News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழகத்தில் கூட்டணி அரசு இல்லை… அமித்ஷாவுக்கு எடப்பாடி பழனிசாமி நெத்தியடி

தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷா பேசிய நேரத்தில் எடப்பாடி பழனிசாமி எதுவும் பேசவில்லை. அமைதி காத்தார். இந்த நிலையில், தமிழகத்தில் கூட்டணி அரசு கிடையாது. கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றே அமித்ஷா பேசினார் என்று எடப்பாடி பழனிசாமி பேசியதை அடுத்து பா.ஜ.க.வினர் உஷ்ணத்தில் பொங்குகிறார்கள். இன்று சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் ஸ்டாலின் வேண்டுமென்றே சுயாட்சி பிரச்னை எழுப்புவதாகக் குறிப்பிட்டார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி, […]

காளியம்மாள் வழியில் சாட்டை துரைமுருகனுக்கு டாட்டா? சீமான் கொந்தளிப்பு ரகசியம்

நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் வழியில் சாட்டை துரைமுருகன் வெளியேற்றப்பட்டிருக்கும் விவகராம் தம்பிகளிடம் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. காளியம்மாள் வெளியேறிய நேரத்தில், ‘’நாம் தமிழர் கட்சி என்பது ஒரு சனநாயக கட்சி.. விரும்பியவர்கள் இணைந்து செயல்ப்படலாம். விருப்பம் இல்லாதவர்கள் விலகி செல்லலாம்.. சென்றவர் போக நின்றவர் முன்னேறுக.’’ என்றார் சீமான். கட்சியில் தனக்குப் போட்டியாக யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே சாட்டைக்கும் சீமான் டாட்டா காட்டிவிட்டார் என்றே சொல்லப்படுகிறது. கட்சியில் காளியம்மாளுக்கு ஆதரவு பெருகியதும் அவரை பிசிறு […]

சீமானுக்கு வேலை வந்தாச்சு. ஜாட் சினிமாவுக்குப் போராட்டம்

சட்டமன்றத்தில் திமுக நாள் தோறும் ஏதேனும் பரபரப்பைக் கிளப்புகிறது. பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்ததில் அ.தி.மு.க. விவகாரமும் தினமும் அலசப்படுகிறது. விஜய் வெளியே வந்தாலும் வராவிட்டாலும் அது செய்தியாக வருகிறது. இந்த நிலையில் மூச்சு காட்டாமல் இருந்த நாம் தமிழர் கட்சியினர் இப்போது ஒன்று சேர்ந்து ஜாட் திரைப்படத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன் போராடவும் தயாராக உள்ளனர். சமீபத்தில் திரைக்கு வந்த “ஜாட்” திரைப்படத்தில் தமிழீழ மக்களுக்காக போராடிய உன்னத இயக்கமான விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்துவது போல் காட்சிகள் […]

மோடிக்கு சவால் விடும் ஸ்டாலின் மாநில சுயாட்சி… உரிமையைக் காக்க புதிய குழு

அண்ணா காலத்தில் தனி நாடு கோரிக்கையும் கருணாநிதி காலத்தில் மாநியசுயாட்சி உரிமைப் போராட்டமும் நடைபெற்றன என்றாலும் மத்திய அரசு பெரிதாக கண்டுகொண்டதில்லை.இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை முதல்வர்ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்திருக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நான்கு நாட்கள்விடுமுறைக்குப் பிறகு இன்று கூடும் நிலையில், மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு சவால்விடும் வகையில் மாநில சுயாட்சி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்திருக்கிறார்.இதுகுறித்து கடந்த 25ம் தேதி […]

ராமதாஸ்க்கு டெல்லி எச்சரிக்கை..? அன்புமணி சமாதானத்துக்கு வந்த சைதை துரைசாமி

அன்புமணி இல்லாமல் தனியே அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடி பதிவு வெளியிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ். இந்த நிலையில் டெல்லி பா.ஜ.க.வின் எச்சரிக்கையை ராமதாஸிடம் தெரிவிக்கவே சைதை துரைசாமி சந்திப்பு நடந்ததாக சொல்லப்படுகிறது. அமித்ஷா முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவரையும் மேடையேற்றி கூட்டணி அறிவிப்பு வெளியிடுவதே திட்டமாக இருந்தது. ஆனால், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பது டாக்டர் ராமதாஸ்க்கு உடன்பாடு இல்லை. ஆகவே, அன்புமணியின் பதவியைப் பறித்தார். இதையடுத்து பா.ம.க. பொதுக்குழுவை கூட்டுவது குறித்து முக்கிய […]

இமயமலையில் அண்ணாமலை… டம்மி பதவி குடுத்து கழட்டிவிட்டாச்சு.

தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் பதவி ஏற்றதும், அண்ணாமலையிடம் செருப்பைக் கொடுத்து போடுமாறு அன்புக்கட்டளை போட்டார். வேறு வழியின்றி அண்ணாமலையும் அதை அணிந்துகொண்டு தமிழ்நாட்டை விட்டு எஸ்கேப் ஆனார். இமயமலைக்குப் போயிருக்கும் அண்ணாமலை அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறிவருகிறார். இந்த நிலையில் அண்ணாமலை தன்னுடைய ஆதரவாளர்களுக்கு ஒரு பதிவு போட்டார். அதில், ‘’என்னைப் போன்று சகோதர சகோதரிகள் பலரும், காலணி அணியாமல் விரதத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.  நான் மாநிலத்தலைவரின் அன்பு அறிவுறுத்தலை ஏற்று, […]

சீமானுக்கு நயினார் மாமா என்றால், அமித்ஷாவுக்கு என்ன உறவு..? குழப்பத்தில் தம்பிகள்

முருகப்பெருமானை முப்பாட்டன் என்று கூறிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், அவருக்கு நெருக்கமான கட்சிப் பிரமுகர்கலை எல்லாம் உறவு சொல்லி அழைப்பதே வழக்கம். அந்த வகையில் புதிய தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனை மாமா என்று வாய்நிறையக் கூப்பிட்டிருப்பது நாம் தமிழர் தம்பிகளை தத்தளிக்க வைத்திருக்கிறது. நாம் தமிழர் சீமான், ‘’பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்பிற்குரிய மாமா நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்’’ என்று கூறியிருக்கிறார். எதிர்க் […]

நான்தாண்டா தலைவர்… ராமதாஸை மிரட்டும் அன்புமணி…. பா.ம.க. உடையுமா..?

கூட்டணி விவகாரத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு, நானே தலைவர் என்று அறிவித்தார் டாக்டர் ராமதாஸ். இந்த விவகாரத்தில் சமாதானம் பேச விரும்பிய நிர்வாகிகள் யாரையும் ராமதாஸ் சந்திக்க விரும்பவில்லை. இந்த நிலையில் இன்று அறிக்கை வெளியிட்டு அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார் அன்புமணி. அவரது அறிக்கையில், ‘’பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி குறித்து எதிர்பாராத  குழப்பங்கள் நிலவி வருகின்றன. அதன் காரணமாக, கட்சி வளர்ச்சிக்கும், மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு […]

செருப்பை போட்டுட்டுப் போய்க்கிட்டே இரு… முதல் நாளிலே அண்ணாமலையை சம்பவம் செய்த நயினார் நாகேந்திரன்

அண்ணாமலை இல்லைன்னா தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு எதிர்காலமே இல்லை என்று ஒரு கும்பல் சத்தமாக முழங்கிவந்தனர். அண்ணாமலையை மாத்துவதற்கு மோடியாலே முடியாது என்றும் சவுண்டு கொடுத்தார்கள். ஆனால், எடப்பாடி வேண்டும் என்றால் அண்ணாமலையை வெளியேற்ற வேண்டும் என்ற நிலை பா.ஜக.வுக்கு வந்தது. அண்ணாமலையை விட எடப்பாடியே முக்கியம் என்று பா.ஜ.க. முடிவு செய்து அறிவித்தும் விட்டது. இந்த நிலையில் இனி பழைய பா.ஜ.க. தலைவர் என்ற பந்தாவை எந்த விதத்திலும் அண்ணாமலை காட்டக் கூடாது என்பதை நேரடியாகவே சொல்லும் […]

ஜெய் ஸ்ரீராம் சிக்கலில் ஆளுநர் ஆர்.என்.ரவி..? காப்பாற்றுவாரா மோடி..?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செய்த அடாவடிக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்தது மட்டுமின்றி, அனைத்து ஆளுநர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் மசோதா மீது முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அனைவரும் குரல் எழுப்பிவரும் நிலையில், கல்லூரி மாணவர்களை ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்ப வைத்து மீண்டும் ஒரு சிக்கலில் மாட்டியிருக்கிறார். இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதால் அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் எவ்விதமான மதம் குறித்தும் பேசக்கூடாது. இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற தனியார் கல்லூரி […]