அண்ணாமலையை நீக்கினால் கட்சிக்குள் களேபரம் வருமா..? டெல்லி பா.ஜ.க. விசாரணை

தமிழகத்துக்குப் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த நிலையில், அண்ணாமலையின் பதவி பறிக்கப்பட்டால் அதற்கு மாவட்டத்தலைவர்கள் அல்லது முக்கியப் புள்ளிகள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறதா என்று பா.ஜ.க. மேலிடம் தீவிரமாக விசாரித்துவருகிறது. பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை கடந்த 2021ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். மூன்று ஆண்டு பதவிக் காலம் முடிந்த பிறகும் அண்ணாமலையே மீண்டும் தலைவராக வர வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்ற கோணத்தில் பா.ஜ.க. நகர்கிறது. […]
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைக் காப்பாற்றுவாரா மோடி..? அவசர சட்டத்துக்கு ஆலோசனை

ஆளுநர் ஆர்.என்.ரவியின் அடாவடி நடவடிக்கைகளுக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் எல்லோரும் வரவேற்றுள்ளார்கள். ஆனால் ஆளும் பா.ஜ,க. அரசு இதனை கடும் பின்னடைவாகப் பார்க்கிறது. ஆகவே, இந்த தீர்ப்புக்கு எதிராக சிறப்புச் சட்டத்தை நிறைவேற்ற மோடி ஆலோசனை செய்வதாகத் தெரியவந்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 22 மசோதாக்களின் மீது எந்த முடிவையும் எடுக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்திருந்தார். இவற்றில் […]
சீமானுடன் அண்ணாமலை கூட்டணி..? ஆளுக்கு இரண்டை வருடம் முதல்வர் பதவி.?

பொய் பேசுவதற்கும் அரைகுறை தகவல்கள் பேசுவதற்கும் சீமான், அண்ணாமலை என இருவரும் கொஞ்சமும் கூச்சப்பட மாட்டார்கள். இன்னைக்கு ஒரு முக்கியமான ஃபைல் ரிலீஸ் பண்றேங்கன்னா என்று சொல்லும் அண்ணாமலை அடுத்த நொடியே அதை மறந்துவிடுவார். அதேபோல் சீமானும் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிவைப்பார். சமீபத்தில் வக்பு சட்டத்திருத்த மசோதாவில் 22 தி.மு.க. உறுப்பினர்கள் மட்டுமே எதிர்த்து ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். மீதம் இருப்பவர்கள் எங்கே போனார்கள் என்று ஆவேசம் காட்டினார். இதை வைத்து உடன்பிறப்புகள் சீமானை செமையாக கலாய்த்துவருகிறார்கள். […]
ஆளுநர் ஆர்.என். ரவி ராஜினாமா செய்வாரா..? சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் விளாசல்

தமிழக அரசு இரண்டாவது முறை அனுப்பிய 10 மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி நிறுத்திவைத்தது தவறு – கவர்னருக்கு என தன்னிப்பட்ட அதிகாரம் இல்லை என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தமிழ்நாடு அனுப்பிவைக்கும் தீர்மானங்களை அப்படியே நிறுத்தி வைத்து ஆட்டம் காட்டிய ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் […]
நயினார் நாகேந்திரனுக்கு யோகம் அடிக்கிறது.? அண்ணாமலை அப்செட்

அண்ணாமலையை தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து மாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கையை, அண்ணாமலையே கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துவருகிறார். சமீபத்தில் மீடியாவிடம் பேசிய அண்ணாமலை, ‘’தமிழக பாஜ தலைவர் ரேசில் நான் இல்லை’’ என்று அறிவித்தார். அதன் உச்சபட்சமாக இப்போது, ‘நான் மோடிக்காகவே அரசியலுக்கு வந்தேன். அவர் கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் குதிக்கச் சொன்னாலும் அதற்குத் தயாராக இருக்கிறேன்’’ என்று கூறினார். இதையடுத்து தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு கட்சிப் பதவியில் இருந்தால் போதும் என்ற முடிவுக்கு அண்ணாமலை […]
தனி ஒருவனாக செங்கோட்டையன்… கட்டம் கட்டுவாரா எடப்பாடி பழனிசாமி..?

மாஜி அமைச்சர் செங்கோட்டையன் மத்திய பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எடப்பாடி பழனிசாமி அமைதியாக இருந்தார். ஆனால், இன்று எடப்பாடி பழனிசாமியை மதிக்காமல் தனி ஒருவனாக சட்டசபையில் நின்று பேசிய விவகாரம் அ.தி.மு.க.வினரை அதிர வைத்துள்ளது. தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இதற்கிடையில் உறுப்பினர்களின் கேள்விக்கு […]
யாரு அந்த தியாகி..? சட்டமன்றத்தில் இபிஎஸ் அதிரடி

தமிழகத்தில் சட்டமன்றம் களை கட்டிவருகிறது. தினம் ஒரு மோதல், தினம் ஒரு அறிக்கை என்று மக்கள் பிரச்னைகள் பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று, ‘அந்த தியாகி யார்?’ என்று பேட்ஜ் அணிந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்துக்கு வருகை தந்திருக்கிறார்கள். அண்ணா யுனிவர்சிட்டியில் மாணவிக்கு நடந்த கொடூரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘யார் அந்த சார்?’ என்று அ.தி.மு.க.வினர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். இது தமிழகம் முழுக்க வைரலானது. இந்த நிலையில் சமீபத்தில் டாஸ்மாக் […]
குடும்பத்தோடு சிக்குகிறார் அமைச்சர் நேரு..? சுற்றி வளைக்கும் அமலாக்கத்துறை

பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழ்நாட்டிற்கு வந்து சென்றதன் தொடர்ச்சியாக இன்று அமலாக்கத்துறை அதிரடி ரெய்டில் இறங்கியிருக்கிறது. அமைச்சர் கே.என்.நேருவின் மகனும், பெரம்பலூர் எம்.பி.யுமான அருண் நேரு, நேருவின் சகோதரர் இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டுவருகின்றனர். தமிழக அமைச்சர்களில் அண்ணாமலைக்கு நெருக்கமானவர் என்று கருதப்படுபவர் நேரு. தமிழ்நாட்டின் நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சராகவும் தி.முக.வின் முக்கியப் புள்ளியாகவும் இருப்பவர். கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் டி.வி.ஹெச் என்ற கட்டுமான நிறுவனத்தை […]
நூலகம் சர்ச்சையில் சீமான்..? நிர்மலா சீதாராமனுடன் ரகசிய சந்திப்பு?

சென்னையில் அண்ணா நூலகம், மதுரையில் கலைஞர் நூலகம் அடுத்து திருச்சியில் காமராஜர் நூலகம் என்று பிரமாண்டமாக நூலகம் அமைத்துவரும் தமிழக அரசு மீது சீமானும் சாட்டை துரைமுருகனும் வீசிவரும் அவதூறுகள் கடுமையான சர்ச்சைக்கு ஆளாகியுள்ளன. இந்த நூலகங்கள் குறித்து சீமான், ‘’இப்ப யாரு புத்தகம் படிக்கிறா… நூலகத்துக்கு காதலிக்கிறவங்க மட்டும் தான் வருகிறார்கள்’’ என்று அபாண்டமாகப் பேசியிருந்தார். அதேபோல் சாட்டை துரைமுருகனும், ‘’இன்னைக்கு நாம எந்த படத்துக்குப் போகலாம்னு பேசுறதுக்குத்தான் நூலகத்துக்கு வருகிறார்கள்’’ என்று குற்றம் சுமத்தி […]
விஜயகாந்த்துக்கு அலகு குத்தி… காவடி எடுத்து..? என்ன காமெடி பிரேமலதா இது..?

தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று கட்சிக்கு பேர் வைத்துக்கொண்டு, பிரேமலதா செய்யும் காரியங்கள் பயங்கரமாக இருக்கின்றன. விஜயகாந்த் மரணத்துக்குப் பிறகு, அவரது கட்சி அலுவலகத்தை கேப்டன் ஆலயம் என்று பெயர் மாற்றினார். இதையடுத்து நாள் தோறும் அங்கு வரும் மக்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த நிலையில், கேப்டன் ஆலயத்தில் விஜய்காந்த் பக்தர்கள் அலகு குத்தி காவடி எடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்தினார்கள் என்று பிரேமலதா இன்று பதிவு போட்டிருக்கிறார்கள். விஜயகாந்த்தை கடவுளாக […]

