.டி.எம்.களில் லட்சக்கணக்கான பணத்தை வடமாநிலத்தைச் சேர்ந்த பலே கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர். அந்த பணத்துடன் ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியில் தப்பித்து செல்வதாக நாமக்கல் மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.   இதைத்தொடர்ந்து ரோந்துப்பணிகளை போலீசார் அதிகரித்த நிலையில், […]

திருப்பதியில் ஒரு மாதத்திற்கு புது சட்டப்பிரிவு! அதிரடி காட்டும் போலீசார்!

திருப்பதி லட்டு விவகாரத்தை முன்னிட்டு அம்மாவட்டம் முழுவதும் காவல் சட்டப்பிரிவு 30 ஒரு மாத காலத்திற்கு அமல்படுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஆந்திராவில் தற்போது சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. முந்தைய ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சியில் திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் லட்டில் மிருகக்கொழுப்பு கலந்துள்ளதாக ஆய்வறிக்கை வெளியானது. இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தீவிர விசாரணை […]

செந்தில்பாலாஜிக்கு எக்கச்சக்க வரவேற்பு. சரண்டர் ஆகும் சீனியர்கள். அதிர்ச்சியில் அமைச்சர் நேரு

சிறையில் இருந்து வெளியே வந்திருக்கும் செந்தில் பாலாஜியை தியாகி என்று முதல்வர் ஸ்டாலின் பாராட்டி வரவேற்பு கொடுத்திருந்தார். இதையடுத்து அவருக்கு கட்சியில் எக்கச்சக்க மரியாதையும் மதிப்பும் கிடைத்திருக்கிறது. இன்று செந்தில் பாலாஜியை வரவேற்க வந்து நிற்கும் கூட்டத்தைக் கண்டு தி.மு.க. சீனியர்கள் அதிர்ந்து நிற்கிறார்கள். குறிப்பாக அமைச்சர் நேரு கடும் ஆத்திரத்தில் இருக்கிறாராம். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 15 மாதங்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு, நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த […]

விஜய் ரூட்டில் திருமாவளவன்..? குழப்பத்தில் விடுதலை சிறுத்தைகள்

எப்போதும் வெட்டு ஒண்று துண்டு ரெண்டு என்று தெளிவாகப் பேசும் திருமாவளவன், இப்போது வேண்டுமென்றே குழப்பமாகப் பேசுவதைக் கண்டு அவரது ஆதரவாளர்களே ஆச்சர்யம் அடைந்திருக்கிறார்கள். ஆதவ் அர்ஜுனை பேச விட்டு வேடிக்கை பார்த்த திருமாவளவன் இப்போது இரண்டாவது பெரிய சக்தியாக விஜய் வளரலாம் என்று கூறியிருப்பது மற்றும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ஆதவ் அர்ஜுன் பேசிய விவகாரத்தில் இரண்டு நாட்கள் அமைதியாக இருந்தது ஏன் என்று திருமாவிடம் கேட்டதற்கு, ’’எனக்கு கட்சி நலனும் முக்கியம். ஆதவ் அர்ஜுன் […]

43 பேரை பலிவாங்கிய புனித நீராடும் பண்டிகை! எங்கே தெரியுமா?

ஜீவித்பத்ரிகா பண்டிகை நேற்று பீகாரில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. குழந்தைகளின் நலன்களுக்காக பெண்கள் விரதம் இருந்து கொண்டாடும் இந்த பண்டிகையின் இறுதியில் குளம், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் குழுக்களாக புனித நீராடுவது வழக்கம்.   அந்த வகையில் இந்த பண்டிகையின் போது பெண்கள் மற்றும் குழந்தைகள் பீகாரில் உள்ள கிழக்கு சம்பரான், மேற்கு சம்பரான், நாளந்தா, அவுரங்காபாத், கைமூர், பக்சார், சிவாசன், ரோத்தாஸ், சரண், பாட்னா, வைஷாலி, முசார்பூர், சமஸ்திபூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் புனித […]

லட்டு விவகாரம்: திண்டுக்கல் நெய் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு!

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் நெய் நிறுவனம் மீது திருப்பதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.   திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த லட்டுக்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு சேர்த்து கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக கடந்த சில நாட்களாகவே சர்ச்சை எழுந்தது. கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன.   இது கட்சியில் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க நடக்கும் […]

காளியம்மாளை சீமான் மிரட்டும் அடுத்த ஆடியோ அவுட்.! பஞ்சாயத்தாகும் இராவணன் குடில்

காளியம்மாளை பிசிறு என்று சீமான் பேசிய ஆடியோ செம வைரலானது. அது சீமான் பேசிய ஆடியோ இல்லை என்று அவரது கட்சியினர் நினைத்தபோது, உண்மையான ஆடியோ என்று சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் ஒப்புக்கொண்டார்கள். இதையடுத்து காளியம்மாளை சீமான் சந்தித்துப் பேசினார் என்றாலும் இன்னமும் இருவரும் சமாதானம் ஆகவில்லை. இந்த நிலையில் காளியம்மாளை சீமான் எச்சரிக்கும் ஒரு ஆடியோ வெளியாகியிருக்கிறது. அந்த ஆடியோவில், மீனவ பகுதியில் காளியம்மாள் தனியாகக் கூட்டம் போட்டு அவருக்கு ஆதரவாக ஆட்களைப் பிடிப்பது குறித்துப் […]

அ.தி.மு.க.வில் சேர்கிறார் சவுக்கு சங்கர்..? முதல் வீடியோவில் கை உடைப்பு சம்பவம்..?

தி.மு.க. அரசுக்கு எதிராக முன்பை விட வீரியமாக செயல்படுவேன் என்று சவுக்கு சங்கர் கூறியிருக்கும் நிலையில் அவரை தங்கள் கட்சியில் சேர்ந்து பணியாற்றுமாறு இரண்டு கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. வரும் சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் அல்லது உதயநிதிக்கு எதிராகத் தேர்தலில் நிறுத்துவதற்கும் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. சிறையில் இருந்து விடுதலையான சவுக்கு சங்கரை அ.தி.மு.க. ஆதரவாளர்களும் பா.ஜ.க. ஆதரவாளர்களும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இவர்கள் மூலமாக அ.தி.மு.க. மேலிடத்தில் இருந்து நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ‘’தொடர்ந்து […]