பஹல்காம் தீவிரவாதிகள் அடையாளம் கண்டுபிடிப்பு… கோட்டை விட்ட அமித்ஷா பதவி விலகுவாரா..?

ஜம்மு காஷ்மீர், பஹல்காமில் ராணுவ வீரர்கள் போல உடை அணிந்து வந்த 4 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 28 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கூட்டணிக் கட்சிகளை மிரட்டவும், விரட்டவும் அமித்ஷா கவனம் செலுத்தியதால் இப்படிப்பட்ட கொடூர தாக்குதல் நடந்துள்ளது, அவர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் அனந்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப் பகுதியில் உல்லாசமாக இருந்த சுற்றுலாப் பயணிகளை ராணுவ உடையில் […]
பழனிவேல் தியாகராஜனின் டம்மி பதவிக்கும் ஆபத்து… எப்போது ராஜினாமா..?

அதிகார பலத்துடன் வலம் வந்த பிடி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஒரு ஆடியோ விவகாரத்தினால் அந்த பதவியை இழந்துவிட்டார். இதையடுத்து டம்மியாக ஐ.டி. மினிஸ்டர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த டம்மி பதவிக்கும் ஆபத்து வந்திருக்கிறது. சட்டமன்றத்தில் தன்னுடைய கூடலூர் தொகுக்கு டைடல் பார்க் அமைத்துத் தர வேண்டும் என்று அ.தி.முக. சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன் ஒரு கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த பிடிஆர். பழனிவேல் ராஜன், ‘’யாரிடம் நிதியும், திறனும்,அதிகாரமும் இருக்கிறதோ அவரிடம் கேளுங்கள்” என்று […]
எடப்பாடி பழனிசாமியிடம் சரண்டரான நயினார்… இனி இரட்டைக் குழல் துப்பாக்கி..?

கூட்டணிக் கட்சிகளாக மாறிய பிறகும் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இணைந்து செயல்படவில்லை. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் நயினார் நாகேந்திரன். தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமியை அவரது அறையில், நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார். அவருடன் காந்தி எம்.எல்.ஏ. மட்டும் கலந்துகொண்டார். சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அறையில் நடந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியுடன் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு, […]
திருமாவுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன ஸ்டாலின்… ராமதாஸ் திட்டங்கள் தவிடுபொடி

டாக்டர் ராமதாஸ்க்கும் அன்புமணிக்கும் இடையிலான லடாயை ஒட்டி பல்வேறு யூகங்கள் வெளியாகின. திமுக அல்லது அதிமுகவுடன் ராமதாஸ் கூட்டணி வைப்பதற்கு விரும்புகிறார் என்றே சொல்லப்பட்டது. பா.ஜ.க. மூலம் அ.தி.மு.க. கூட்டணியில் இணைவதை விட, நேரடியாக கூட்டணி வைப்பது அல்லது தி.மு.க. கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவந்தால், இதன் மூலம் பா.ம.க.வுக்கு டிமாண்ட் அதிகரிக்கும் என்றும் அதற்காகவே இந்த நாடகம் என்றும் கூறப்பட்டு வந்தது. இதையடுத்தே திருமாவளவனுக்கு தி.மு.க. கூட்டணியில் இடம் இல்லை என்றும் யூகங்கள் கிளம்பின. […]
வைகோவுக்குத் தெரியாமல் துரை வைகோ ராஜினாமா..? மல்லை சத்யா வெளியேற்றப்படுவாரா..?

தலைவர் வைகோவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் கட்சியில் மறைமுகமாக ஒருவர் ஈடுபடுகிறார். எனவே கட்சிப் பதவியில் இருந்து வெளியேறுகிறேன் என்று துரை வைகோ எம்.பி. திடீரென அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த தகவல் எனக்குத் தெரியாது என்று வைகோ அதிர்ச்சி அடைந்திருக்கும் நிலையில், மல்லை சத்யாவின் உள்குத்துவே காரணம் என்று சொல்லப்படுகிறது. இன்றைய அறிக்கையில் துரை வைகோ, ’’அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருந்தவன் நான் என்பதை அனைவரும் அறிவர். 2018 ஆம் ஆண்டு […]
பெருசா தப்பு செஞ்சிட்டாரு விஜய்… சொன்னது யாரு தெரியுமா..?

தி.மு.க.வை அகற்ற வேண்டும் என்றால் விஜய் நேரடியாக எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டு சேர்ந்திருக்க வேண்டும், இதில் விஜய் பெரிய தப்பு செய்து கோட்டை விட்டுவிட்டார் என்று பழம்பெரும் அரசியல்வாதியின் கருத்தை மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ பதிவு செய்து வரவேற்பு கொடுத்திருக்கிறார். பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்தது தவறு என்று சிலர் கருத்து கூறிவரும் நிலையில் மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ தமிழகத்தில் தேர்தல் கூட்டணி என்பது என்ன என்பது பற்றிய தலைசிறந்த அரசியல்வாதி பழ கருப்பையா […]
எடப்பாடி பழனிசாமிக்கு சலாம் போடும் நயினார் நாகேந்திரன். அமித்ஷாவுக்கு அவமானம்..?

வருங்கால முதல்வர் நயினார் நாகேந்திரன் என்று அச்சடிக்கப்பட்ட போஸ்டர்கள் அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் எடப்பாடி பழனிசாமிதான் முதல் அமைச்சர் என்று நயினார் நாகேந்திரன் கூறியிருக்கும் விவகாரம் பா.ஜ.க.வினரை அவேசப்படுத்தியிருக்கிறது. தமிழக பாஜவுக்கு புதிய தலைவராகி இருக்கும் நயினார் நாகேந்திரனை, ‘வருங்கால முதல்வரே’ என குறிப்பிட்டு, வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தன. இந்த விஷயம் எடப்பாடி பழனிசாமி தரப்பினரை எரிச்சலூட்டியது. இந்த நிலையில் நயினார் நாகேந்திரன், ‘’நாம் வெளிப்படுத்தும் விளம்பர வாசகங்கள் நம் கட்சியையும், கூட்டணியும் பலப்படுத்த […]
விஜய்க்கு திடீர் எதிர்ப்பு..? இஸ்லாம் வாக்குகளுக்கு ஆபத்து

சிறுபான்மையினர் வாக்குகள் இதுவரை திமுகவுக்கு மட்டுமே சென்றன. இந்த முறை கிறிஸ்தவர் என்பதாலும் இஸ்லாமிய ஆதரவாளர் என்பதால் சிறுபான்மையினர் வாக்குகள் அப்படியே விஜய்க்குக் கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் பேசிவருகிறார்கள். இந்நிலையில், விஜய்யை இஸ்லாமிய நிகழ்ச்சிகளுக்கு அழைக்கக்கூடாது என்று இஸ்லாமிய அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிவிப்பு அவரது ஓட்டு வங்கிக்கு ஆபத்தாக மாறுகிறது. இஸ்லாமிய மதகுரு மௌலானா ஷாபுதீன் ரஸ்வி வெளியிட்டிருக்கும் கடிதத்தில், ’தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் விஜய்யிடமிருந்து விலகி இருக்கவும், அவரது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருக்கவும், […]
எடப்பாடி பழனிசாமிக்கு நயினார் சப்போர்ட்..? ஆத்திரத்தில் அண்ணாமலை ஆர்மி

பா.ஜ.க.வுடன் கூட்டணி உள்ளது. ஆனால், கூட்டணி அரசு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில், பா.ஜ.க. ஏரியாவில் பெரும் பதட்டம் நிலவியது. அமித்ஷா பேச்சை அவமானப்படுத்துகிறார், இந்த நேரம் அண்ணாமலை தலைவராக இருந்தால் எடப்பாடி பழனிசாமியை லெஃப்ட் ரைட் வாங்கியிருப்பார் என்று கொந்தளித்தார்கள். இந்நிலையில் புதிய பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் என்ன சொல்லப்போகிறார் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இது குறித்து பேசியிருக்கும் நயினார் நாகேந்திரன், ‘கூட்டணி குறித்து முடிவெடுத்தது எங்களது அகில இந்திய […]
பா.ம.க. முழு நிலவு மாநாட்டில் ராமதாஸ்க்கு ஓய்வு..? அன்புமணி பிளான் எடுபடுமா?

பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் தன்னை அவமானப்படுத்திய தந்தையும் பா.ம.க. நிறுவனருமான டாக்டர் ராமதாஸை நடக்கையிருக்கும் முழு நிலவு மாநாட்டில் வலுக்கட்டாயமாக ஓய்வுக்கு அனுப்புவதற்கு அன்புமணி திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. பாமகவுக்குள் உட்கட்சி மோதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராமதாஸும் அன்புமணியும் தனித்தனியே ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள். இந்நிலையில் மே 11ம் தேதி மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் நடைபெற உள்ள முழுநிலவு மாநாட்டுக்கான பந்தல் கால் புஜை இன்று காலை நடைபெற்றது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜிகே […]

