சீரியஸாகும் அண்ணாமலையின் கோஷ்டி அரசியல்… விஜய்யை அழைக்கும் நயினார் நாகேந்திரன்

அண்ணாமலை தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த வரை வேறு யாரும் அறிக்கை தர முடியாது. பேட்டி கொடுக்க முடியாது. அப்படி யாராவது செய்தால் அண்ணாமலை டீம் வம்பு செய்து சந்திக்கு இழுத்துவிடும். ஆனால், நயினார் நாகேந்திரன் தமிழக பா.ஜ.க. தலைவராக இருக்கும்போது, எல்லா விஷயங்களிலும் அவரை முந்திக்கொண்டு அறிக்கை விடுவது நயினார் நாகேந்திரனுக்கு கடுமையான எரிச்சலைக் கிளப்பியிருக்கிறது. இன்று அண்ணாமலை, ‘’சட்டம் ஒழுங்கு சீர்குலைவும், போதைப் பொருள் புழக்கமும், கள்ளச்சாராயமும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், […]
தம்பி நல்லா காமடி பண்றாப்ல… விஜயபிரபாகரன் அண்ணி யாரு தெரியுமா?

எல்லோரும் எதிர்பார்த்தபடியே தே.மு.தி.க. பொதுச் செயலாளராக பிரேமலதா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன் கட்சியின் இளைஞர் அணி செயலாளராகச் நியமிக்கப்பட்டுள்ளார். கழகத் துணைச் செயலாளராக இருந்த எல்.கே.சுதீஷ் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்குப் பிறகு விஜயபிரபாகரன் பேசிய விவகாரங்கள் எல்லாமே காமெடி வைரலாகிறது. ‘’ஏழு ஆண்டுகள் காத்திருந்தேன். இந்த பதவியை எனக்கு தொண்டர்களே கொடுத்தார்கள். அண்ணியாரின் தியாகத்தை எல்லோரும் அறிவார்கள். அரசியலில் முதன் முதலாக பேண்ட் அணிந்தது நான். என்னை காப்பியடித்தே […]
அமித்ஷாவிடம் அண்ணாமலை ஆதரவாளர்கள் பட்டியல்… நயினார் நாகேந்திரன் ஆப்பு அரசியல்

அண்ணாமலை இல்லேன்னா தமிழக பா.ஜ.க.வுக்கு யாரும் ஓட்டு போட மாட்டார்கள் என்று அ.தி.மு.க. கூட்டணியை உடைப்பதற்கு அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சிலர் கடுமையான முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். அதிமுகவை எதிமுக என்று அதாவது எடப்பாடி திமுக என்று எழுதி கூட்டணியை உடைக்கும் வேலையை கட்சிக்குள்ளேயே செய்கிறார்கள். இவர்கள் மீது தான் நடவடிக்கை எடுத்தால் கட்சிக்குள் முணுமுணுப்பு எழும் என்பதால் நேரடியாக அமித்ஷாவிடம் பட்டியல் ஒப்படைத்திருக்கிறார் நயினார் நாகேந்திரன். கடந்த 28ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பகல் […]
உதயநிதியுடன் மோதுவாரா விஜய்…? மூன்று தொகுதிகள் ரெடி

துணை முதல்வர் உதயநிதியுடன் நேருக்கு நேராகப் போட்டியிட்டு அவரை விஜய் ஜெயிக்க வேண்டும் என்பது தவெக தொண்டர்களின் பெருவிருப்பமாக இருந்துவருகிறது. ஆனால், அப்படி மோதல் நடக்கும் பட்சத்தில் கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்னை எழுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் அந்த தொகுதியை விஜய் கை விட்டதாகத் தெரிகிறது. எனவே, சட்டமன்றத் தேர்தலில் கீழ்க்கண்ட மூன்று தொகுகளில் இருந்து ஒன்றை தேர்வு செய்து மக்களின் பல்ஸ் பார்க்கும் வகையில் சர்வே எடுக்கப்பட்டு வருகின்றன. ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் […]
விஜய்யைக் கடுப்பேற்ற அஜித்துக்கு வாழ்த்து. எடப்பாடி பழனிசாமி தேர்தல் கணக்கு

குடியரசுத் தலைவரிடமிருந்து பத்மபூஷண் விருது பெற்றுள்ள அஜித்குமாருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற எதிர்க்கட்சிக் கொறடா எஸ்.பி. வேலுமணி என்று வரிசையாக பாராட்டு தெரிவிக்கிறார்கள். தி.மு.க. தரப்பில் இருந்து இதற்கு ஒரு வாழ்த்து கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘’தன் திரைத் துறை சாதனைகளுக்காக இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மபூஷண் விருது பெற்றுள்ள அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார். […]
அண்ணாமலை அமைச்சர் கனவு அவுட்… அடுத்து என்ன பதவி தெரியுமா..?

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தாலும் அண்ணாமலை தொடர்ந்து தமிழக அரசியலை விமர்சனம் வைத்து வருகிறார். ஆந்திராவில் இருந்து அண்ணாமலை எம்.பி.யாகி, அடுத்து அமைச்சராகிவிடுவார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அதற்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. இதையடுத்து அண்ணாமலை ஆதரவாளர்கள் கொதிநிலைக்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து பேசும் பா.ஜ.க.வினர், ‘’அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்ட நேரத்தில், அவர் தேசிய அரசியலில் பயன்படுத்திக்கொள்ளப்படுவார் என அமித்ஷா அப்போது […]
இந்திய நாட்டை பகிரங்கமாக மிரட்டிய பாகிஸ்தான் அமைச்சர்!

விஜே பிரியங்கா டிஜே வசியோட கல்யாணம் லேட்டஸ்டாதான் ரொம்ப கிராண்டா நடந்து முடிஞ்சுது. 10 வயசு வித்தியாசமா இருந்தாலும் மிகப்பெரும்புள்ளியதான் கல்யாணம் பண்ணியிருக்காங்கன்னு சிலரும், பாடிஷேமிங் பண்ணி சிலரும் கமெண்ட்டுகள தெறிக்கவிட்டாங்க. ஆனா போங்கடா டேய்னு அதையெல்லாம் ஊதிதள்ளிட்டு மனைவி பிரியங்காவ லண்டனுக்கு அழைச்சிட்டு போயிட்டாரு காதல் கணவர் வசி. லண்டன்லதான் இனிமே கணவரோட பிரியங்கா இருக்கப் போறாங்க. சோ விஜே ஒர்க்குக்கு எண்டு கார்டு போட்டுட்டாங்கன்னு டாக் போகுது. ஒரு பக்கம் டிஜேவா இருக்கிற வசி […]
சிம்லா ஒப்பந்தம் போன்று கச்சத் தீவு ஒப்பந்தம் ரத்து செய்யவேண்டும்..? மோடிக்கு கோரிக்கை

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்திய அரசு நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் அரசு சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்கிறது. சிந்து ஒப்பந்தத்தை பாகிஸ்தானால் ரத்து செய்ய முடியும் என்றால் இலங்கையுடன் போட்டுக்கொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாதா, எப்போது ரத்து செய்யப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ‘’பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் துணை போகுமேயானால் அதை உலகளவில் அம்பலப்படுத்த வேண்டும். அவர்களை அந்நியபடுத்த வேண்டுமே […]
விஜயலட்சுமிக்கு காளியம்மாள் ஆதரவு? விஜய் பக்கம் காத்து வீசுது

விஜய் கட்சியில் சங்கமிக்கப்போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட காளியம்மாள் இன்னமும் எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக இருக்கிறார். விஜய் கட்சியில் அவர் கேட்ட தொகை கொடுக்கப்படாததால் அங்கு சேர்வது தள்ளிப் போகிறதா என்பது குறித்து நாளிதழின் கேள்விக்குப் பதில் கூறியிருக்கும் காளியம்மாள் சீமான் குறித்தும் விஜயலட்சுமி குறித்தும் விலாவாரியாகப் பேசியிருக்கிறார். அந்த பேட்டியில் காளியம்மாள், ‘’இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே என்னைப் பற்றி தவறான தகவல்கள் தலைமைக்கு தெரிவிக்கப்படுவதாக தெரிய வந்தது. அப்போது அண்ணன் சீமானை சந்தித்து, “என்னைப் பற்றி […]
எடப்பாடி பழனிசாமிக்கு 170. அமித்ஷாவுக்கு 100. குழப்பத்தில் தேர்தல் கணக்கு

பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லிக்கொண்டே இருந்த எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு ஒப்புக்கொண்டு அமித்ஷாவுடன் ஒரே மேடையில் காட்சி அளித்துவிட்டார். இது குறித்து எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளை வரவழைத்து சமாதானம் செய்தும் அனுப்பிவிட்டார். இப்போது அ.தி.மு.க. பெரும்பான்மை பெரும் வகையில் தேர்தலில் நிற்பதற்குத் தேவையான திட்டமிடலில் சீரியஸாக எடுக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம் அமித்ஷா தெரிவித்தார் என்றாலும், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் […]

