News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சென்னை கல்லூரி மாணவி கொலை! குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்!

சென்னை பரங்கிமலையில் ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த கொலையாளிக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி சத்யபிரியா என்ற கல்லூரி மாணவி, கல்லூரிக்கு செல்வதற்காக சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ் என்ற இளைஞர், மாணவி சத்யபிரியாவுடன் பேசிக் கொண்டிருந்த போது சண்டை முற்றி, அவரை ஒடும் ரெயிலில் இருந்து […]

வருண்குமாருக்குப் பதவி உயர்வு… சீமானுக்குச் சிக்கல் ஆரம்பம்

தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பு படி வருண்குமார்  மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே ஆகிய  இருவருக்கும் ஒரே நேரத்தில் டி.ஐ.ஜியாக பதவி உயர்வு கிடைத்துள்ளது. திருச்சி எஸ்.பியாக இருந்த வருண்குமார் திருச்சி டி.ஐ.ஜியாக மாறியிருக்கிறார். திண்டுக்கல் சரக டி.ஐ.ஜியாக வந்திதா பாண்டே  நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் சீமான் டீமை கலங்க வைத்திருக்கிறது. ஏனென்றால் சீமானுக்கு எதிராக டிஐஜி வருண்குமாரின் கிரிமினல் அவதூறு வழக்கு நாளை திருச்சியில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் சீமான் நேரில் […]

கவர்னரை மிரட்டப்போகிறாரா விஜய்..? வில்லங்கம் கிளப்பும் உடன்பிறப்புகள்

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் ஊரே பற்றி எரியும் நிலையிலும் அமைதியாக இருந்த நடிகர் விஜய் இன்று கைப்பட ஒரு கடிதம் எழுதி ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி கவர்னரையும் சந்தித்து நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்கப்போவதாகத் தெரியவந்துள்ளது. இன்று விஜய் எழுதியிருக்கும் கடிதத்தில், ‘’அன்பு தங்கைகளே… நான் ஒரு அண்ணனாக மன அழுத்தத்திற்கு ஆளாகிறேன். பெண்களின் பாதுகாப்பு குறித்து நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப்பயனுமில்லை என்பது தெரிந்ததே. எல்லா சூழல்களிலும் நிச்சயமாக நான் உறுதியாக […]

பணியிடமாற்றம் செய்யப்பட்ட 63 ஐ.பி.எஸ். அதிகாரிகள்! தமிழக அரசு அதிரடி!

தமிழகத்தில் 63 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், 3 ஏடிஜிபிக்கள் டிஜிபிக்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். அதன்படி திருச்சி எஸ்.பி.யாக இருந்த வருண்குமார், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏ.டி.ஜி.பி.யாக இருந்த மகேஷ்குமார் அகர்வால் தற்போது ஆயுதப்படை சிறப்பு டி.ஜி.பி.யாகவும், ஏ.டி.ஜி.பி.வெங்கட்ராமன், நிர்வாகப்பிரிவு சிறப்பு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். தலைமையிட ஏ.டி.ஜி.பி. வினித்தேவ் வாங்கடேவுக்கு டி.ஜி.பி.யாக பதவி […]

யார் அந்த சார்..? எடப்பாடி பழனிசாமியிடம் அண்ணாமலை டோட்டல் சரண்டர்.  

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது குற்றம் சுமத்தியது மட்டுமின்றி எடப்பாடி பழனிசாமியின் அமைச்சர்கள் பற்றி ஏடிஎம்கே ஃபைல்ஸ் வெளியிடுவேன் என்று அதிரடி கிளப்பிவந்தார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. அதனால் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி வந்துவிட்டார். அதன் பிறகும் தொடர்ந்து அ.தி.மு.க. மீதும் தாக்குதல் நடத்திவந்தார். இந்த நிலையில் திடீரென அண்ணாமலை உறவினர்கள் மீது ஐ.டி. ரெய்டு பாய்ந்தது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் தன்னையே சாட்டையால் அடித்துக்கொண்டு பரபரப்பைக் […]

ஆளுக்கொரு பெட்டி வாங்க பா.ம.க. நாடகமா..? எடப்பாடிக்கு ராமதாஸ். அண்ணாமலைக்கு அன்புமணி.

ஒவ்வொரு தேர்தலுக்கும் ஏதேனும் ஒரு கட்சியிடம் பா.ம.க.வை அடமானம் வைத்து பெட்டி வாங்கும் கட்சி என்று டாக்டர் ராமதாஸ்க்கு நல்ல பெயர் உண்டு. இப்படி ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு பெட்டி மட்டும் வாங்குவது போதாது, ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளிடம் பெட்டி வாங்குவதற்காகவே ராமதாஸும் அன்புமணியும் வெளிப்படையாக மோதல் நடத்தி நாடகம் போடுவதாக ஒரு பேச்சு உலவுகிறது. இதுகுறித்துப் பேசும் பா.ம.க. மூத்தபுள்ளி ஒருவர், ‘’கட்சி விவகாரங்களில் ராமதாஸ்க்கும் அன்புமணிக்கும் அவ்வப்ப்போது மோதல் நடப்பது உண்டு. அது […]

இப்ப கட்சியை யாரு வைச்சிருக்கா..? பா.ம.க. வாரிசு சண்டையில் தலை சுற்றும் நிர்வாகிகள்

மாப்பிள்ளைக்கு சர்வ சுதந்திரம் கொடுத்திருக்கும் தி.மு.க. ஆட்சியைப் போன்று பா.ம.க.விலும் மாப்பிள்ளைக்கு அதிகாரம் கொடுக்க முயன்ற டாக்டர் ராமதாஸின் முயற்சிக்கு சொந்த மகனே கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் நிர்வாகிகள் தலை சுற்றிக் கிடக்கிறார்கள். புதுச்சேரியில் நடைபெற்ற பா.ம.க.வின் பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞர் அணி தலைவராக முகுந்தன் பரசுராமனை அறிவித்தார் டாக்டர் ராமதாஸ். அதாவது ஜி.கே. மணியின் மகன் தமிழ்க்குமரன் கட்சியில் இருந்து விலகியதால் காலியான அந்த பதவிக்கு முகுந்தனை […]

மேடையில் வெடித்த ராமதாஸ் அன்புமணி மோதல்!

புதுச்சேரி மாநிலம் பாட்டானூரில் பா.ம.க. புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிராமதாஸ், நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது மாநில இளைஞர் அணி நிர்வாகியாக முகுந்தன் என்பவரை ராமதாஸ் நியமித்ததை எதிர்த்து அன்புமணி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.   இந்த முகுந்தன் என்பவர்  ராமதாசின் மூத்த மகளான காந்திமதியின் மகன்தான். மேலும் இவர் கட்சியில் இணைந்து 4 மாதங்கள் மட்டுமே ஆகின்ற நிலையில் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. […]

எஃப்.ஐ.ஆரில் சிக்கிட்டாங்க 14 பேர்… சிறப்பு புலானாய்வுக் குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவு

அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில், அதிமுக வழக்கறிஞர் டீம் வரலட்சுமி நீதிமன்றத்தில் வைத்த கோரிக்கையை ஏற்று தானாக முன் வந்து விசாரித்தது உயர்நீதிமன்றம்.. போலீஸாருக்கும் அரசுக்கும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்குகளை விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, உத்தாவிட்டுள்ளது. நீதிமன்றம் கண்காணிப்பில் விசாரிக்க முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்க முடிவு. […]

விஜயகாந்த் குருபூஜையில் தடை மீறிய பிரேமலதா… பன்னீர் ஆஜர். எடப்பாடி எஸ்கேப்.. விஜய்..?

விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று காலை 8.30 மணிக்கு மெளன அஞ்சலி மற்றும் பேரணி நடைபெறும் என பிரேமலதாஅறிவிப்பு விடுத்ததையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்த நிலையில், பரபரப்பான சாலையில் பேரணிக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டது. மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்ட பின்னரும் தொண்டர்கள் கலையாமல் அங்கேயே நின்றார்கள். அதோடு சாலை மறியலில் ஈடுபடும் வகையில் ரோட்டில் அமர்ந்தார்கள். இதையடுத்து […]