கிராம சபைக்கூட்டம்! விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலர் தலைமறைவு!

விவசாயியை எட்டி உதைத்த விவகாரம் தொடர்பாக தலைமறைவாக இருந்து வரும் ஊராட்சி செயலர் தங்பாண்டியனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று (அக்.2) தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் கூடின. அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளையார்குளம் ஊராட்சி கங்காகுளத்திலும் கிராமசபை கூட்டம் கூடியது. சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் தலைமையிலான கிராம சபை கூட்டத்தில் அரசு அதிகாரிகள், ஊரட்சி […]
விக்ரம் லேண்டர் இனி செயல்படாது? விஞ்ஞானிகள் அதிர்ச்சி!

சந்திரயான்-3 மூலம் நிலவுக்கு செலுத்தப்பட்ட விக்ரம் லேண்டர் பனியில் உறைந்து போனதால் மீண்டும் செயல்பாட்டுக்கு வர வாய்ப்புகள் குறைவாக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூலை 14ம் தேதி எல்.வி.எம்.3 ராக்கெட் மூலம் சந்திராயன் 3 விண்கலம் பகல் 2.35 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது கடந்த ஆகஸ்டு மாத்ம 23ம் தேதி மாலை 6.04 மணியளவில் புவி மற்றும் நிலவின் வட்டப்பாதையை கடந்து விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் 40 நாட்கள் பயணத்தை […]
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்! களத்தில் குதித்த அமைச்சர் அன்பில்!

சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உண்ணராவிரத போராட்டத்தை நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களிடம் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் 125 பேர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும் மற்ற இடை நிலை ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு தாங்கள் பட்டினி கிடப்பதாக […]
எஸ்கலேட்டரில் சிக்கி உயிர் தப்பிய மகள்! பிரபல ஷெஃப் அதிர்ச்சி தகவல்!

சென்னையில் இயங்கி வரும் பிரபல மாலின் எஸ்கலேட்டரில் தனது மகள் சிக்கி உயிர் பிழைத்ததாக ஷெப் வெங்கடேஷ் பட் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி வருகிறது. பிரபல சமையல் கலை நிபுணரான ஷெப் வெங்கடேஷ் பட் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக மிகவும் பிரபலமானார். ஆரம்ப காலத்தில் இவர் மிகவும் ரூடானவர் என்று ரசிகர்களால் சொல்லப்பட்டு வந்த நிலையில் சமீப காலமாக மிகவும் நகைச்சுவையாக அந்நிகழ்ச்சியை வழங்கி வருகிறார். […]
கர்நாடகாவில் மிலாது நபி ஊர்வலத்தில் கல்வீச்சு! 40 பேர் கைது!

கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் மிலாது நபி ஊர்வலத்தில் திடீரென்று கல்வீசி தாக்குதல் நடத்திய 40 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அங்கு 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் மிலாது நபியை முன்னிட்டு அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலம் சாந்திநகர் ராகிகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் ஊர்வலத்திற்குள் கற்களைவீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் போர்க்களமான அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. அதைத்தொடர்ந்து […]
எளிமையாக நடந்த ‘விஜய் 68’ படப்பூஜை! நாளை முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!

நடிகர் விஜய்யின் 68வது படத்திற்கான பூஜை நடந்து முடிந்த நிலையில் நாளை முதல் (அக்.3) படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 68வது படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ்மேனன் என மொத்த நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் லியோ வருகிற 19ம் […]
வகுப்பறை மேஜையில் இசைக் கச்சேரி! மாணவர்களுக்கு குவியும் பாராட்டு!

பள்ளி வகுப்பறை மேஜையில் தாளம் போட்டு பாட்டு பாடி வெளியான மாணவர்களின் வீடியோவை கேரள மாநில கல்வித்துறை மந்திரி மனதார பாராட்டியுள்ள சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. பள்ளி மாணவர்கள் பல்வேறு திறமைகளை தங்களுக்குள்ளே மெருகேற்றி வளர்த்துக் கொள்வார்கள். இசை, விளையாட்டு என பல்வேறு திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தும் போது அவர்களை அரவணைத்து, ஊக்கப்படுத்தி அவர்களின் வளர்ச்சிக்கு ஊக்கமாக இருப்பது பள்ளி ஆசிரியர்கள் என்றும் கூட சொல்லலாம். ஆனால் அதெற்கெல்லாம் ஒரு படி மேலே போய் கேரள […]
காந்தி ஜெயந்தி! திருவுருவப் படத்திற்கு புஸ்ஸி ஆனந்த் மலர் தூவி மரியாதை!

மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தியடிகளின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் அவரது திருவுருவ சிலைகளுக்கும், திருவுருவப் படங்களுக்கும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அரசு அருங்காட்சியக […]
‘அயலான்’ டீசர் எப்போது? சிவகார்த்திகேயன் அறிவிப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் அயலான் திரைப்படத்தின் டீசர் எப்போது என்பது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத்சிங் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் திரைப்படம் அயலான். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிகட்ட தொழில்நுட்பப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையின் போது (2024ம் ஆண்டு) திரையிடப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில், அதே நாளில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ […]
கிராமசபை கூட்டத்தில் அனைவரது கருத்தும் முக்கியம்! மு.க.ஸ்டாலின் உறுதி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டங்களை திறந்து வைத்து அனைவரது கருத்தும் முக்கியம் அவை பதிவு செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார். மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள 12,525 கிராமங்களில் கிராமசபை கூட்டஙகள் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்து உரையாற்றினார். அவர் பேசும்போது, ‘‘மக்களாட்சி முதல் மலர்ந்த இடம் கிராமங்கள்தான். திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகுதான் முறையாக […]

