News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பட்டியலின உள் ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் . பெங்களூருவில் நடந்த கருத்தரங்கில் தீர்மானம்

பட்டியலின உள் ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர‌ வேண்டும் என பெங்களூருவில் நடந்த கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   பண்டிதர் பதிப்பகம், வணங்காமுடி இயக்கம், அயோத்திதாசர் அம்பேத்கர் வாசகர் வட்டம் ஆகிய அமைப்பினர் இணைந்து ஞாயிற்றுக்கிழமை மாலை பெங்களூருவில் உள்ள தமிழ்ச் சங்கத்தில் பட்டியலின உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக கருத்தரங்கம் நடத்தினர். பத்திரிகையாளர் இரா.வினோத் தலைமையில் நடந்த இந்த கருத்தரங்கில் சமூக செயற்பாட்டாளர் முத்துபிரதீபன் […]

கனமழை எச்சரிக்கை: நாளை 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கனமழை எச்சரிக்கை  காரணமாக தமிழக அரசு, சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.   தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக இன்று (அக்டோபர் 14) உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   இது மேற்கு வடமேற்கு திசையில் வலுப்பெற்று நகர்ந்து, நாளை மற்றும் நாளை மறுதினம் […]

சவர்மா சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!

மக்களின் வேகமான வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் துரித உணவகங்களும், ஆர்டர் செய்து உணவு சாப்பிடும் பழக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மக்கள் சவர்மா, ஃப்ரைடு ரைஸ் உள்ளிட்ட துரித உணவகங்களை அதிகளவில் சாப்பிட்டு வருகின்றனர்.   புதுக்கோட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சவர்மா சாப்பிட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   புதுக்கோட்டை கீழ் நான்காம் வீதியைச் சேர்ந்த யூசுப் என்பவர் துரித உணவகத்தை நடத்தி […]

சீமான் கட்சி அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை..? ஆதாரத்துடன் போட்டுக் கொடுக்கும் தி.மு.க.

திரள்நிதி மூலம் தன்னுடைய வாழ்க்கையையும் கட்சியையும் நடத்திக்கொண்டு இருப்பவர் நாம் தமிழர் கட்சியின் சீமான். அவரது கட்சித் தலைமை அலுவலகமான இராவணன் குடில் வாங்கப்பட்ட பண பரிவர்த்தனையில் குளறுபடி நிலவியிருப்பதால் அமலாக்கத்துறை சோதனை நடத்தவேண்டும் என்று தி.மு.க.வினர் ஆதாரம் வெளியிட்டுள்ளனர். இது குறித்து தி.மு.க.வினர், ‘’தலைமை அலுவலகம் ராவணன் குடிலுடைய ஆவணப்படி மொத்த சந்தை மதிப்பு 7.5 கோடி.. ஆனால் 1.5 கோடிக்குதான் பத்திரப்பதிவு ஆகியிருக்குறது. மீதம் 6 கோடி கருப்புப்பணமாக கைமாறியுள்ளது. எனவே இதை அமலாக்கத்துறை […]

சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்தா..? நெஞ்சு வலி பின்னணி

சிறையில் இருந்து வெளியே வந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் ஆளும் தி.மு.க.வுக்கு எதிராக குறிப்பாக உதயநிதிக்கு எதிராக மீண்டும் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினார். இந்த நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டு வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சவுக்கு சங்கர் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன. பெண் போலீசார் மற்றும் காவல் துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். […]

விஜய் மாநாடு முதல் பாலில் சிக்ஸர்… ஆனால், இப்படியொரு ஆபத்து இருக்கிறதே..?

லெட்டர் பேடு கட்சித் தலைவர் என்று வர்ணிக்கப்படும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி-சாலை பகுதியில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாடு வெற்றியடையச் செய்வதற்காக பக்காவாக 200 பேர் கொண்ட குழுவை நடிகர் விஜய் நியமனம் செய்திருப்பது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரம், மாநாட்டுக்கு வானிலை ஒத்துழைக்காது என்று கிடைத்திருக்கும் செய்தி விஜய் ரசிகர்களை அதிர வைத்துள்ளது. அரசியல் […]

உயிர் பயத்துடன் வானில் இரண்டரை மணி நேரம். உண்மையில் நடந்தது என்ன..?

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மாலை 5.44 மணியளவில் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஷார்ஜாவுக்கு புறப்பட்டது. விமானத்தில் 6 குழந்தைகள் உட்பட 141 பயணிகள் இருந்தனர். விமானத்தில் ஏற்பட்ட ஹைட்ராலிக் பிரச்னை காரணமாக விமானம் மேலே ஏறியதும் உள்ளே செல்லவேண்டிய சக்கரங்கள் செல்லவில்லை. அதேநேரம், அதிக அளவு எரிபொருள் இருக்கும் நேரத்தில் உடனடியாக கீழே இறங்குவதும் ஆபத்தாக முடியலாம் என்பதால் வானில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக புதுக்கோட்டை கீரனூர், விராலிமலை பகுதிகளில் வட்டமடித்தது. […]

10 ஆண்டுகளில் 75 ரயில் விபத்துகள்..! அதானிக்காக ரயில்வே சீர்குலைக்கப்படுகிறதா..?

கடந்த 10 ஆண்டு கால மோடியின் ஆட்சியில் ரயில்வே துறை ஒட்டுமொத்தமாக சீரழிக்கப்பட்டு வருகிறது. 2014 முதல் 2024 வரை 75 விபத்துகள் நடைபெற்று எக்கச்சக்க உயிர்கள் பறி போயிருக்கின்றன. இந்த விபத்துகளில் இருந்து அரசு எந்த பாடமும் படிக்கவே இல்லை, இப்படி விபத்துகள் ஏற்படுவதை விட தனியாரிடம் கொடுத்துவிடலாம் என்று மக்களே சொல்லும் நிலையை உருவாக்கி, அதானி கையில் ரயில்வே துறையை ஒப்படைக்கப் போகிறது மோடி அரசு என்பது தான் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது. கர்நாடக […]

மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு திடீர் கடிதம்!

தமிழகத்தின் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.   தமிழகத்தில் வருகிற 16ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது தமிழக அரசு.   லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடல் கர்நாடகா மற்றும் கோவா கடற்கரை […]

யாருய்யா இந்த முரசொலி செல்வம்..? எல்லா வி.ஐ.பி.களும் அஞ்சலி செலுத்துறாங்க

முரசொலி செல்வம் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் தி.மு.க.வின் பரம விரோதியான அண்ணாமலை தொடங்கி சீமான் வரையிலும் அஞ்சலி பதிவு போடுகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் நேரடியாகவே போய்விட்டார். கட்சி தொடங்காத விஜய்யின் மனைவி சங்கீதா நேரடியாகச் செல்கிறார். அரசியல், சினிமா எதிலும் முகம் காட்டாமல் இத்தனை பேரை இழுத்திருக்கும் முரசொலி செல்வம் யார்.? முரசொலி செல்வம். மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞரின் மருமகன். முரசொலி மாறனின் இளைய சகோதரர். மூத்த மகள் செல்வியின் கணவர். இந்த […]