News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழகத்தில் சாலை விபத்து மரணம் மளமள குறைவு… செல்போன் பேசிய 4.20 லட்சம் பேர் மீது வழக்கு… சங்கர் ஜிவால் ஆக்ஷன் ரிப்போர்ட்

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2024ம் ஆண்டு சாலை விபத்து மரணங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. திட்டமிட்டு செயலாற்றி வருவதால், வரும் ஆண்டுகளில் விபத்துகள் இல்லாத தமிழகம் என்ற இலக்கை நோக்கி நகர்வதாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உறுதி அளித்திருக்கிறார். இதுதொடர்பாக டி.ஜி.பி சங்கர் ஜிவால் விடுத்திருக்கும் அறிக்கையில், “மக்கள் தொகை அதிகரிப்பு, வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற சவால்கள் தொடர்ந்து இருந்தாலும் தமிழகம் முழுவதும் விபத்துகளை குறைப்பதற்காக பல்வேறு ஆக்கபூர்வ நடவக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. […]

அஜித்துக்கு பத்ம பூஷண்…  ஜன நாயகன் விஜய் வாழ்த்து சொல்ல மாட்டாரா..?

விஜய்யை விட அஜித் நாட்டு மக்களுக்காக அப்டியென்ன சேவையாற்றினார்… அவருக்கு எதுக்கு பத்ம விருது என்று விஜய் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்துவந்த நிலையில் இன்று அவரது கடைசி படத்தின் முதல் போஸ்டர் வெளியீட்டைக் கொண்டாடி வருகிறார்கள். திரைப்படம் மட்டுமின்றி டிரோன், ரேஸ் என்று பல விஷயங்களிலும் கவனம் செலுத்துபவர். அதோடு எந்தவித பின்புலமும் இன்றி சினிமாவுக்குள் வந்து தன்னுடைய விடாமுயற்சியால் இன்று விஸ்வரூப வெற்றியை பெற்று கோலிவுட்டின் தனிப்பெரும் ஆளுமையாக உருவெடுத்துள்ளார் அஜித்குமார். இவரது திரைப்பயணத்தில் […]

அண்ணாமலைக்கு மீண்டும் ஒரு சான்ஸ்.? தமிழக பா.ஜ.க.வில் உச்சகட்ட மோதல்

இம்மாத இறுதிக்குள் தமிழக பா.ஜ.க. தலைவர் நியமனம் நடைபெற உள்ளது. இந்த பதவிக்கு தமிழிசை செளந்தராஜன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் கடுமையாக போராடி வரும் நிலையில், மீண்டும் அண்ணாமலையை நியமிக்கவே வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் தமிழக பா.ஜ.க.வின் மாவட்டத் தலைவர்கள் நியமனம் நடைபெற்றது. போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைவருமே போட்டியின்றி நியமனம் செய்யப்பட்டுவிட்டார்கள். அடுத்தகட்டமாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் தேர்வு நடக்கிறது. இந்த பதவிக்கு கடுமையான போட்டி இருந்தாலும், […]

சீமானின் பிக்காலிப்பயல் விமர்சனம்… அடுத்து பிரபாகரனை என்ன சொல்வார்..?

முன்பு பெரியாரை தங்கள் வழிகாட்டி என்று பெருமைப்படுத்திய சீமான் இப்போது பெரியாரை கடுமையாக அவமதித்து வருகிறார். இந்த விவகாரத்தில் சீமானுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வெளியாகின. பிரபாகரன் உறவினரை சீமான் விமர்சனம் செய்தது வைரலாகிவருகிறது. பெரியார் எதிர்ப்பு நிலையைச் சீமான் எடுத்த பிறகு கடும் விமர்சனத்துக்கு ஆளானார். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தது தான் தான் என இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கூறியது கடும் சர்ச்சையை உருவாக்கியது. அதேநேரம், […]

வேங்கைவயல் டீட்டெய்ல்டு போலீஸ் ரிப்போர்ட். கூட்டணியை உடைப்பாரா திருமா..?

வேங்கைவயல் வழக்கு சவால் நிறைந்தது. கத்தி மீது நடப்பது போன்று காவல் துறை கையாண்டதாகச் சொல்கிறார்கள். ஏனென்றால், ரத்த மாதிரி தராதது, டிஎன்ஏ டெஸ்ட்களுக்கு ஒத்துழைக்காமை மற்றும் உள்ளுர் ஊர் கட்டுக்கோப்பு ஊர் கட்டுப்பாடு என எக்கச்சக்க கட்டுப்பாடுகளைத் தாண்டி காவல் துறை குற்றவாளிகளை அடையாளம் காட்டியிருக்கிறது. இதற்காக 87 செல்போன் டவர்களுக்கு உட்பட்ட 1லட்சத்துக்கும் மேற்பட்ட செல்போன் அழைப்புகளை ஆராய்ந்து, 293 சாட்சிகளிடம் விசாரித்து, இதில் சந்தேகத்திற்குரிய மூன்று நபர்களின் மொபைல்களில் இருந்து அழிக்கப்பட்ட புகைப்படங்கள் […]

வேங்கை வயல் ஆதாரங்கள் வெளியானது எப்படி..? ஆவேசத்தில் திருமாவளவன்

வேங்கை வயல் விவகாரத்தில் இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்று பல கட்சிகள் மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டிவந்த நிலையில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. செல்போனில் அழிக்கப்பட்ட காட்சிகள் மீட்டெடுக்கப்பட்டதாக ஆடியோ, வீடியோ, புகைப்பட்டங்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையிலும், சிபிஐ விசாரணை கேட்டு திருமாவளவன் ஆவேசம் காட்டியிருக்கிறார். அதேநேரம், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஆடியோ, வீடியோ வெளியானது எப்படி என்று கேள்வி எழுந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் வழக்கு, அண்ணா நகர் சிறுமி […]

நிர்வாகிகளுடன் விஜய் சந்திப்பு. அ.தி.மு.க. கூட்டணிக்கு ரெடியா?

பனையூர் பங்களாவில் இருந்து பாலிடிக்ஸ் செய்துவருகிறார் என்று விஜய் மீது விமர்சனம் வைக்கப்பட்ட நிலையில், பரந்தூருக்கு வந்து ஒரு பரபரப்புக் கிளப்பினார். இதையடுத்து இன்று மாவட்ட நிர்வாகிகளை நேரடியாக சந்தித்துப் பேசுகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு முறைப்படி நடைபெற்றுள்ளது. இப்படி தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் விஜயிடம் கொடுக்கப்பட்டது. அதில் உள்ளவர்களை பகுதி பகுதியாக சந்தித்து விஜய் நேர்காணல் செய்து அதன் பிறகு நிர்வாகிகள் அறிவிக்கப்பட இருக்கிறார்கள். அதன்படி இன்று அரியலூர், சென்னை, செங்கல்பட்டு, […]

சீமானை சுத்தி நின்னு அடிக்கிறாங்க. மதிவதனி அக்கா சீட்டிங், ஆயுத வழக்கு, கட்சி விலகல், போஸ்டர் யுத்தம்

சீமான் என்ன சொன்னாலும் அதை ரசிப்பதற்கு ஒரு கூட்டம் இருந்துவந்தது. அதனால்தான் ஆமைக்கறி தொடங்கி எக்கச்சக்க கதைகள் சொல்லிவந்தார். விஜய் கட்சி ஆரம்பித்து பெரியாரைத் தலைவர் என்றதும், அதை எதிர்ப்பதற்காகவே பெரியார் மீது தாக்குதல் நடத்தினார் சீமான். இப்போது புலி வாலை பிடித்த கதையாக தொடர் சிக்கலுக்கு ஆளாகி வருகிறார். திடீரென சென்னையில் எக்கச்சக்க போஸ்டர்கள் முளைத்தன. அந்த போஸ்டரில், ‘மானங்கெட்ட உன்னோடு இனியும் இருக்கப்போவதில்லை’, ‘அண்டப்புளுகனோடு இனியும் இருக்கப்போவதில்லை’ என்று மறைமுகமாக சீமானை திட்டியிருந்தார்கள். இதை […]

டங்ஸ்டன் ஏலம் ரத்துக்கு எத்தனை பேர் சொந்தம் கொண்டாடுறாங்க. உண்மையான வெற்றி யாருக்கு?

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு முறைப்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதையடுத்து மத்தியில் ஆளும் பா.ஜ.க., மாநிலத்தில் ஆளும் தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்ட், பா.ம.க. என்று எல்லா கட்சியினரும் இந்த வெற்றிக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் நேரடியாகவே, ‘’நான் ஆட்சியில் இருக்கும் அரை ஒருபிடி மண்ணைக்கூட அள்ள விட மாட்டோம் என்று உறுதி கொடுத்தேன். ஏலத்தை முழுமையாக ரத்துச் செய்யும்வரை போராட்டம் தொடரும் என்கிற உறுதிக்கும் முன்னால் […]

பிரபாகரனை ஜாமீனில் எடுத்தது யார்..? வரலாற்றை மாற்றலாமா தி.மு.க.?

பெரியார் விவகாரத்தை சீமான் கையில் எடுத்தது தொடங்கி தி.மு.க.வும் அதன் துணை அமைப்புகளும் சீமானுக்கு கடுமையாக பதிலடி கொடுத்துவருகிறார்கள். இந்நிலையில், பிரபாகரனை ஜாமீனில் எடுத்ததாக தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுவது பொய் என்று அம்பலப்படுத்தியிருக்கிறார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். சீமான் பற்றி விமர்சனம் செய்த ஆர்.எஸ்.பாரதி, ‘’சீமான் சொல்றான் நான் பதில் பேசக்கூடாதாம், முதல்வரும்,துணை முதல்வரும் இவனுக்கு பதில் சொல்ல வேண்டுமாம்.அவர்களின் கால் செருப்புக்கு நீ சமமாவாயா? 1980 களில் எம்ஜிஆரால் பிரபாகரன் கைது செய்யப்பட்ட போது அவரை […]