News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம்- மத்திய சட்ட ஆணையம் ஆதரவு!

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த அறிக்கை மத்திய அரசிடம் சட்ட ஆணையம் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக நம்பத்தகுந்த அரசியல் வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. பிரதமர் மோடியின் கனவுத்திட்டம் என்று சொல்லும் அளவுக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பல்வேறு தரப்பினர் மத்தியில் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. மேலும் தேர்தல் ஆணையம் மற்றும் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகள் கேட்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அதன்படி நாடாளுமன்ற மக்களவையுடன் சேர்த்து […]

பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்!

பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக இன்று சென்னையில் காலமானார். பசுமைப்புரட்சியின் தந்தை என்று அனைவராலும் பெருமையுடன் அழைக்கப்பட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் தனது 98 வயதில் வயது மூப்பு காரணமாக இன்று காலை 11.20 மணியளவில் சென்னையில் காலமானார். கடந்த 1960ம் ஆண்டு இந்தியாவில் பசுமைப் புரட்சி தொடங்கிய காலகட்டத்தில், பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்திய பெருமை எம்.எஸ்.சுவாமிநாதனையே சேரும். விவசாயத்தை உயர்த்தி அரிசி தட்டுப்பாட்டை நீக்க, அதிநவீன அறிவியல் முறைகளை […]

இப்படியும் ஒரு புகைப்பட கலைஞரா? விருதுநகரில் வினோதம்!

விருதுநகரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞருக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொல்லியல் தளங்கள் மற்றும் இதுவரை யாரும் அறிந்திடாத சுற்றுலாத் தலங்களை புகைப்படம் எடுத்து அனுப்ப மாபெரும் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பல்வேறு புகைப்படக் கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிக்கொணர்ந்து தங்கள் படைப்புகளை போட்டிக்காக சமர்ப்பித்தனர். அந்த வகையில் போட்டியின் முடிவுகள் இன்று வெளியான நிலையில், புகைப்பட கலைஞர் முத்துராஜ் என்பவர் மூன்றாம் பரிசு பெற்றார். அவருக்கு பரிசுத்தொகையாக […]

டெங்கு பரவல் எதிரொலி! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை முன்னிட்டும், இந்தியா முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வலியுறுத்தியுள்ளது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால் சிறப்பு மருத்துவ முகாம்கள்  மற்றும் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு […]

சென்னை தி.நகர் சாலையில் திடீர் பள்ளம்! திகைத்துப் போன வாகன ஓட்டிகள்!

சென்னை தியாகராயநகரில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதைக் கண்ட பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் திகைத்துப்போய் நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை மற்றும் புறநகர்களில் நாள்தோறும் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி ஆங்காங்கே சிறிய அளவிலான பள்ளம் ஏற்படுகிறது. மேலும் பருவமழையை எதிர்கொள்ள சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் வேகமெடுத்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் தியாகராயநகரில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. தியாகராயநகரில் உள்ள முக்கிய […]

விபத்தில் உயிரிழந்த ரசிகர்! குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் சொன்ன சூர்யா!

விபத்தில் சிக்கி உயிரிழந்த ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்ற நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்திவிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். நடிகர் சூர்யாவுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு என்றுதான் சொல்ல வேண்டும். படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 24ம் தேதி எண்ணூரைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக […]

2வது நாளாக தொடரும் ஐ.டி. ரெய்டு! பரபரப்பான சென்னை, புதுச்சேரி!

செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு தொடர்பாக இடங்களில் இன்று 2வது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், முக்கிய இடங்களிலும் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று (செப்.27) சென்னை ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் ப்ளெக்ஸ் இந்தியா செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு தொடர்பாக புகார்கள் வந்த நிலையில் இந்த சோதனை […]

‘லியோ’ பட தயாரிப்பு நிறுவனம் காவல்துறைக்கு திடீர் கடிதம்!

‘லியோ’ திரைப்படத்தின் பட தயாரிப்பு நிறுவனம் காவல்துறைக்கு எழுதியுள்ள திடீர் கடிதம் தமிழ் திரையுலகில் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக தயாராக இருக்கும் திரைப்படம் ‘லியோ’. இத்திரைப்படத்தில் மொத்த நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதால் பான் இந்தியா படமாக பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி திரையிட தயாராக உள்ள நிலையில் இத்திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா வருகிற செப்.30ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் […]

அகில இந்திய வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்! எப்போது தெரியுமா?

அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ஏ.ஐ.பி.இ.ஏ. அறிவித்துள்ளது. வங்கிகளில் அதிக ஊழியர்களை நியமிக்கக் கோரி நேற்று (செப்.27) அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (ஏ.ஐ.பி.இ.ஏ.) நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அந்த அழைப்பில், வருகிற டிசம்பர் மாதம் 4ம் தேதி முதல் 11ம் தேதி வரையில் அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பொது […]

பதற்றம் நிறைந்த மாநிலமாக ‘மணிப்பூர்’ அறிவிப்பு! ஆளுநர் என்ன செய்யப் போகிறார்?

மணிப்பூர் மாநிலத்தை பதற்றம் நிறைந்த மாநிலமாக அம்மாநில உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக வெடித்தது. இதன் தொடர்ச்சியாக வன்முறை வெடித்த  நிலையில் நிலைமை கட்டுக்குள் வராததால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவையும் துண்டித்து வைக்கப்பட்டுள்ளது. பழங்குடியின அந்தஸ்து விவகாரம் தொடர்பாக இரு சமூகத்தினருக்கும் இடையில் கலவரம் மூண்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. […]