போருக்காக மாநாட்டை தள்ளிப் போடுவாரா அன்புமணி..? கட்சிக்குள் கலகம்

பாமக சார்பில் நாளை அதாவது ஞாயிர்றுக்கிழமை மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது. போர் நடக்கும் சூழலில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் அன்புமணி இந்த நிகழ்ச்சியை தள்ளிப் போடுவதில் பிடிவாதம் காட்டுவது அவரது கட்சிக்குள்ளே கலகம் உண்டாகியுள்ளது. பா.ம.க. மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் சென்னை – திருச்சி சாலை […]
பாகிஸ்தானுக்கு உதவும் வளைகுடா நாடுகள்… முழு போர் வெடிக்குமா..?

காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானுக்கு துருக்கி நாடு தொடர்ந்து ஆதரவு அளித்துவருகிறது. இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு துருக்கியின் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வருகின்றன. மேலும் பல வளைகுடா நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக களம் இறங்குமா, இது முழு போராக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் நியூயார்க் டைம்ஸிற்கு கொடுத்த பேட்டியில், ‘’ஏற்கனவே இந்தியாவின் 5 விமானங்களை வீழ்த்தி விட்டோம். 2 ட்ரோன்களை வீழ்த்தி விட்டோம். இத்துடன் மோதலை நிறுத்தி கொள்ள […]
வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் விமானம்… விமானி கைது. அடேங்கப்பா ஆயுதங்கள் பட்டியல்

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து ஒன்பது பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதற்கு பதிலடி கொடுப்பதற்குத் திட்டமிட்ட பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தப்பட்டு, விமானி கைது செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து போர் தீவிரம் அடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலுக்கு பதிலடியாக தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையில் 9 இடங்களில் இருந்த 21 […]
+ 2 தேர்வு முடிவுகள் வெளியீடு. கூல் மாணவர்களே கூல்…

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகப் பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதையடுத்து மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி நிறைவு பெற்றதை அடுத்து இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் நிறைவு பெற்றன. இந்நிலையில் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் அதன் இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அதன்படி, மொத்தம் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2023 […]
பாட்டாளிகள் ரகளை செய்யப்போறாங்களா..? பொதுமக்களுக்கு அன்புமணி எச்சரிக்கை

சென்னை அருகே மாமல்லபுரத்தில் வரும் 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பாமக சார்பில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, இந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று அன்புமணி எச்சரிக்கை செய்திருப்பது மக்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. சித்திரை முழு நிலவு மாநாட்டை ஒட்டி அன்புமணி ராமதாசை முன்னிலைப்படுத்தும் வகையில் இருந்த பாடலும், அடுத்ததாக அய்யா என்று சொல்லும் போதே ஆயிரம் கோடி மகிழ்ச்சியடா என்ற பாடலும் பெரும் சர்ச்சையை உருவாக்கின. இந்த […]
மோடி தாக்குதலுக்கு இந்தியா முழுக்க ஆதரவு… பணியுமா பாகிஸ்தான்..?

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (போக்) பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து பிரதமர் மோடி ஏற்கொண்ட ஆபரேஷன் சிந்தூரை இந்தியாவில் உள்ள அத்தனை தலைவர்களும் வரவேற்றுள்ளனர். நடப்பது தீவிரவாதம் அல்ல இந்திய ராணுவத்தின் தீவிரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்பதால் ஒட்டுமொத்த இந்தியர்களும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். இந்த தாக்குதல் குறித்துப் பேசிய ஜம்மு-காஷ்மீரின் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, “பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலிருந்து கிராமவாசிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும், தங்குமிடம், உணவு, மருத்துவ பராமரிப்பு மற்றும் போக்குவரத்தை உறுதி […]
ஆபரேஷன் சிந்தூர்… மோடியின் செம ஷார்ப் தாக்குதல்

இந்த ஏவுகணை தாக்குதலை இந்திய ராணுவம் எந்த சிரமமும் இன்றி செய்து முடித்திருக்கிறது. பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும்என்று பிரதமர் மோடி அறிவிப்பு செய்திருந்தார். இந்தியா முழுக்க நேற்று போருக்கான ஒத்திகைபார்க்கப்பட்ட நிலையில், நள்ளிரவு 1.44 மணியளவில் பாகிஸ்தான் மண்ணில், ‘ஆபரேஷன் சிந்தூர்’என்ற பெயரில் தாக்குதல் நடத்தியிருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களைக்குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தானில் 9 பேர் உயிரிழந்ததாகவும், 12 பேர்படுகாயம் அடைந்ததாகவும், இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலில் […]
சீமான் காவலாளி பாணியில் விஜய் பவுன்சர் கைது..? துப்பாக்கி சர்ச்சை

மதுரையில் நடிகர் விஜய்யை சந்திக்க முயன்ற இன்பராஜ் என்பவரை தடுத்து நிறுத்திய விஜயின் பாதுகாப்பினர், அவரது தலையில் துப்பாக்கியை வைத்த சம்பவம் வைரலாக மாறியிருக்கிறது. பொது இடத்தில் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்துவது குற்றம் என்பதால் விஜய் பவுன்சர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சீமான் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய விவகாரத்தில் காவலாளி கைது செய்யப்பட்டு பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அதே பாணியில் எந்த நேரமும் விஜய்யின் பவுன்சர் கைது செய்யப்படுவார் என்று தெரியவந்துள்ளது. ஏனென்றால் துப்பாக்கி […]
அமலாக்கத்துறை சீரியஸ் ரெய்டு… சிக்கலில் தி.மு.க. பிளாக்ஷிப்

டாஸ்மாக் தலைமையகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை ரெய்டு சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குப் போட்டிருக்கிறது. அதனால், இந்த பிரச்னை முடிவுக்கு வரும் வரையில் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறாது என்றே கருதப்பட்டது. இதை பொய்யாக்கும் வகையில் இன்று காலைசென்னை, விருகம்பாக்கம், சாலிகிராமம், தி.நகர், அசோக் நகர் உள்ள 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திமுகவுக்காக பிளாக்ஷிப் நிறுவனம் கையகப்படுத்தப்பட்ட நேரத்தில், பணப்பரிமாற்றத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை குறிவைத்து இந்த சோதனை […]
ராஜ்யசபா சீட், விஜய் கூட்டணி..? விஜயகாந்த் கட்சியின் தேர்தல் தூண்டில்

வரும் 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணிக் கடசிகள் சிந்தாமல் சிதறாமல் இருக்கும் நேரத்தில் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் உறவு வைத்துள்ளன. இப்போது பா.ம.க.வும் தே.மு.தி.க.வும் அடுத்தகட்ட நகர்வு குறித்து குழப்பத்தில் உள்ளன. இந்நிலையில் மீண்டும் ராஜ்யசபா சீட் விவகாரத்தை எழுப்பி பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார் தே.மு.தி.க.வின் பொருளாளர் சுதீஷ். அவர் கொடுதிருக்கும் ஒரு பேட்டியில், ‘’2024 மக்களவைத் தேர்தல் வரைக்கும் அவர்களோடு கூட்டணியில் இருந்திருக்கிறோம். 2024 மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியை விட்டு அதிமுக விலகினாலும் நாங்கள் அதிமுக […]

