டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு! நாளை அண்ணாமலை ஆஜராவாரா?

டி.ஆர்.பாலு எம்.பி. தொடர்ந்து அவதூறு வழக்கில் நாளை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க. எம்.பி.யான டி.ஆர்.பாலுவின் பெயர் கடந்த ஏப்ரல் 14ம் தேதி அண்ணாமலை வெளியிட்ட தி.மு.க.வினரின் சொத்துப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அந்த பட்டியலில் டி.ஆர்.பாலுவின் பெயரை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் அவர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததாக அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இதனால் அதிர்ச்சியான டி.ஆர்.பாலு, அண்ணாமலை மீது சென்னை சைதாப்பேட்டை பெருநகர 17வது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு […]
உலகக்கோப்பை 2023: சச்சின் டெண்டுல்கருக்கு கிடைத்த கவுரவம்!

கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரை கவுரவப்படுத்தும் நோக்கில் அவரை உலகக்கோப்பை தொடரின் உலகளாவிய தூதராக நியமித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். கிரிக்கெட் என்றால் சச்சின் டெண்டுல்கர். சச்சின் டெண்டுல்கர் என்றால் கிரிக்கெட் என்று சொல்பவர்களும், சச்சினை பார்த்துதான் கிரிக்கெட்டுக்கே வந்தேன் என்று பல கிரிக்கெட் வீரர்கள் சொல்வதும் நாம் பார்த்ததே. அந்த வகையில் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவப்படுத்தியுள்ளது. 2023 உலகக்கோப்பை தொடர் நாளை (அக்.5) முதல் நவம்பர் மாதம் 19ம் […]
கேரளாவில் தொடங்கிய ‘தலைவர் 170’ படப்பிடிப்பு! பிசியான ரஜினிகாந்த்!

ரஜினிகாந்தின் 170வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதற்கு அடுத்ததாக ‘தலைவர் 170’ திரைப்படத்தில் தற்போது பிசியாகி உள்ளார். இத்திரைப்படத்தை ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல் டைரக்ட் செய்கிறார். மேலும் இப்படத்தில் நடிகர்கள் அமிதாப்பச்சன், பகத்பாசில், ராணா ரகுபதி, நடிகைகள் மஞ்சுவாரியர், ரித்திகாசிங், துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்க […]
இந்தியா- இலங்கை திடீர் ஒப்பந்தம்! என்னவென்று தெரியுமா?

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, இந்தியாவுடன் மருந்து இறக்குமதிக்காக புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு இலங்கை அரசு மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. அங்குள்ள பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டனர். ஒரு பக்கம் வேலையில்லா திண்டாட்டம் மற்றொரு பக்கம் மருந்து, அரிசி, பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் என சொல்ல முடியாத துக்கத்தில் தவித்து வந்தனர். அதை தவிர்க்க இந்தியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு […]
மத்திய அமைச்சரை சந்தித்தால் கூட்டணி என்று அர்த்தமா? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

பா.ஜ.க. உடனான கூட்டணி முறிவு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மத்திய அமைச்சரை சந்தித்து பேசினால் கூட்டணியை பற்றி பேசினோம் என்று அர்த்தமாகிவிடுமா என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, ‘‘பாரதிய ஜனதா கட்சியுடன் இனி கூட்டணி கிடையாது என்பதை தெளிவாக கூறிவிட்டேன். இதில் எந்த மாற்றமும் இல்லை. இது 2 கோடி தொண்டர்களின் முடிவு […]
கேம் கேரக்டராக மாறிய சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!

ஆன்லைனில் தொடர்ந்து கேம் விளையாடி வந்த 17 வயது சிறுவன், அதில் வரும் கேரக்டராக தன்னை நினைத்துக் கொண்டதன் விளைவாக மனநலம் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணத்தைச் சேர்ந்த நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளான். சிறுவன் தன்னுடைய செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த நிலையில், அதற்கு முற்றிலும் அடிமையானதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக இரவு நேரத்தில் உறங்காமல் தொடர்ந்து […]
நிர்வாண படத்தில் நடித்தேனா? அமைச்சர் ரோஜா கண்ணீர் வீடியோ வைரல்!

நிர்வாண படத்தில் நான் நடித்தேன் என்றும் நான் கெட்டவள் என்றும் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னனள் அமைச்சர் அவதூறு பரப்புகிறார் என்று நடிகையும் அமைச்சருமான ரோஜா கண்ணீர் மல்க பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்திய நாராயணமூர்த்திக்கும் அமைச்சர் ரோஜாவுக்கும் இடையிலான போர் எப்போது முடியும் என்று தெரியவில்லை. இவர்களின் சண்டையால் ஆந்திராவில் பரபரப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சியின் […]
மேற்கூரை இடிந்த விவகாரம்: பெட்ரோல் பங்க் உரிமையாளர் நீதிமன்றத்தில் சரண்!

பெட்ரோல் பங்க் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியான விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த 29ம் தேதி பெய்த கனமழையின் போது சைதப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில் பலர் மழைக்காக ஒதுங்கி நின்று கொண்டிருந்தனர். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பெட்ரோல் பங்க் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அதன் அடியில் நின்று கொண்டிருந்த […]
ஆவின் பால் முகவர்கள் குமுறல்! தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

தமிழகத்தில் ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிக விலைகொடுத்து தனியார் நிறுவனங்களின் பால் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ள ஆவின் பால் நிறுவனம் நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் கிடைத்து வருகிறது. நீலம், பச்சை, ஆரஞ்சு என கிடைத்து வரும் பால் பிஞ்சு குழந்தைகளின் சத்துணவாகவும், தாய்ப்பாலுக்கு நிகராகவும் கருதப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆவின் பால் விநியோகம் 50 சதவீதத்துக்கு மேல் திட்டமிடப்பட்டு குறைக்கப்பட்டு வருகிறது. […]
மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி! முதலமைச்சர் நிதி உதவி அறிவிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டம், ஆற்றூர் கிராமம் தோப்புவிளையைச் சேர்ந்தவர்கள் டெம்போ டிரைவர் சோம்ராஜ். இவர் தனது மனைவி சித்ரா மற்றும் மகள் ஆதிரா, மகன் அஸ்வின் ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் சித்ரா, ஆதிரா, அஸ்வின் ஆகியோர் நேற்று அவர்களது வீட்டில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் […]

